முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
கிளம்பிற்றுக் காண் குறுநரிகளின் கூட்டம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 74
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 01 செப்டம்பர் 2010 05:30

தினமணியில் ஒரு தவ்ளூண்டு கார்ட்டூன் வந்ததுக்கே கருணாநிதி குய்யோ முறையோன்னு அலறி, கூப்பாடு போட்டு, என் பொண்டாட்டி என்ன மலடியான்னு கேட்டு, சினிமாக்காரங்களுக்கும் எனக்கும் இருக்கற ஒறவ யாராலயும் பிரிக்க முடியாதுன்னு பொலம்பனாரு. 



இந்தியா டுடே வார இதழில், தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி வளைத்துக் கட்டி எழுதியும் கூட, இது வரை காதறுந்த ஊசியும் எழுதவில்லை. கருணாநிதியும் எழுதவில்லை. 

இப்படி அமைதியாகவே இருந்தால் நமக்கெல்லாம் போர் அடிக்காதா ?

அதனால், இந்தியா டுடே வார இதழின் கட்டுரைகளுக்கு, கருணாநிதியின் சார்பாக சவுக்கே மறுப்பு எழுதுகிறது.

உடன்பிறப்பே,



முதலைக் கூட்டம் போல வளர்ந்துள்ள எனது குடும்பத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரம் கிடைக்காமல் திண்டாடும் ஒரு சூழலில், மனம் வெதும்பி ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓய்வெடுக்க ஒதுங்கும் சூழலில், இப்படி ஒரு கடிதத்தை உனக்கு எழுதுவதற்கு காரணம் என்னவென்று நீ அறிய மாட்டாய் நான் அறிவேன்.



குறுக்கே நூல் அணிந்த ஒரு குறுக்குப் புத்திக் காரர்களின் கூட்டம், குடும்பத்திற்கு, கழக குடும்பத்திற்கு எதிராக கிளம்பியிருப்பதை நீ அறிந்திருப்பாயா இல்லையா என்பதை நான் அறியேன்.

அந்தக் குறுநரிக் கூட்டம் என்னவெல்லாம் எழுதி விட்டது. கு’பேர’ குடும்பமாம். என்ன ஒரு ஆணவம் ? ஒரு குசேலக் குடும்பத்தை குபேரக் குடும்பம் என்று சொல்ல என்ன துணிச்சல் ?





‘அண்ணாசாலை ஆரியக் கூட்டத்தின்‘ கொட்டத்தை சாந்துப் பொட்டை வைத்து அடக்கிய ஒரு சில நாட்களுக்குள் ‘ராதாகிருஷ்ணன் சாலை ராட்சசர்கள்‘ புதிதாக கிளம்பியிருக்கிறார்கள்.

திருக்குவளையிலிருந்து, திருட்டு ரயிலேறி, தகரப் பெட்டியோடு சென்னை வந்து, தீயசக்தியாக உருமாறி, ஏழை உழைப்பாளி மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் என்னையா குபேரக் குடும்பம் என்கிறார்கள் ?

பெயரிலே ஆங்கிலம். உணர்விலே பார்ப்பனீயம். உள்ளத்திலே நஞ்சு. இதுதான் இந்தியா டுடே.





இந்தியா டுடே இதழை விட பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை அதிபர்களான கோயங்கா குடும்பத்தினர், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்களை தமிழக அரசின் செய்தி ஏடுகளாக மாற்றி விட்டு, பல அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி சத்தமில்லாமல் வேறு தொழிலுக்கு போக வில்லையா ?

மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று என்னால் அன்போடு அழைக்கப் பட்ட இந்து நாளேடு, இன்று கருணாநிதியின் சொம்பு நாளேடாக மாறவில்லையா ?

ஒரே ஒரு விசாரணை கமிஷன் போட்டு, டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டையும், பகவான் சிங்கையும், மண்டியிட வைக்க வில்லையா ?

அரசு விளம்பரங்களை அள்ளிக் கொடுத்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை கோபாலபுரம் டைம்ஸாக மாற்றவில்லையா ?

