முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
முதல்வரின் கவனத்திற்கு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 52
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
திங்கட்கிழமை, 17 ஜனவரி 2011 08:02

பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களுக்கு சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும். எல்லோரும் மனிதர்கள்தானே? ஆனால், அந்த பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்களிடம் யாரும் தவறான காரியங்களைச் சாதித்துக் கொண்டுவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருப்பது வழக்கம். தமிழகத்தில் சமீபகாலமாக தவறான நபர்கள் முதல்வரின் பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்களைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், சமுதாயத்தின் அவமதிப்பிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளத் துணிந்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.

முதல்வரைத் திருப்திப்படுத்த முடியும் என்பதற்காக மட்டுமே பல பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன என்பது அவருக்கே தெரியும். ஆனாலும் அவர் அதை ஏன் அனுமதித்தார் என்பதுதான் கேள்வி. ஒருவேளை, அறிக்கைகள் மூலமோ, பொதுக்கூட்டங்கள் மூலமோ தன்னால் வெளிப்படுத்த முடியாத கருத்துகளையும், செய்திகளையும் இதுபோன்ற விழாக்களின் மூலம் வெளிப்படுத்த முடியும் என்பதால்கூட இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்துவதை அவர் அனுமதித்திருக்கலாம், ஊக்குவித்திருக்கலாம்.

 

அவருக்குப் பாராட்டு விழாக்கள் எடுத்ததில் பாதிக்கு மேற்பட்ட விழாக்கள் திரையுலகத்தினரால் நடத்தப்பட்டவை. முதல்வர் திரையுலகத்துடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்புடையவர் என்பதும், அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரில் ஒரு சிலர் தவிர, எல்லோருமே திரைப்படத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதாலும், திரைப்படத் துறையினரின் விழாக்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதல்வர் கலந்து கொண்டிருக்கலாம், தவறில்லை.

 

ஆனால், அப்படி பாராட்டு விழா நடத்துபவர்கள் யார், எவர், அவர்களது பின்னணி என்ன, ஏன், எதற்காகத் தனக்கு இப்படி பாராட்டு விழா நடத்துகிறார்கள், என்பதை எல்லாம் நன்றாக விசாரித்துத் தேர்ந்து அதன் பிறகு அந்த நிகழ்ச்சிகளை அவர் ஒத்துக்கொண்டாரா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

 

முதல்வர் கருணாநிதி எழுதாத திரைக்கதை வசனங்களா? மாறிவிட்ட காலகட்டத்தில், அதுவும் விலைவாசியில் தொடங்கி, சட்டம் ஒழுங்குவரை தலைக்கு மேல் பொறுப்புகள் இருக்கும் நேரத்தில் முதல்வர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதுகிறேன் என்று தன்னை வருத்திக்கொள்ள வேண்டியது தேவைதானா?

 

முதல்வரது பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் திரைக்கதை வசனம் எழுதும் திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பது யார் தெரியுமா? சமீபத்தில் வெளியான "இளைஞன்' திரைப்படத் தயாரிப்பாளரும், தயாரிக்கப்பட இருக்கும் "பொன்னர் சங்கர்' படத் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் அதிபர் சாண்டியாகோ மார்டின். இவரது பின்னணியைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது.

 

திருவனந்தபுரம் மாநகரக் காவல் துறையால் இவர் மீது மூன்று வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. திருவனந்தபுரம் அருங்காட்சியக காவல் நிலையத்தின் காவல்துறை ஆணையர் (டிஜிபி) சிபி மேத்யூவும், விற்பனை வரித்துறை ஆணையரும் தொடர்ந்திருக்கும் இரண்டு வழக்குகள் அல்லாமல் ஒரு தனியார் மோசடி வழக்கும் இவர்மீது நிலுவையில் இருக்கிறது.

