முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
போஸ்ட் மார்ட்டம் : காதலில் சொதப்புவது எப்படி ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 13
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 22 பிப்ரவரி 2012 12:51

 Kadhalil_sothapuvathu_eppadi-Love_failure_stills_2

என் லவ்ல வர்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே நா பையனா இருக்கறதும் அவ பொண்னா இருக்கறதும் தான்.

(காதலில் சொதப்புவது எப்படி? யில் சித்தார்த் பேசும் வசனம்)

இந்த வசனம் தான் படத்தின் idea.

காதலில் சொதப்பிய இளைஞன் ஒருவன் தன்னை சுற்றியுள்ளவர்கள் சொதப்பும் காதலை பற்றி நமக்கு கொடுக்கும் running commentary ..ம்ஹும்..இதை கதைன்னு சொல்லமுடியுமா..சரி ஒரு பையனும் பொண்ணும் லவ் பண்ணி பிரிஞ்சாங்க..அப்புறம் சேர்ந்தாங்க .. ம்ஹும் இதுவும் இல்லை ..சரி ஆராய்ச்சிக்கு இத்தோடு முழுக்கு போட்ன்னு மேல என்னன்னு பார்ப்போம்.

 

படத்தின் பெரிய பலம் திரைக்கதை எழுதிய பாலாஜி மோகனின், காதல் வயப்பட்டிருக்கும் ஆண் பெண் இருவரின் மனம் சம்பந்தபட்ட தெளிவான பார்வை.

kadhalil_sodhapuvadhu_eppadi_press_meet_3700

பாசத்தயும் சரி வெறுப்பையும் சரி பொண்ணுங்க காட்டற அளவுக்கு பசங்கனால என்னிக்கும் காட்ட முடியாது…

 

பொண்ணுங்க பெயிண்டிங் மாதிரி ..ஒரு ரூம்ல நாம எங்க இருந்தாலும் அந்த பெயிண்டிங்கல இருக்கிற கண்கள் நம்பல பார்க்கிற மாதியே தான் இருக்கும் ..அதே மாதிரி தான் பொண்ணுங்களும் ..அதுவும் நமக்கு புடிச்ச பொண்ணு எப்பபாரு நம்மள பாக்கற மாதிரி தான் இருக்கும் ..ஏன்னா நமக்கு அதான் வேணும். So, அது நடக்கிற மாதியே நாம நெனச்சிப்போம் ..It’s an illusion.

அப்போதான் பழக ஆரம்பிச்சிருக்கிற ஒரு பெண் தான் பாதிக்கப்பட்டிருக்கும் பர்சனலான விஷயத்தை பையன்கிட்ட சொன்னான்னா அவ அடுத்த கட்டத்திற்கு போய்டான்னு அர்த்தம்..

 

பெண்களின் கண்களில் இருந்து டேம் நீர் டெக்னிக்….அதில் உடையும் ஆண்களின் புத்தி..

 

கோபத்தில் பட்டென்று வார்த்தயை விட்டு அது பெண்ணிடம் போய் சேரும் முன்பே “அடச்சே மடத்தனமா பேசிட்டோமே” என வருந்தும் ஆண்..

 

திரைக்கதையில் சுவாரஸ்யமான விஷயம்னா நடிகர் சுரேஷின் டிராக்..அதுவும் மகளான அமலாபாலிடம் பிரிந்து இருக்கும் மனைவிடம் கொடுக்குமாறு காதல் கடிதம் கொடுத்துவிட்டு அப்படியே high speed shot ல் நடந்து வரும் போது தியேட்டரில் ஒரே அல்லோகலம்..

காட்சிகளில் எனக்கு பிடித்தது : Sports practice தான் முக்கியம் ஷாப்பிங் வேண்டாம் என்று அடம்பிடித்தவனை அவன் வாயாலேயே நா ஒரு பைத்தியக்கரான் என்ற confession வாங்கியது மட்டுமில்லாமல் ஒகே ஒகே ஷாப்பிங் வரேன் என சொல்ல வைப்பது ..