இன்று தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிக்கையாவது உண்மையை எழுத என்னை மீறி முடியமா ? அப்படி மீறி எழுதினால் கழக உடன்பிறப்பான நீ பொறுமை காப்பாயா ? ராதாகிருஷ்ணன் சாலையில், புறநானூற்றுப் புலிப்படை அணி வகுத்தால் என்ன ஆகும் ? ஆனால், அறிஞர் அண்ணா எனக்கு அறவழியைத் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.



தமிழுக்காகவும், திராவிட இனத்துக்காகவும் பாடுபட்டதைத் தவிர, என்ன குற்றத்தை செய்து விட்டான் இந்தக் கருணநிதி ? இந்தக் கருணாநிதி மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றுதானே, இவ்வாறு பொய்யையும், புரட்டையும், புனைசுருட்டையும், உண்மை என்று சில ஏடுகளிலே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ?

குபேரக் குடும்பம் என்று எழுதுகிறார்களே …… நாங்கள் மட்டுமா குபேரக் குடும்பம். வட இந்தியாவிலே, திருபாய் அம்பானி என்ற ஒருவர் இருந்தார். என்னைப் போலவே, பிற்பட்ட சமூகத்தில் பிறந்து, ஒரு சாதாரண பெட்ரோல் பங்க்கிலே வேலை பார்த்து, இன்று இந்தியாவே வியக்கும் அளவுக்கு ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியுள்ளாரே …. அந்தக் குடும்பம் குபேரக் குடும்பமாக தெரியவில்லையா ?





அவர் மறைவுக்குப் பின், அவரது இரு மகன்களும் சண்டையிட்டுக் கொண்டு, அந்த நிறுவனத்தை இரண்டாகப் பிரித்து இன்று அவர்கள் இருவரும் தங்களுக்கென்று தனித் தனி சாம்ராஜ்யங்களை அமைத்துக் கொள்ள வில்லையா ?

அது போலத்தானே நமது கழகமும் ? திருபாய் அம்பானிக்கு ஒரு மனைவி இரு மகன்கள், ஒரு மகள். எனக்கு மூன்று மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களின் கணக்கு சட்டென நினைவுக்கு வரவில்லை. அதனால், மூன்று பேருக்காக ஒரு லட்சம் கோடிகளை சேர்க்கும் போது, ஒரு முன்னூறு பேருக்காக ஒரு மூன்று லட்சம் கோடிகளை சேர்த்தால் அது பொறுக்கவில்லையே இந்த விபீடணர் கூட்டத்திற்கு.

வட இந்தியாவிலே ஜம்ஷெட்ஜி டாடா என்று ஒருவர் இருந்தார். அவர் மும்பாயிலே காட்டன் மில்லைத் தொடங்கினார். அவருக்குப் பின் வந்த அவர் வாரிசுகளெல்லாம், வரிசையாக தொழிலை விரிவு படுத்தி, இன்று டாடா குழுமம் என்ற மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் குபேரக் குடும்பமா, அல்லது நான் குபேரக் குடும்பமா ?

இந்தியாவிலே முதன் முறையாக ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஊழல், தியாகத் திருவிளக்கின் கணவர் அருமை நண்பர் ராஜீவ் செயல்படுத்திய போபர்ஸ் ஊழல். அந்த ஊழலின் மொத்த மதிப்பே 66 கோடி ரூபாய்தான். 

ஆனால், இந்தியாவே வியக்கும் அளவுக்கு, வாயில் விரல் வைக்கும் அளவுக்கு, எண்ணி மகிழும் அளவுக்கு, பூரிப்பால் இதயம் விம்மும் அளவுக்கு, தமிழ் கூறு நல்லுலகு பெருமை கொள்ளும் அளவுக்கு, ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை புரிந்திருப்பது ஒரு பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழன் என்பதால்தானே இந்த பொச்சரிப்பு ? வக்கரிப்பு ? மனக்கரிப்பு ? குவியும் வெறுப்பு ? என்னை அழிக்க வேண்டுமென்ற துடிப்பு ?