 

லாட்டரி வியாபாரியான மார்ட்டின், எந்தவிதமான ரகசியக் குறியீடோ, குலுக்கல் தேதியோ இல்லாமல் போலி லாட்டரி விநியோகம் செய்தார் என்பது வழக்கு. நீதிமன்றம் அதை விசாரணைக்கும் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, சென்னையில்கூட இவர்மீது போலி லாட்டரி டிக்கெட் விற்பனைக்காக ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளிவந்திருக்கிறது.

 

இப்படி ஒருவர் குற்றப்பின்னணி உள்ளவரா, இல்லையா என்பதை முழுமையாக விசாரிக்காமல் அவர் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ஒரு மாநில முதல்வர் வசனம் எழுத முன்வந்ததே தவறு. முதல்வருக்கு சன்மானம் கொடுத்து வசனம் எழுத வைக்கும் ஒருவர் மீதான குற்றங்களைக் காவல்துறை தைரியமாக விசாரிக்குமா? அந்த தைரியத்தில்தானே, லாட்டரி அதிபர் மார்ட்டின் தமிழகத் தலைமை அரசு வழக்குரைஞரைத் தனது வழக்குரைஞராகக் கேரள நீதிமன்றத்தில் வழக்காட நியமிக்க முயன்றார்.

 

ஒருபுறம், அரசியலிலிருந்து குற்றப்பின்னணி உள்ளவர் களையெடுக்கப்பட வேண்டும் என்று முயன்று வரும் வேளையில், ஒரு மாநில முதல்வர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார். இப்படியொரு தவறைச் செய்வது முந்தா நாள் அரசியலுக்கு வந்த புதியவர் அல்ல. அறுபது ஆண்டு அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரரான முதல்வர் கருணாநிதி என்கிறபோது, ஏதோ விவரம் தெரியாமல் செய்துவிட்டார் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது!

 

கடந்தகாலச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1971-ம் ஆண்டும் மு. கருணாநிதிதான் தமிழக முதல்வராக இருந்தார். அன்றைய திமுக பொருளாளர் எம்.ஜி.ராமச்சந்திரன், செய்தி - மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக விருப்பம் தெரிவித்தபோது, அன்றும் முதல்வராக இருந்த கருணாநிதி சொன்ன பதில், "நீங்கள் நடிப்பதை விட்டுவிடுவதாக இருந்தால் அமைச்சராக்குகிறேன்' என்பதாக இருந்தது.

 

முதல்வர் கருணாநிதிக்கும் அதே பதில் இன்று பொருந்தும்தானே? கிடைக்கும் சன்மானத்தை நான் நன்கொடையாக வழங்கி விடுகிறேன் என்று சமாதானம் சொல்கிறார் முதல்வர். சன்மானம் பெறுவதே தவறு எனும்போது, அதை அவர் நன்கொடையாகக் கொடுத்தால் என்ன கொடுக்காமல் விட்டால்தான் என்ன?

 

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய சமுதாயம் பிரச்னைகளை எதிர்நோக்கி இருக்கும் காலகட்டத்தில், மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், விலைவாசி உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், முதல்வர் குளுகுளு அரங்கத்தில், தான் கதைவசனம் எழுதிய திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் முதல்வர் அடிக்கடி மேடைதோறும் முழங்கும், "கும்பி எரியுது, குடல் கருகுது...' வசனம்தான் நம்மை அறியாமலே நினைவுக்கு வருகிறது.

 

சினிமாவுக்கு வசனம் எழுதுவது முதல்வருக்குத் தேவையில்லாத வேலை என்று யாரும் எடுத்துக்கூறுவதாக இல்லை. மக்கள்தான் உணர்த்த வேண்டும், வேறு வழி?

நன்றி தினமணி.