Peak காக இருவருக்கும் இடையே messaging போய் கொண்டிருக்கும் போது சித்தார்த் ஒரு நாள் முழுக்க மொபைலை வீட்டிலேயே மறந்து விட்டு வந்து பதறியடித்து இரவு வந்து மொபைலில் அவளின் messages ஐ பார்த்த சித்தார்த் திரும்ப message கொடுக்க உடனே அங்கிருந்து பதில் வர சந்தோஷத்தில் சித்தார்த் குதிப்பது…அடுத்த நாள் சந்திப்பில் அமலாபால் சோகமாய், ”எனக்கு பயமா இருக்கு” என்று சொல்லி அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகள் மனதை தொடுவதாக இருந்தது.

 

போன வருடம் காதலில் சொதப்புவது எப்படி? யை குறும்படமாக

 

பார்த்த போது உண்மையிலேயே stunning ஆக இருந்தது..அதுவும் அந்த இறுதி ஷாட் (இயக்குநர் கட் சொல்லிவிட்டு பெண்னை பார்க்க கிளம்பி செல்வது) செம க்யூட்…நான் இதுவரையில் பார்த்த தமிழ் குறும்படங்களிலேயே பட்டய கெளப்பியதாக எனக்கு(ம்)ப்பட்டது.

 

அப்போதிலிருந்தே பாலாஜி மோகன் மேல் ஒரு கண் இருந்து கொண்டே தான் இருந்தது. இந்த குறும்படக்கதையையே திரைக்கதையாக எழுதிவருவதாக கேள்விப்பட்ட போது அந்த திரைக்கதை மேல் கொஞ்சம் சந்தேகமும் நிறைய ஆர்வமும் இருந்தது. கடைசியில் இப்போது சந்தேகம் தான் ஜெயித்துள்ளது.

 kadhalil_sodhapuvadu_yeppadi_movie_stills_2999

”திரைக்கதையின் இலக்கணம் என்னவென்றால், அது எந்த இலக்கணத்திற்கும் உட்பட்டது அல்ல என்பது தான்” – இது இயக்குநர் மணிரத்தினம் திரைக்கதைப் பற்றி சொன்னது. ஆனால் ஒரு திரைக்கதை அது எந்த வகையானலும் எவ்வித பழைய திரைக்கதை கட்டமைப்பை கொண்டிருக்காமல் புத்தம் புதிதான கட்டமைப்பை கொண்டிருந்தாலும் நிச்சயம் “சுவாரஸ்யமாக கதை சொல்வது” என்ற விஷயம் அதனுள் வைத்திருக்க வேண்டும்.

 

காதலில் சொதப்பியது எப்படி ? சொதப்பியது இதில் தான் . திரைக்கதையில் நிறைய இடங்களில் ரொம்பவே வறண்டு போர் அடிக்கிறது.அதுவும் இடைவேளைக்கு பிறகு வரும் பாண்டிசேரி பகுதி ஆளவுடுங்கப்பா …படத்தின் நீளம் குறைந்த நேரமாகவே (1 மணி 50 நிமிடங்கள்) இருந்தாலும் ரொம்ப நீளமான படம் போல் அயற்ச்சியாக உள்ளது.

 

படத்தின் நாயகன் சித்தார்த் பார்வையாளனை அடிக்கடி பார்த்து பேசுவது படத்தின் டாக்குமெண்ரி தன்மையை அதிகப்படுத்துகிறது.

 

திரைக்கதையிலும் அதை படமாக்கிய விதத்திலும் நிறைய டிராமா உள்ளது.அதுவும் ஸ்டேஜ் டிராமா குணம்.அவ்வப்போது சிரிக்க வைக்க தொடர்ச்சியில்லாத ஏதோ ஒரு சம்பவமும் ஒரு செட் நடிகர்களும்..

 

கேமராவை இயக்கிய நீரவ் ஷா நான் மதிக்கும் தொழில்நுட்ப கலைஞர்.ஆனால் கா.சொ.எ யில் நிறைய காட்சிகள் மதியவேளயில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடரின் தரத்தையும் காட்சியமையும் கொண்டுள்ளது.அவ்வப்போது காமிரா முன் ஒருவர் (இயல்பாக இருக்க) நடந்து போவது படு செயற்கையாக இருந்தது.