ஆனால், இது போன்ற தாக்குதல்களெல்லாம், கண்ணப்ப நாயினார் சிவபெருமானை கல்லால் வழிபட்டபோது, மலர்களாக மாறி அவருக்கு மரியாதை செய்தது போல எனக்கும் மரியாதை செய்கின்றன.

அய்யகோ…. இந்தியா டுடே வார இதழில் உண்மையை எழுதி விட்டார்களே…. ஊழலை அம்பலப்படுத்தி விட்டார்களே…. என்று உடனடியாக பதவி விலகி நத்தையைப் போல ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு நான் என்ன சூடு சொரணை உள்ளவனா ? காண்டாமிருகத்தை விட தடித்த தோலுண்டு. பதிலளிக்க எழுதுகோளுண்டு. கழக கண்மணிகளிடம் வீர வாளுண்டு. 

குபேரக் குடும்பம் என்று என்னை அழைக்கிறார்களே, நானும் என் குடும்பத்தாரும் அப்படி என்ன பேராசைக்காரர்களா ? வாய்க்கு வாய் திராவிடம், திராவிடம் என்று அழைத்தாலும், தெலுங்கு பேசும் ஆந்திரம், மலையாளம் பேசும் கேரளம், கன்னடம் பேசும் கர்நாடக மாநிலங்களை அப்படியேவா விலைக்கு வாங்கி விட்டோம் ? தமிழகத்தையும் பாண்டிச்சேரியையும் அபகரித்து விட்டு திருப்தியோடு இருக்கவில்லை ? 

பெங்களுருவில் இப்போதுதான் கால் பதித்திருக்கிறோம். கேரளாவுக்கு, குமுளி வழியாக இப்போதுதான் புறப்படத் தொடங்கியிருக்கிறோம். சந்திரபாபு நாயுடுவிடம் இப்போதுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்குள்ளாக என்ன அவசரம் ?

பேராசைக் காரனைப் போல என்னை சித்தரித்திருக்கிறார்களே ? கொடுக்கும் மனமற்றவனா இந்தக் கருணாநிதி ? இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கவில்லை ? கேரளாவுக்கு முல்லைப் பெரியாறை வழங்க வில்லை ? ஆந்திரத்துக்கு பாலாற்றை வழங்கவில்லை ? கர்நாடகத்துக்கு காவிரியை வழங்கவில்லை ? சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காக எனது மானம் மரியாதையெல்லாம் வாரி வழங்கவில்லை ? என்னைப் போய் பேராசைக்காரன் போல எழுதியிருக்கிறார்களே ?

எஜமான் படத்திலே தம்பி நெப்போலியன் ஒரு வசனம் பேசுவார். கல்யாண வீடு என்றால் நான்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். இழவு வீடு என்றால் நான்தான் பிணமாக இருக்க வேண்டும் என்று. அந்த வசனத்தை நான் எழுதவில்லையே தவிர, அந்த வசனத்தின் படிதானே நான் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறேன்.





திருக்குவளையிலிருந்து வந்த ஒரு தமிழன் வந்தான். வென்றான் என்று மட்டும் இல்லாமல், மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம் போலவோ, பில் கேட்ஸ் போலவோ, வாரன் பஃபெட் போலவோ முகேஷ் அம்பானி போலவோ, லட்சுமி மிட்டல் போலவோ, உலக பணக்காரர்களில் ஒருவன் இந்தக் கருணாநிதி. அவன் மட்டுமல்லாமல், அவன் குடும்பத்தினர் அனைவரையும் உலக பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி விட்டான் என்று வரலாற்றில் எழுதி விடப் போகிறார்களே என்று அஞ்சியல்லவா இன்று இந்தியா டுடே என்ற ஏடு எழுதி கிழித்திருக்கிறது ?

இது போன்று இந்தியா டுடே என்ற நாளேடு அன்றே எழுதும் என்று அறிந்துதான் அண்ணா, அடைந்தால் திராவிட நாடு என்று சொன்னார். நிரந்தரமாக பாம்புக்கும் பல்லிக்கும் நடுவே வைத்து விடுவார்களோ, என்று எண்ணி இன்பத் திராவிடத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் விளைவுதானே இது போன்ற இந்தியா டுடே என்ற ஏடுகள் ஆட்டம் போடுகின்றன ?


