முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கே.பி ஊடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் சதிமுயற்சிகளை முறியடிப்போம் - விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 17
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சனிக்கிழமை, 28 மே 2011 11:48

கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடாத்தி வந்தோம்.

 

எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், இராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

ஐ.நா நிபுணர்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறுபல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர்மீது மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் மகிந்த அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றது.

இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்திற் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் மகிந்த அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற திரு செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டுவருகிறது சிறிலங்கா அரசு.

சிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை;

இனியும் நடக்கப்போவதுமில்லை. அவ்வகையில் திரு. செல்வராசா பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

திரு. செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இச்செவ்வி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.

அன்பான தமிழ்பேசும் உறவுகளே,

சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர சதிவலைக்குள் புதைந்துபோகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

 

ltte1

ltte2

ltte3

ltte4

 

Comments  

 
0 #23 R.Sriram 2011-06-02 17:13
K.P has said so many things. Why is LTTE trying to divert the issue with only Jayalalitha's proposed assassination as the only factor.

Isnt it a fact that LTTE killed the leaders of all other Tamil Groups and fought IPKF thereby removing whatever chance that was there for restoring peace.
Quote
 
 
+1 #22 thamil 2011-06-01 23:00
புலிகள் இன போர் நடத்தினால் மட்டுமே விடுதலை கிடைக்கும்.
Quote
 
 
0 #21 தஞ்சை குணா 2011-05-31 12:51
இப்போது இந்த செய்தியை வெளியிட வேண்டியதன் அவசியம் என்ன?

இதன் உள்ளார்ந்த சூழ்ச்சியை அறிந்துகொள்ள முடியாதவரா முதல்வர்?

இவர்கள் தங்கள் முயற்சியில் தோல்வியே அடைவார்கள்.
Quote
 
 
+5 #20 hari 2011-05-30 18:35
தமிழினி துரோகி கருணாநிதியையே போட்டுத் தள்ளாத விடுதலைப்புலிகள ் தமிழ் ஈழத்தை ஆதரித்த ஜெயலலிதாவையா கொல்ல சதி செய்யப்போகிறார் கள். சிங்கள அரசின் சதி இது!
Quote
 
 
0 #19 auctuskps 2011-05-30 12:40
கருன்காலிகள்,கா ட்டிக்கொடுப்போர ்கள் ஈனப்பிறவிகள் பிணந்தின்னிகள் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்.
Quote
 
 
+3 #18 lali 2011-05-30 11:32
We know everything.We staunch support to dreams of Prabakaran.
Quote
 
 
+5 #17 sivaraman 2011-05-29 11:09
it is nice
Quote
 
 
+16 #16 RAJA123 2011-05-29 02:12
எது பொய் , எது நிஜம் என்பதை அனைவரும் அறிவோம்.கலக்கம் வேண்டாம்.

உண்மை வெல்லும். ஈழ மக்களின் துயர் நீன்கும்.
Quote
 
 
-17 #15 aha 2011-05-29 00:25
yaarume illatha kadaila yaarukkudaa tea athura?
Quote
 
 
+14 #14 Cuddalore Ezhil 2011-05-28 23:44
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
Quote
 
 
-21 #13 DUBUKKU 2011-05-28 20:00
பாவம் சவுக்கு திமு க ஆட்சி மாறினதுல இருந்து வேல வெட்டி இல்லாம இப்டி பிரஸ் ரிலிஸ் லாம் போஸ்ட் பங்கிட்டு இருக்கு .என்ன கொடும சவுக்கு இதெலாம்....??
Quote
 
 
+10 #12 navin 2011-05-28 18:59
தமிழகத்தை கண்டு கொள்ளாத ஆங்கில ஊடகங்கள் இப்போது மட்டும் செய்தி வெளியிடுவதில் இப்படியும் சதி உள்ளது
Quote
 
 
+7 #11 Paul 2011-05-28 15:06
PADMANABAN WAIT & SEE OUR LEADER Mr. Prabhakaran WILL COME SOON AND DESTROY THOSE WHO ARE AGAINST US.