 

Comments  

 
+9 #33 THAKIDUTHATHAM 2011-01-18 14:25
"இந்த அச்சுதானந்தன் ஆட்சியில் இருக்கும் வரை அந்த பரம கள்ளன்(முழுத்தி ருடன்) மார்டின் கேரளத்தில் மீண்டும் திருட்டு தொழில் செய்ய முடியாது. இதற்காக என் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்வேன்." என்று...
இங்கு அதே கள்ளன் மார்டினிடம் வெட்கமின்றி 50 லட்சம் கூலி வாங்குகிறார், ஒரே அறையில் அமர்ந்து திரைப்படம் பார்க்கிறார் நம் முதல்வர்....தமிழக அரசு வழக்கறிஞரை மார்டினுக்கு ஆதரவாக வாதாட அனுப்புகிறார்... இதெல்லாம் சகிக்க முடியா கொடுமைகள்...
Quote
 
 
+2 #32 தளவாய் 2011-01-18 13:51
மத்திய மாநில அரசுகள் அமைதி காப்பதும் மொழிச் சிக்கலா? இனச் சிக்கலா?
வளமையான நிலங்களையெல்லாம ் வந்தேறிகளிடம் இழந்துவிட்டு தமிழர்களைச் சேரிகளுக்குள்ளு ம் சிற்றூர்களுக்கு ள்ளும் முடக்கி வைத்திருப்பது மொழிச் சிக்கலா? இனச் சிக்கலா?
தமிழீழச் சொந்தங்கள் இங்கு ஏதிலிகளாக வந்திருக்கும்போ து அவர்களைத் தமிழக அரசு இழிவாக நடத்துவது மொழிச் சிக்கலா? இனச்சிக்கலா?
தமிழினம் என்ற பேச்சை எடுத்தாலேயே அதை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தனி ஒரு காவல்துறைப் பிரிவைத் தமிழ்நாட்டிற்கு ள் வைத்திருப்பது மொழிச்சிக்கலா? இனச்சிக்கலா?
தமிழர்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது என்கிற நிலையை உருவாக்கி வைத்திருப்பது மொழிச் சிக்கலா? இனச்சிக்கலா?
Quote
 
 
+2 #31 தளவாய் 2011-01-18 13:48
“தமிழ்நாட்டுச் சிக்கல் மொழிச் சிக்கல் என்றும் தமிழீழச் சிக்கல் இனச்சிக்கல் என்றும் தமிழகத்தில் சிலர் பிதற்றி வருகிறார்கள்! தமிழ்நாட்டுக்கு ஆபத்து ஆரியத்திடம் இருந்து வருவதாகவும் திராவிடம் என்னவோ தமிழகத்தைப் பொத்திப் பாதுகாக்கிறது என்றும் நீண்ட காலமாகச் சிலர் தமிழரின் காதுகளில் பூச்சுற்றி வருகிறார்கள்!”
Quote
 
 
+2 #30 தமிழ் தாய் 2011-01-18 13:43
திருடு, ஏமாற்று, மோசடி செய். இதுவே “இன்றைய நீதி”....கருணாநிதி... இல்லை இல்லை... கருணாநீதி
Quote
 
 
+2 #29 மானஸ்தன் 2011-01-18 03:29
துனிசியாவில் அரசு கவிழ்ந்தது. 1956 இல் பிரான்சிடம் சுதந்திரம் பெற்றது. பின் Habib Bourguiba, ஆட்சிக்கு வந்தார். அதன் பின் 1987 இல் ஆட்சிக்கு வந்த Zine El Abidine Ben Ali, 23 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.
வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பத்திரிக்கை சுதந்திரமின்மை, சனநாயகமின்மை ஆகிய காரணங்களால் கொதிதிருன்தனர் மக்கள். மூன்று முறை அவனது கட்சி 99.9% வாக்குகள் பெற்றுள்ளது!!!.
Quote
 