இன்பத் திராவிடம் அமைந்திருந்தால் இந்தியா டுடே ஏடு இருந்திருக்குமா ? திராவிடா டுடே என்றுதானே ஒரு ஏடு இருந்திருக்கும். அதையும் என்னுடைய ரைசிங் சன் யாராவது ஒருவர் தானே நடத்திக் கொண்டிருப்பார்கள் ?

ஆனந்தத் தாண்டவம் போடும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிக்க வேண்டாமா ? கொட்டத்தை அடக்க வேண்டாமா ? என்று எண்ணி எனது அன்பு உடன்பிறப்புகள் ஆர்ப்பரிப்பது எனக்கு தெரிகிறது. ஒரு புறம் பழக்கடை அன்பழகனும், மறுபுறம் விஎஸ் பாபுவும், மற்றொரு புரம் உசேனும், தெற்கே ஸ்டிக்கர் பொட்டும் கிளம்புகிறது என்றால், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அன்பு இளவல் ஐபிஎஸ் அதிகாரி என்பதையும் மறந்து, நோன்பை துறந்து, கழக உடன்பிறப்பாக மாறி அந்த அலுவலகத்தை துவம்சம் செய்ய புலியென புறப்பட்டு வருகிறார்.

இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறான் இந்தக் கருணாநிதி ? எப்படி அடக்கப் போகிறான் இந்த புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை ?

இந்த நேரத்திலேதான் காதில் தேனினும் இனிமையாக கழகத்தின் நிரந்தர இளைஞர் அணித் தலைவரும், துணைப் பொதுச் செயலாளர்களிலே ஒருவரான மு.க.ஸ்டாலினைப் பற்றி சிறப்பு மலர் ஒன்று அந்த ஏடு கொண்டு வரப் போவதாக செய்தி அறிந்தேன். 

வன்முறையிலே என்றுமே நம்பிக்கை இல்லாதவன் இந்தக் கருணாநிதி. அறிஞர் அண்ணா என்னை கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டோடுதான் வளர்த்திருக்கிறார். அதனால், இந்தப் புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை இப்போதைக்கு அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது நானும் எனது குடும்பமாகவும் இருக்க வேண்டும் என்பது தானே வள்ளுவன் வாக்கு ?

ஊரையடித்து உலையில் போட்டு; குடும்பத்தோடு
நிம்ம தியாக வாழ்

என்றுதானே அய்யன் வள்ளுவன் எனக்கு கற்றுத் தந்திருக்கிறான் ? இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே ?.

அன்புடன் 

மு.க

நன்றி இந்தியா டுடே வார இதழ்

 

Comments  

 
+1 #32 yuyuthsu 2011-08-13 15:08
'sealed tenders are invited for the purchase of entire tamilnadu and pondicherry' contact cm and his family tree.
This will be the first action by the erstwhile cm of taimlnadu had he been voted to power again. Thanks to the people of Tamilnadu for their prudent voting.
Quote
 
 
+2 #31 k.moorthi 2011-08-09 23:24
ஆடினகாலும் பாடின வாயும் நிர்கவெ நிர்க்கது அது போல இந்த பயலுகலொட திருட்டுகையும் நிர்க்கவெ நிர்க்கது
Quote
 
 
+2 #30 velavan 2011-07-28 13:23
இப்படியே பேசி பேசி வாய் வலிக்கும் ,எழுதி எழுதி கை வலிக்கும் இந்த நாய ஒன்னும் செய்ய முடியாது.
திருடர்களுக்கு இவந்தான் தலைவன்
கொலைகாரர்களுக்க ு இவந்தான் தலைவன்
கொள்ளைக்காரர்கள ுக்கு இவந்தான் தலைவன்
கூட்டி குடுப்பவர்களூக் கு இவந்தான் தலைவன்
பேரசைக்காரனுக்க ு இவந்தான் தலைவன்
Quote
 