VAALGA TAMIL ILLAM

BY TAMILAN
Quote
 
 
+4 #10 Eswaran 2011-05-28 14:52
இந்த தேவயடியா பையனுக்கு எதுக்கு இந்த வேளை. இப்படி பேட்டிக் கொடுத்து வாழறத விட பூல ஊம்பிட்டு போகலாம்.
Quote
 
 
+12 #9 sakthy 2011-05-28 14:50
இது முற்றிலும் சரியானதும் உண்மையானதுமாகும ். ஜெயலலிதா அவர்கள் தேர்தலின் போதும்,தெர்தலின ் பின்னரும்,பதவி ஏற்பதற்கு முன், வெளியிட்ட அறிக்கைகள் காங்கிரசையும்,ச ிங்களத்தையும் சிறிது சிந்திக்க வைத்ததன் விளைவே, விடுதலைப் புலிகளின் மீதான புதிய குற்றச் சாட்டாகும். ஒரு சமயம் ஜெயலலிதாவின் இந்த அறிக்கைகளின் விளைவாக இந்தியா ஐ.நா. அறிக்கைக்கு அல்லது சிஙளத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடலாம் என்ற அச்சம் காரணமாக, கே.பி.யை வைத்து ஜெயலலிதாவை திசை திருப்ப நடத்தும் சிங்களத்தின் குள்ளநரிச் செயல் இது, என்பது நன்றாக தெரிகிறது. தொடர்ந்து புலிகளின் மீது பயங்கரவாத குற்றச் சாட்டுகளை சுமத்தி, பயங்கரவாத முத்திரை குத்தி வெற்றி கண்ட சிங்களம்,தற்போத ு தன்னை காத்துக் கொள்ள புதிய செயல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளது . போராளிகளையும்,ம க்களையும் கொல்ல ராஜபக்செ சகோதரர் தான் உத்தரவிட்டதாக, பொன்சேக, ராணுவத்தளபதியின ் நீதிமன்ற சாட்சியம், ராஜபக்சேக்கு புதிய நெருக்கடியை கொடுத்திருக்கிற து.இதை நேரில் பார்த்த ஊடகவியலாளர் நாட்டை விட்டு தப்பிவிட்டதாக சமீபத்தில் செய்தி வந்துள்ளது.இனி மேலாவது சிங்களத்தின் வேடத்தை,கருணாநி தியின் வேடம் கலைக்கப்பட்டது போல்,கலைத்து, இந்த உலகம் உண்மையை உணர வேண்டும்.எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகில்....
ஈழத் தமிழர்களின் கனவு நனவாக வேண்டும்.கொலைகாரன் கூண்டில் ஏற்றப்படல் வேண்டும்.இதற்கு நாம் தமிழர்கள் உண்மையை இனம் கண்டு,போலிகளின் வலையில் விழுந்து விடாது அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும்.அது நம் கடைமை என்பதை உணர வேண்டும்.
Quote
 
 
+2 #8 K Raman 2011-05-28 14:27
கடந்த சில நாட்களாக ஃபிர்ச்ட்பொச்ட் .காம் என்னும் வெப்சைட்டில் கேபியைப் பற்றியும் LTTE யைத் தாக்கியும் செய்திகள் வந்தன. கேபியின் பேட்டியும் இஙகு வுள்ளது.

http://www.firstpost.com/blogs/why-is-the-ltte-wooing-india-16680.html
Quote
 
 
+11 #7 thileeban-ravi 2011-05-28 14:20
வெல்லட்டும் தமிழ் இனம்.
திக்கெட்டும் பரவட்டும் தமிழன் புகழ்.
வாழ்க தமிழ். வெல்க தமிழன்.
Quote
 
 
+3 #6 seenivasan 2011-05-28 14:19
our beloved leader avl,
pls show your face one time for us(publics)
Quote
 
 
+2 #5 Enian 2011-05-28 14:19
one day tamil ELAM will be born.It should happen,it shall happen and its a history.
Quote
 
 
+1 #4 seenivasan 2011-05-28 14:17
என் உயிர் தலைவா, ஒரு முரை மக்கல்லுக்காக வெலியெ வா..............................
Quote
 
 
+12 #3 surseh 2011-05-28 13:56
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.
Quote
 
 
+1 #2 Mr.M 2011-05-28 13:53
This was expected as soon as UN started it as an issue!.

Thank you very much for the Update
Quote
 
 
+28 #1 aswin 2011-05-28 12:31
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 117 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5204
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57941
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176749
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392477