முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கனிமொழி கைதா? 6ம் எண் சிறையா? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 0
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 04 மே 2011 11:46
மூன்றாவது குற்றப் பத்திரிகையை மே-31 அன்று சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த ஊழல் வழக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்கு, சட்டப்படி கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால், இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், ஆயுள் முழுக்கவும்கூட சிறையில் கழிக்க வேண்டி இருக்குமாம். அதனால், இந்தக் கோணத்திலும் தனியாக வழக்குப் போட ஆதாரங்களை சி.பி.ஐ. சேகரிக்கிறது.

யார் இந்த அமிர்தராஜ்?

ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த, மறைந்த சாதிக் பாட்சாவின் பி.ஏ-வாக இருந்தவர் அமிர்தராஜ். சாதிக் சம்பந்தப்​பட்ட அனைத்து விவகாரங்களையும் நன்கு அறிந்தவர். இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் முழுமையாக விசாரணை செய்ததாக அறிந்து, டெல்லி அதிகாரிகளிடம் பேசினோம்.

''ஷாகித் பால்வாவின் டிபி ரியாலிட்டி நிறுவனமும், சாதிக்கின் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனமும் கிட்டத்தட்ட ஒரே நிர்வாகத்தின் கீழ்தான் இயங்கி வந்ததாக அமிர்தராஜ் சி.பி.ஐ-யிடம்
சொல்லி இருக்கிறார். உலகத் தரத்தில் ஊழியர்கள் வேண்டும் என்பதற்காக, நேர்முகத் தேர்வு நடத்தி க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு பால்வாவின் மும்பை நிறுவன அதிகாரிகள் உதவி செய்தார்களாம். சாதிக்கின் நிறுவனத்துக்கு பால்வாவின் நிறுவனங்களில் இருந்து பல கோடிகளில் பணப் பரிவர்த்தனை நடந்து இருக்கிறது.

மும்பைத் தொழிலதிபர்கள் ஷாகித் பால்வாவும், வினோத் கோயங்காவும், தொழில் முறை நண்பர்கள். இருவரும் இப்போது திகார் சிறையில் இருக்கிறார்கள். வினோத்தின் தந்தை கிருஷ்ணன் முராரி, இளைய சகோதரர் பிரமோத் கோயங்காவின் பின்னணி​களையும் சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்கிறது. இவர்களுடன் சாதிக் பாட்சா நெருக்கமான தொடர்புவைத்து இருந்த ஆதாரங்கள் சி.பி.ஐ. வசம் வந்துவிட்டன...'' என்கிறார்கள்.

தாவூத் ஆல்பத்தில் பிரமோத் கோயங்கா

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பலத்த பாதுகாப்புடன் இருந்து​கொண்டு, இந்தியாவில் பயங்கரவாதத்தை ரிமோட்டில் இயக்கி வருகிறார் தாவூத் இப்ராஹிம். அப்படிப்பட்ட தாவூத்தின் இளைய சகோதரன் ஹுமாயுனின் திருமண நிகழ்ச்சியில் முக்கிய விருந்தாளியாக பிரமோத் கலந்துகொண்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மும்பையை மிரட்டிவிட்டு, போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்று பதுங்கிய அபுசலீமை, அந்த நாட்டு போலீஸ் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைத்தது. அபுசலீமின் வாக்குமூலத்தில், திருமணத்தில் பிரமோத் கலந்துகொண்டதைச் சொல்லி இருக்கிறார். மும்பையைச் சேர்ந்த பில்டர் ராஜேஷ் என்பவரை, கடந்த 2003-ம் ஆண்டு நிழல் உலக தாதாக்கள் சுட்டுக் கொன்றனர். அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், தனது மரணத்தின் பின்னணியில் கிருஷ்ண முராரி இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தாரிக் பாய் என்று அழைக்கப்படும் கராச்சியைப் பூர்வீகமாகக்​கொண்ட தொழிலதிபர் இந்தியபோலீஸாரிடம் பிடிபட்டபோது, 'கிருஷ்ணன் முராரி, வினோத் கோயங்கா, பிரமோத் கோயங்கா ஆகிய மூவருக்கும் தாவூத்தின் 'டி' கம்பெனிக்கும் தொடர்பு உண்டு. இவர்களின் ரியல் எஸ்டேட் தொழிலில் தாவூத்தின் பணம் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது’ என்றும் தெரிவித்ததாக ஒரு தகவல் உள்ளது. அதனால், சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் பிரமோத்தையும் தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டுவர இருக்கிறார்​களாம்.