 
+1 #28 venthan .theni 2011-01-18 00:47
savukkuku vanakkam unkalpani super naan engal maavattamaana theni valiyaaga dingugal saparimali paathai kurithu kelvi eluppi irunthen aanaal ungalidam erunthu entha pathilum varavillai tamalan sellum valiyellam purakkanikkappa dukiran munnal muthalvar jayalalithaa maavattamaana engal paguthiyil nadatha intha kodoora vipathai neengal maranthuviduvee rgala naan ungalidam ketpathu onruthaan engal paguthi jayalaithavin koottai enpathaal purakkanikapadu kirathaa enpathu thaan verivil oru nalla bathilai ethirparkiren
Quote
 
 
+5 #27 Ganesh 2011-01-18 00:00
இன்னும் நான்கு மாதத்தில் தேர்தலுக்கு பின்னால் திமுக சுத்தமாக காலி ஆகி விடும், கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தாரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்(அல ைகற்றயில் அடித்தது உட்பட), அப்பொழுது பிழைப்புக்கு ஒரு வழி வேண்டாமா? அதனால் தான் இப்பொழுதே தன பழைய தொழிலை தூசி தட்டுகிறார் இதை போய் ஒரு பெரிய விஷயமா ஆக்குகிரார்களே. சிறையில் இருந்தே அப்பொழுது கதை வசனம் எழுதி சம்பாதிப்பார். அப்பொழுது அவர் பெயர் சிறைகலைஞர்.
Quote
 
 
+11 #26 Ganesh 2011-01-17 23:04
தயவு செய்து சீமான் அவர்கள் பற்றி உங்கள் கருத்துக்களை வெளியிடவும், தேசிய தலைவர் மீது பற்று கொண்ட ஒரு தமிழின போராளியாக அவரை நான் பார்க்கிறேன் உங்கள் கருத்தை சொல்லவும்.
Quote
 
 
-9 #25 khalifullah 2011-01-17 22:59
ungalukku DMK seiyym velaigal mattum theriyma, jeyalalitha pattri ondrume theriyatha
Quote
 
 
+13 #24 tamil anban 2011-01-17 21:45
please start a journal weekly edition, your words should also reach the people who don't use internet. please do it ASAP..
Quote
 
 
+7 #23 Thendral 2011-01-17 21:02
மக்களாட்சி என்ற பெயரில் கொடுங்கோல் ஆட்சி செய்யும் இவர்களை யார் தண்டிப்பது... ஹிட்லருக்கும் முசோலினிக்கும் நேர்ந்ததை போல ஒரு முடிவு வரவேண்டும் ivarukku..சுயநல கருமி.....கிருமி...
Quote
 
 
+10 #22 sankarusa 2011-01-17 20:40
தமிழனுக்கு ரெண்டு விஷயம் மிக முக்கியம். ஒன்னு தண்ணி (சாராயம்) இன்னொன்னு திரைப்படம். தன் நாடு எப்படி போனா என்ன தன் குடும்பம் எப்படி போனா என்னனு இருக்கிறவன் தன் தமிழன்.
Quote
 
 
+11 #21 S.T.Gurusamy 2011-01-17 19:44
தள்ளாத வயதிலும் இளைஞன் திரைப்படத்திற்க ு வசனம் எழுதிய இந்தப் பொறுக்கியின் தலைமையின் கீழ் நாம் வாழ்வதை நினைத்தால் கேவலமாக இருக்கிறது.
Quote
 
 
+1 #20 Arunmozhi Varman 2011-01-17 19:27
The awareness should be created among the common people
Quote
 
 
+1 #19 jeyaraj 2011-01-17 19:14
It is a very big shame to all tamil people to have such a old crazy fellow as our c.m.
Quote
 