 

மிகவும் குறைந்த பட்ஜெட்டாகவே இப்படம் திட்டமிடப்பட்டது.இந்தி மொழியில் தயாராகும் இம்மாதிரியான பல குறைந்த பட்ஜெட் படங்கள் , பட்ஜெட்டின் குறைபாடு தரத்தில் தெரியாத அளவில் சிறந்தவையாக உள்ளது.

 

கிளிஷேக்கள் : காதலிக்க தொடங்கும் முன் நாயகி நாயகன் இருவரின் சந்திப்புகள் (நோட் புக்,ஆரஞ்ச் ஜூஸ்) ,பழைய திரைப்பட பாடல் பிண்ணனியில் ஒலிக்கும் காமெடி சீன்கள் (வெங்கட் பிரபுவே அதை விட்டாச்சில்ல ?) காதல் பாடல்களை காட்சியாக்கிய விதம் ..

 

Final Opinion : காதல் பற்றிய ஒரு சுவாரஸ்யமான டாகுமெண்ட்ரி

 

Comments  

 
+1 #9 Supriya 2012-04-14 13:24
அலைப்பயா அலைப்பயா அலைபெசி அலைப்பயா பாடல் OK
Quote
 
 
+2 #8 Nelson Manickam 2012-03-22 18:37
அந்தமான் காதலி படம் பொல இனி வராது
Quote
 
 
+2 #7 kannan v 2012-03-16 13:29
காதலே ஏமாற்றம்,காதலே துன்பம்,காதலே கொடுமை.
Quote
 
 
+1 #6 Supriya 2012-03-07 10:49
காதல் ஒழ்க

காதல் தோல்வியால் ஜாடம் ஆன் வார் அதிகம்

ஒருதிய லவ் பன்னிகிடட அவ்ல்
தோழி லவ் பன்ன் ட்ரை பன்னி அவன் வாழ்க்கை நாசம் ஆன கொடுமை யாருக்குரியும்
Quote
 
 
+1 #5 SPAZIO 2012-03-07 10:38
காதலில் சொதப்புவது

ஆனால் ஆண்களின் முட்டால்தனதால் துயரம் தான்


தோழி நம்பிக்கை ரொகி

பென் இல்லாமல் ஆன் வாழ் முடியாது
Quote
 
 
+11 #4 Baba 2012-02-24 11:08
Savukku should stop publishing Movie Review. Professionalism is missing in your movie reviews.A critic must mention his name and who he are if he is criticising movies in a first person point of view. Sorry to say, these reviews doesn't make any sense..Its better not to touch things, which we are not comfortable with. Hope savukku will understand that there are much better things to write...
Regards
Baba
Quote
 
 
-10 #3 arunyog 2012-02-23 12:44
பிராமனர் வகுப்பை சேர்ந்த நடிகர்களீல்
ஜெமினி,கமல்,மாத வன் போன்றோர் மட்டுமே
தங்களது அடையாளங்களை உடைத்து
ஜெயித்தார்கள் மற்றவர்கள் தங்களை அதிமேதவியாக நினைத்துக்கொண்ட ு அரவிந்சாமி,பிரச ன்னா, மற்றும் சில நாடக
நடிகர்களின் மொக்கையனவர்களின ் வரிசையில்
சித்தார்த்தும் இணையவார்
Quote
 
 
0 #2 மெட்டி 2012-02-22 21:54
சவுக்கு

சூப்ப்ர் விமர்சனம்,


படம் பார்கவில்லை சீக்கிர்ம் பார்கனும்

சைங்கர்ர்ர்
Quote
 
 
0 #1 X 2012-02-22 20:42
:-| :-* :D :lol: :-) :-) 8) :o :eek: :zzz :sigh: :sigh: :sigh: :roll: :P :eek:
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 111 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5056
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57793
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176601
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8392329