தயார் நிலையில் 6-ம் எண் சிறை?

மே 6-ம் தேதி கனிமொழியும், கலைஞர் டி.வி-யின் நிர்வாகி சரத்குமாரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜ​ராகிறார்கள். அன்றைய தினமே, அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படலாம் என்று டெல்லியில் திடுக்கிடும் வகையில் பேச்சு வலம் வருகிறது. பெண்களுக்கு என்று தனியாக 6-ம் எண் சிறை இருக்கிறது. இங்கே 1,200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் இருக்கிறார்கள். 'கனிமொழி கைது செய்யப்பட்டால் இங்கேதான் அடைக்கப்படுவார்’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். இந்த சிறையில் தமிழக போலீஸின் ஆயுதப் படையைச் சேர்ந்த 30 பெண் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்கே இரண்டு ஃபைல்கள்?

''சமீபத்தில் இரண்டு ஃபைல்கள் காணவில்லை. அதற்குக் காரணமானவர்களை முதலில் பிடித்து திகார் சிறையில் தள்ளினால்தான், மற்றவர்கள் திருந்துவார்கள்போல் தெரிகிறது...'' என்று டென்ஷன் ஆகிறார் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர்.

'ஊழல் செய்த உயர் அதிகாரிகள் சிலரைக் காப்பாற்றும் நோக்கில் அந்த இரண்டு ஃபைல்கள் எங்காவது ஒளித்துவைக்கப்பட்டு இருக்கிறதா... அல்லது, ஒரேயடியாக எரித்துவிட்டார்களா?’ என்று சி.பி.ஐ. தேடுகிறது. அதில் ஒரு ஃபைல், ஆ.ராசா மந்திரியாக இருந்தபோது, தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தில் தினசரி அலுவலகப் பணிகளைப் பதிவு செய்த விவரங்களை உள்ளடக்கியது. மற்றொரு ஃபைல், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று, ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி அரசுக்கு விண்ணப்பித்தது தொடர்பானது. இந்த இரண்டு ஃபைல்களுடன் தொடர்புடைய வேறு சில விவரங்கள் சி.பி.ஐ-க்குக் கிடைத்துவிட்டது. என்றாலும், ஒரிஜினல் ஃபைல்களைத் தேடும் பணி மும்முரமாக நடக்கிறது. இந்த ஃபைல்களை வைத்திருந்த அதிகாரிகளிடம் சி.பி.ஐ. வாக்குமூலம் பதிவு செய்துவிட்டது. ஒருவேளை, காணாமல்போன ஃபைல்கள் கிடைக்கவில்லை என்றால், இந்த வாக்குமூலத்தை ஆதாரமாகப் பயன்படுத்தவும் சி.பி.ஐ.யிடம் திட்டம் இருக்கிறது!

நன்றி ஜுனியர் விகடன்

 

Comments  

 
0 #20 ashikali 2011-05-13 22:36
Tomorrow she may be arrested
Quote
 
 
+1 #19 மீடியா கிங் 2011-05-08 16:18
கண்ணில் தெரிய்ம் கள்ளத்தனம்
Quote
 
 
+1 #18 nerupu 2011-05-06 12:25
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள; ஒரு ராணியும் இல்லை வாழ; ஒரு உறவும் இல்லை, ஒரு பிரிவும் இல்லை, அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நானே! நிலவுக்கு வானம் உண்டு; மலருக்கு வாசம் உண்டு; கொடிகொரு கிளையும் உண்டு எனக்கென்று என்ன உண்டு; ஏன் படைத்தானோ இறைவனும் என்னை! மனதில் நிம்மதி இல்லை...
Quote
 
 
+7 #17 KK 2011-05-06 06:48
Interesting comments
Truth Alone Triumphs - Boston,யூ.எஸ்.ஏ 2011-05-06 05:29:13 IST Report Abuse
I heard that the World English Literary Association is debating to change the spelling for the word Corruption. It looks like they are going to choose the new spelling “Karuption”. They have said that they derive this name from “Karunanidhi” + “Corruption” = “Karuption”.