 
+6 #18 பாரதிக்குஞ்சு 2011-01-17 18:52
தினமணியும் சவுக்கும் புதிய நடைமுறைக்கு முதலமைச்சரை மாறச்சொல்லி கோரிக்கை என்றபெயரில் குளப்புகிறீர்கள ், 1971 ல் எம்ஜீஆருக்கு உள்ள நடைமுறை எப்படி கருணாநிதிக்கு பொருந்தும், எம்ஜீஆர் அவர்களுக்கு பாராட்டு வைத்தவர்கள் அனேகர் பாட்டாளிகளும் ஏழை எளியவர்களும், எம்ஜீஆரின் தகுதி அது, ஆனால் கருணாநிதிக்கு அதெப்படி முடியும் போட்டிபோட்டுக்க ொண்டு டீக்கடை ஜெகத் ரட்சகனும், காமல்காசனும் ரஜனி வாலி கொள்ளிமுத்து, என்ற கூட்டம் சும்மா விட்டுவிடுமா, நாட்டில் கலவரம் ஏற்பட்டுவிடாதா, இளைஞன் திரைக்கதை தாழ்த்தப்பட்ட ஒருவனின் போராட்டம் அண்ணாவின் கொள்கைப்படி சமூக? விழி(ப்)புணர்ச் சி கருதி முதல்வரால் எழுதப்பட்ட கரு அதை எதிர்க்கிர்றோம் என சமூகத்தின் சாபக்கேட்டை தோலுரிக்கும் கருணாநிதியை குறை கூறலாமா? உங்கள் அறியாமையை தீர்க்க தத்தா தயாராக வைத்திருக்கும் ஐந்தடுக்கு கேள்வியும் பத்தடுக்கு பதிலும் நாளை முரசொலியில் நீங்கள் கண்டு வெட்கத்துடன் மௌனமடையுங்கள்,
Quote
 
 
+5 #17 Sankaravadivel 2011-01-17 18:49
தோழர்களே.. இன்று மலையாள tv / வானொலி நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.lotteryமார்டின் பற்றிய கேள்விக்கு கேரளாமுதல்வர் சொன்ன பதிலை... அதைக்கேட்டு அகமகிழ்ந்தேன். அதே சமயம் நமது முதல்வர் மு.க. பற்றி எண்ணி அளவிலா வேதனை அடைகிறேன்...
அவர் சொன்னார்..."இந்த அச்சுதானந்தன் ஆட்சியில் இருக்கும் வரை அந்த பரம கள்ளன்(முழுத்தி ருடன்) மார்டின் கேரளத்தில் மீண்டும் திருட்டு தொழில் செய்ய முடியாது. இதற்காக என் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்வேன்." என்று...
இங்கு அதே கள்ளன் மார்டினிடம் வெட்கமின்றி 50 லட்சம் கூலி வாங்குகிறார், ஒரே அறையில் அமர்ந்து திரைப்படம் பார்க்கிறார் நம் முதல்வர்....தமிழக அரசு வழக்கறிஞரை மார்டினுக்கு ஆதரவாக வாதாட அனுப்புகிறார்... இதெல்லாம் சகிக்க முடியா கொடுமைகள்...
துனிசியாவில் இப்போது நடந்து வரும் நிகழ்வுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங ்கள்....அது உதவும் நம் நம்பிக்கையைக் கூட்டுவதற்கு... இந்த கொடுமைக்கெல்லாம ் விடிவு காண்பதற்கு..வாழ்க சவுக்கு... தொடர்க உம் அரும்பணி...
நம்பிக்கையுடன்
சங்கரவடிவேல்
கத்தார்
Quote
 
 
+1 #16 Sankaravadivel 2011-01-17 18:36
தோழர்களே.. இன்று மலையாள தொலைகாட்சி / வானொலி நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.... லோட்டேரி மாபியா மார்டின் பற்றிய நிருபரின் கேள்விக்கு அவர் சொன்ன பதிலை... அதைக்கேட்டு எனக்குப் புல்லரித்துப்போ னது... அதே சமயம் நமது முதல்வர் மு.க. பற்றி எண்ணி அளவிலா வேதனை அடைகிறேன்...
அவர் சொன்னார்..."இந்த அச்சுதானந்தன் ஆட்சியில் இருக்கும் வரை அந்த பரம கள்ளன்(முழுத்தி ருடன்)மார்டின் கேரளத்தில் மீண்டும் திருட்டு தொழில் செய்ய முடியாது. இதற்காக என் கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்வேன்." என்று...
நாம் ஒரு புரட்சிக்கு முயல வேண்டும்.... துனிசியாவில் இப்போது நடந்து வரும் நிகழ்வுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங ்கள்....அது உதவும் நம் நம்பிக்கையைக் கூட்டுவதற்கு...
வாழ்க சவுக்கு... தொடர்க உம் அரும்பணி...
நம்பிக்கையுடன்
சங்கரவடிவேல்
கத்தார்
Quote
 