R.PERUMALRAJA - dubai,ஐக்கிய அரபு நாடுகள் 2011-05-06 03:19:01 IST Report Abuse
அப்புறமென்ன ....சிறைக்கு செல்வீர்கள்...2 - 3 நாட்கள் சிறையில் இருப்பீர்கள் வெளியே வரும் நாள் அன்று கலிஞர் வந்து நலம் விசாரிப்பார் ... 2 மணி நேரம் கழித்து நீங்கள் வெளியே வருவீர்கள் "கலைஞர் சென்றார் -மகளை மீட்டார் " என்று பத்திரிக்கை எல்லாம் புகழ் பாடும் ......நீங்கள் சென்னையில் கால் பதிக்கும் பொது பட்டாசு வெடிப்பார்கள் .... தொலைக்காட்சி வழியாக கனிமொழி இற்கு " தமிழர்கள் உற்சாக வரவேற்பு " என்று புகழ் பாடும் ....நீங்களோ " சூது கவ்வும் பின் தர்மம் வெல்லும் " என்று கையை உயர்த்தியபடி போஸ் கொடுப்பீர்கள் .... அப்புறம் கட்சியில் தமிழகத்தின் மேற்கு மண்டல பொறுப்பாளர் ஆவீர்கள் ..... அப்புறம் தமிழர்களின் தாயே ! என்று தொண்டர்கள் வர்ணிப்பார்கள் ... "திமுகவின் கண்ணகியே "...வருக என்று தொண்டர்கள் போஸ்டர் ஒட்டுவார்கள்.உங்கள் தந்தையோ ....அஞ்சாநெஞ்சன் என்று தன் மகனுக்கு பெயர் சூடியது போல ...உங்களுக்கும் ...ஏதாவது பெயர் வைப்பார் ... "தமிழின பத்தினி " என்று பெயர் வைத்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை ஹும் ஹும் ........ வாக்களித்த தமிழனோ ரேஷன் கடை வாசலில் தலையணை வைத்து ஒரு ரூபாய் அரிசிக்கு காலமெல்லாம் காத்திருக்க வேண்டியதுதான் ......நல்லவன் சம்பாதித்ததை நாறவாயன் தின்பதுதானே பழமொழி......
Quote
 
 
0 #16 kani amudan 2011-05-06 04:52
KANI avargal Eluthiya '' KARUGUM MARUTHAANI '
''
MIGAYUM ARUMAIYAANA PADAIPPU....
Quote
 
 
0 #15 sukumar 2011-05-05 23:25
kurraththin thanmai onrun periya alavil pathiyappadavil lai.akave jameenil vanthuviduvaark al.busss enru akividum.
Quote
 
 
+4 #14 Anto 2011-05-05 18:20
"கவிஞர்" கனிமொழி அவர்களிடத்தில் தான் கலைஞர், வைரமுத்து, வாலி போன்றோர் தமிழில் சந்தேகம் வந்தால் கேட்டு தெளிவு பெறுவார். அவர் சிறை சென்றால் தமிழ் நாட்டிற்கு ஏன் இந்தியாவிற்கே பெரிய இழப்பு. தமிழன் இலங்கையில் கொல்லப்பட்ட பொழுது எங்கள் தானை தலைவர் ஒரு கடிதம் தான் மதிய அரசுக்கு அனுப்பினார். ஆனால் எங்கள் தலைவிக்கு ஒரு பிரச்சனை என்றால் மொத்த தமிழ் நாடே டெல்லிக்கு செல்கிறது. அது தான் எங்கள் தலைவியின் ("கவிஞர்" கனிமொழி) அவர்களின் பெருமை.
Quote
 
 
+2 #13 Gunasekar,chennai 2011-05-05 12:21
போட்டியே வேண்டாம்; போதும்டா சாமி!’ என்று வைகோ ஒதுங்கினாலும் அவரது வாரிசு விடுவதாக இல்லை.... ‘ஜெயித்துக் காட்டுவேன்!’ என்று வைகோவின் பேரன் வ ருண் பெரம்பலூரில் களமிறங்க; அவருக்குத் துணையாக துரை வையாபுரி, மருமகள் கீதா மற்றும் பேத்தி வானதிரேணு என குடும்பமே முகாமிட்டிருந்த து... அதற்குக் காரணம் கடந்த ஒரு வாரமாக கோல்டன் கேட்ஸ் பள்ளியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் வைகோவின் பேரன் வருண் கலந்து கொண்டு விளையாடி வருவதுதான்.