 
+8 #15 tamil anban 2011-01-17 15:40
ஏதோ கருணாநிதி அப்பழுக்கற்ற மனித தெய்வம் மாதிரியும் இவருக்கு விழா எடுகரவனை விசாரித்து விட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பது போல் இந்த பதிவை மக்கள் எடுத்து கொள்ள கூடாது, இனம் இனத்தோடு தான் சேரும் கேடிகள் கேடிக்களோடு தான் சேருவார்கள், உலக மகா அறிஞர்கள் உள்ளூர் சிறு அறிஞர்கள் விழா எடுப்பார்கள், பேரரசனுக்கு குறுநில அரசர்கள் எல்லாம் சேர்ந்து விழா எடுப்பார்கள், அதே போல் உலக மகா கேடிக்கு உள்ளூர் சிறு குறு கேடிகள் எல்லாம் சேர்ந்து விழா எடுப்பார்கள், இதில் இந்த கடைசி ரகம் தான் கருணாநிதிக்கு உள்ளூர் கேடிகள் எல்லாம் சேர்ந்து அடிக்கடி விழா எடுக்கிறார்கள், சாதா கேடிகள் நூறு ஆயிரம் என்று அடிப்பார்கள் அனால் நமது தலைமை கேடி வெறும் கோடிகள் பத்தாதென்று லட்சம் கோடிகளை அடுத்து தான் தான் உலக மகா கேடி என்பதை நிருபித்து விட்டார், அனால் இவர் வாரிசுகள் இவர் செய்த லட்சம் கோடி சாதனையை முரியடிப்பர்களா ?
சவுக்கு அவர்களே சவுக்கு தளத்தில் தமிழில் எழுதும் வசதியை ஏற்படுத்தி தரவும்.
Quote
 
 
+1 #14 Indian 2011-01-17 15:36
how is dmk? athukku nalla vilakkam. ithai engum parappa vendum. aatchi maara vendum. makkal nimmathiyaka irukka vendum.
Quote
 
 
+1 #13 VIJAYAN 2011-01-17 15:33
super
Quote
 
 
+3 #12 Masa Pallar 2011-01-17 14:51
Taklas Devanantha ..... PM kooda Kai kulukkura......
Martin CM Kooda Padam Edukkura...
Quote
 
 
+2 #11 malini 2011-01-17 14:41
ayya, indha veri naai kootangalai viratta veru vaziye illaiyaa? election timela epadiyaavadhu ivargal vandhu viduvaargal. they do whatever to come for cm post
Quote
 
 
+1 #10 Prem 2011-01-17 14:40
Dear Savukku n Dinamani,

Excellent quot,
who is there to teach the leasson???
we r the one n only to teach them a lesson on comming election. if we allow this family again to rule our Tamilnadu for another 5 years, sure they will make us slaves & they totally occupied tamilnadu, & we need to put JALRA for that family, because they make the situation.

So pls pls pls think before vote, ur each n every individuals n neighbours vote is very very important n precious, so pls vote against them to save tamilnadu.
Quote
 
 
+3 #9 Arasiyal Analyzer 2011-01-17 13:58
Where is the newws on Kaspar Tamil Sangamam valakku?