‘‘ஐந்து வயதிலிருந்தே வருண் டென்னிஸில் ஆர்வமாக விளையாடுறான். இப்போ பத்து வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான போட்டிக்கு வந்துருக்கான். எ ன்றபடி மகன் வருணை பேச அழைக்கிறார் துரை வையாபுரி.

‘‘எங்க தாத்தாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் தாத்தா செல்லம். உலகத் தலைவர்களைப் பற்றிய புத்தகங்களை படிக்கச் சொல்வார். காலையில கூட போன் பண்ணி ‘இப்ப யாரு உன் கூட விளையாடுறது... நீ எப்படி ஜெயிச்ச’ன்னு வைகோ தாத்தாவும் பாட்டியும் போன் பண்ணி கேட்டாங்க. நான் ஃபைனல்ஸ் வந்ததும் பெரம்பலூர் வரேன்னு சொல்லியிருக்கார ். அவர் வரணுங்கிறதுக்கா கவே நல்லா விளையாடிட்டு இருக்கேன்’’ என்றபடி களத்தில் இறங்கும் வருணை வைகோவின் குடும்பமே கு தூகலமாக கைதட்டி உற்சாகப்படுத்தி யது.

ஆடுகளத்தில் சாமானிய மக்களோடு மக்களாக களத்திலே கலந்து நின்ற வைகோவின் மகன் துரை வையாபுரியைப் பார்த்ததும் வைகோவின் அரசியல் தூய்மைதான் நினைவுக்கு வந்தது..Kumudam.
Quote
 
 
0 #12 KK 2011-05-05 06:53
CBI BENDS BEFORE KARUNA- KANI WONT BE ARRESTED

The CBI had made it clear in the special court in Delhi today that apprehensions of Cineyug Films director Karim Morani, charged sheeted in the 2G spectrum case, that he would be subjected to custodial interrogation was misplaced. We are sure the same applies to Kanimozhi as well and that she will not be arrested. This has been conveyed to 'thalaivar' (leader). So, he decided not to go to Delhi," said a reliable DMK source. Instead, the DMK supremo might take part in the birthday bash of his son M K Stalin's grandchildren, Nalan and Nila. While the birthday of the twins falls on May 6, the celebrations have been advanced in the light of Kanimozhi's court appearance on that day.
http://timesofindia.indiatimes.com/india/Kanimozhi-leaves-for-Delhi-father-to-remain-in-Chennai/articleshow/8164496.cms
Quote
 
 
+20 #11 anniyan 2011-05-05 02:29
போட்டிருக்கும் கனி - ராசா போட்டோவைப் பார்த்தல் இந்தப் பாட்டுதான் நினைவு வருகிறது:

கவிஞர் : கலைஞர்
மெட்டு : "நான் உன்னை நினைச்சேன்.. நீ என்னை நினைச்ச.. தன்னாலே நெஞ்சம் ஒண்ணாச்சு"
பாடுவது: கனிமொழி , ராசா


நான் மில்லியனை நினைச்சேன்..
நீ பில்லியனை நினைச்ச.....
எல்லாரும் ஊழல் பண்ணியாச்சு..

நம்மள சுவாமி பிரிச்சான்..
சவுக்கு பிளாக்கில் கிழிச்சான்
சிபிஅய்இப்போ வளைச்சுப் புட்டான்..

உன்னாலத்தானே சாதிக்க முடிஞ்சது.. இப்ப
உனக்காகத்தானே "சாதிக்"க முடிச்சது..

-நேரமில்லை நண்பர்களே.. வேறு யாரவது மிச்சப் பாட்டையும் முடியுங்கள்
Quote
 
 
+1 #10 pakku mandaiyan 2011-05-04 17:41
cha enna oru romance(raja and kanimozhi foto in this article)......kanavan irukkumidamae manaivikku(sorr y) sorgam......kanimozhi once again proved her thondu ullam......
Quote
 
 
+36 #9 Loduku pandi 2011-05-04 17:21
மன்மோகன் சிங்கும், கருணாநிதியும் பேசிக் கொள்கிறார்கள்

மன்மோகன் : கலைஞர்ஜி உண்மைய சொல்லுங்க, அந்த 2 லட்சம் கோடி எங்க?

கலைஞர் : சொல்றேன்பா, இவ்வளவு நாளா என் மனசில பூட்டி வச்சிருக்கற குடும்ப ரகசியத்தை சொல்றேன், இது கடுகளவு வெளிய கசிஞ்சாலும் என்ன நீங்க உயிரோடவே பார்க்க முடியாது..!

மன்மோகன் : ஒக்கே சொல்லுங்க..

கலைஞர் : ரொம்ப நாளா கனிமொழிய ராசா வச்சிருக்கறதா ஊருக்குள்ள ஒரு வதந்தி, அத கேட்டு கோவப்பட்ட நான் அவன் சட்டைய புடிச்சி, ஏண்டா என் மகள நீ வச்சிருக்கியாடா ன்னு கேட்டேன், அவன் சிம்பிளா ஒரு பதில சொன்னான்

மன்மோகன் : என்ன பதிலு?

கலைஞர் : கனிய நான் வெச்சுக்கறேன், ’’மணி’’ய நீ வெச்சுக்கன்னு சொன்னான்.

மன்மோகன் ; அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

கலைஞர் : பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்த்த ு, நானும் ஒத்துக்கிட்டேன் .
Quote
 
 
-6 #8 mangaiarasi 2011-05-04 16:28
vikatanukkum,un akkum vera velaye illai.Ellam pesi mudithu vittargal.nitchiyam DMK is going to win and approved kootani atchi.Atahnaal pothikitu vikatan,ne, matrum ,cho vera velai parungal.Dinamalare unmaiyai unarnthu mariatchu.ungalaku enna.
Quote
 
 
-2 #7 nerupu 2011-05-04 16:17
inga soliruka mathiri ethuvumee nadakathuuuuuuu uuuu.

kanimoli delhi pooitu safe ah thirumbi varuvanga okvaaaa

dont get emotions yarr..........
Quote
 
 
0 #6 manthra 2011-05-04 14:07
yeaaaahhhhhhhh.......
Quote
 
 
+11 #5 pandiyan 2011-05-04 13:55
அன்று கனக விஜயன் கங்கை கொண்டான் கடாரம் வென்றான் இன்றோ ஐயோகோ தனக்கு தான தமிழன தலீவன் என்று உளறியவர்கள் டெல்லி படைஎடுகின்ரர்கள ் காலில் விழ, கதறி அழ, திகார் போகின்றார்கள் தமிழன் மானம் பறை சார .வாழை மட்டை தமிழன் என்று விழிப்பான் ?
Quote
 
 
0 #4 bulb 2011-05-04 13:40
"kazhuthai theyndhu katterumbu aanathu" ithu kathai alla nijam. spectram uzhal 1.76 Laks Crores- idhu theyindhu 60 thousand crores- idhu kuraindhu 225 Crores- athilum 20% kku mattumey vazakku pathivu seyyapattu ullathu. mattravai/ mattravargal maraikkapattuvi ttanar- iduvum kaanamal pogum... yenenil ivai anaithum seivathu aalum katchi.... pongada neengalum unga sattamum....
Quote
 
 
+3 #3 ram prasad 2011-05-04 13:05
I DON'T KNOW ABOUT THE ABOVE ISSUE.BUT FOR KANIMOZHI N THE PIC ABOVE,I REMEMBER AN OLD MGR SONG
"oru vazhi nadandhaar uyarndhavar aavaar
oru vazhi nadandhaar uyarndhavar aavaar
pala vazhi kadandhaar thaazhndhavar aavaar"
Quote
 
 
+9 #2 பச்சைமாலு. 2011-05-04 13:02
ராசாவுடன் கனிமொழியா... கனிமொழியுடன் ராசாவா...

கல்யாண ரிசப்ஷன் போட்டோ அருமை,
நன்றி..
Quote
 
 
+8 #1 இரண்டு முகம் 2011-05-04 12:33
அடடா என்ன ஒரு ரசனை, உங்களுக்கு யாருக்காவது இவ்வளவு அழகா ரசிக்க தெரியுமா, இல்ல இவ்வளவு அழகா ஒரு பொன் சிரிப்பு சிரிக்க தெரியுமா,
சினிமா நடிகர்கள் இதை பார்த்து கற்றுக்கொள்ளவும
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 115 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5199
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57936
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176744
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392472