What is the status please ???
Quote
 
 
+7 #8 wee wee 2011-01-17 13:41
அன்புள்ள சவுக்கு அவர்களே, முதற்கண் என்னுடைய மரியாதையை கலந்த வணக்கங்கள். நீங்கள் செய்யும் தொண்டு இணை அற்றது. நீங்கள் உங்கள் வெப்சைட் செய்திகளை வார இதழ் ஆக கொண்டு வந்தால் செம்மை ஆக விற்பனை ஆகும். வெப்சைட் படிக்காத தமிழ் மக்களிடம் பிரபலம் அடையும் என்பது என் கருத்து.
நீர் பல்லாண்டு காலம் வாழ்க. வளர்க உங்கள் தொண்டு.
Quote
 
 
-1 #7 m perumal 2011-01-17 13:23
supreme court must take note of this editorial sou-motto and send notice to the CM for misusing his position for money-laundering. The apex court may please formulate code of conduct for CMs as OATH taking has been made a mockery.
m perumal
Quote
 
 
+1 #6 THANJAVURAN 2011-01-17 12:39
WHY RED JIANT AND CLOUD NINE NOT PRODUCING THEIR'S GRANDPA'S STORY? THATHTHA KATHAI ELUTHA PERAN NADIKKA PANGALIGAL IYAKKI THAYARIKKA KALAGHA KUDUMBATHINARUM , KUDUMB KALAGATHINARUM PARKALAME?
Quote
 
 
+3 #5 Adi 2011-01-17 12:31
THE TAMIL NADU GOVERNMENT SERVANTS' CONDUCT RULES, 1973
(G.O.Ms.No.2226, Public (Services-A), 18th August 1973)
In exercise of the powers conferred by the proviso to Article 309 of the Constitution of India, the
Governor of Tamil Nadu hereby makes the following Rules:-
8. Private trade or employment - (1) (a) No Government servant shall except with the
previous sanction of the Government, engage himself directly or indirectly in any trade or business or
undertake any employment;
Provided that a Government servant may, without such sanction, undertake honorary work of a
social or charitable nature or occasional work of literary, artistic or scientific character, participate in
Sports activities as an amateur subject to the condition that his officials duties do not thereby suffer;
but he shall not undertake, or shall discontinue such work if so directed by the Government:
Quote
 
 
+5 #4 FORCE 2011-01-17 12:10
GOOD. DINAMANI IS THE ONLY PAPER HAS GUTS.
Quote
 
 
+1 #3 sellvaraaj 2011-01-17 11:16
medias give much importance to cine actors and dramatists every channel telecast the programme designed or marketed by cine actors or tv actors it is taken for granted that all these programmes are liked by people hence the cm went in the way ---- peoples way
Quote
 
 
+8 #2 டத்தோஸ்ரீ 2011-01-17 10:08
முத்துவேல் கருணாநிதியை பொருத்தவரை ஊருக்கு உபதேசம் தான்.அன்றே வின்ஸ்ட்டன்ட் சர்ச்சில் சொன்னார். இந்தியர்களுக்கு சுதந்திரம் கொடுக்காதே,அவர் களுக்கு ஆளத்தெரியாது என்று.வெள்ளைகாரர்களை விரட்டிவிட்டு கொள்ளக்கரர்கள் கைகளில் ஆட்சி போய்விட்டது.குரங்கு கைகளில் கிடைத்தால் இப்படித்தான்.ஏழை எளியவரின் ஆட்ச்சியாம்.இதில் எத்தனை அமைச்சர்கள் காமராஜர் போல் எளிமையாக இருக்கின்றனர்?நேற்றுவரை இந்திய மீனவர்வர்கள் தென்னிந்திய கடற்பகுதியில் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர்.இவர் என்னாடா என்றால் கடிதம் எழுதினேன் தந்தியடித்தேன் என LKG பிள்ளைகள் போன்று ஊரை ஏமார்றிக்கொண்டி ருக்கின்றார்.
Quote
 
 
+20 #1 anbu 2011-01-17 08:49
Review is good. Only election will teach them lesson.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 98 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5099
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57836
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176644
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392372