 
+2 #29 Chandrasekaran 2011-06-10 19:10
Sh Dhirubhai Ambani does not belong to Sceduled Caste as mentioned in this article even when it is written as thou written Karunanidhis .No wonder if in reality karunannidhi would even consider Ambanis as brahmins.Sachin tendulakar was appreciated by Karunannidhi who did not even had diplomatic dicipline to appreciate Nobel Laurette Venkataraman just because he is a brahmin
Quote
 
 
+2 #28 murw 2011-05-27 19:29
:ழ்ழ்ழ்

ஹி
நட் எஃப்2நெப்ஃப்ஜ்ந ்ஜெ
Quote
 
 
+3 #27 SnazzyKing 2011-05-09 15:27
Serupu... Adiiii...
Quote
 
 
+2 #26 A.Baskaran 2011-03-02 13:37
Simply amazing.....
Quote
 
 
+2 #25 karthe 2011-02-14 12:45
very nice. inimel kalaingarae ungakita pitchai vanganum
Quote
 
 
-6 #24 thamilan 2010-12-16 22:24
ungalukku karunanithi kudumbam valarnthadhu piranchiniah illai dmk oliyavendum enbatha illai dravidam ungalalin piranchiniah devar thamilar nadar thamilar agamudaya thamilar gounder thamilar pallar thamilar kallar thamilar p.chidamparam thamilar muthuramalinga devan thamilar ithil yarum dravidan illai pavanan chettiar thamilar seeman chrithava nadar thamilar yadavar thamilara santhegamaga irukirathu kondaynkottai maravar vantheri telgar unmaiyai thedungal unarchi vasapaduthi usupethi eelam kondreergal yanai sethalum ayeram pon iranthalum ayirum pon puliyai vaithu arasial seidhu pilaipatharku cho.ramasamy subramania swamy jeyalalithavai nakki pilaikalam
Quote
 
 
+10 #23 sena 2010-11-15 12:48
இந்த மானங்கெட்ட பொழப்புக்கு பொய் டெல்லி ஜி. பி ரோடுல ஜிப்ப போட்டு மாமா வேல பாக்கலாம்
Quote
 
 
+3 #22 tamilan 2010-10-09 12:28
good
Quote
 
 
+2 #21 Rajesh 2010-10-08 21:45
Article's published in this websites are really very good ..pls keep going we are with u...................
Quote
 
 
+3 #20 raju 2010-10-06 11:40
Thala yeanna thillu unakku. nanum reporter than . un writting style yanakku munmathiriya ertkku.life la unnai oru muraiyavathu parthidanum thala.
Quote
 
 
0 #19 palanivenkatesan 2010-10-05 06:53
good article for karunanithi family politics
Quote
 
 
+3 #18 Thamizan 2010-09-24 06:58
நல்ல ஒரு புனைவு , நன்றாக இருந்தது இந்த உரை, தீயவன் என்றாவது ஒரு நாள் தண்டனை அனுபவித்தே ஆகணும்
Quote
 
 
-1 #17 ramesh deni 2010-09-20 21:13
Good job, Savuku, Savuku kuchiya odachirama pathukunga.
Quote
 
 
+4 #16 Ramamoorthy 2010-09-15 21:12
suLiir! suLir! suLiir!
sariyaana savukkadi.
enna adi,adiththaalu m ellaam eRumai maattil mazai peytha kathaithaan.
Quote
 
 
0 #15 ksmuthu 2010-09-15 16:48
Sir,

Kindly sent those pages in pdf format pls
Quote
 
 
+1 #14 tharani 2010-09-14 22:55
valthukal,panit hodarattum.
Quote
 
 
+1 #13 Elayaraja 2010-09-14 15:39
Dear Mr Savukku, Excellent !
Quote
 
 
+8 #12 நெத்தியடி 2010-09-13 20:36
கருணாநிதி முன்பு பணம் சம்பாதிபதர்க்கா க முதலில் அரசியலுக்கு வந்தார் இப்போது பணத்தை பாதுகாப்பதற்க்க ாக பதவியை பயன் படுத்துகிறார்
Quote
 
 
+1 #11 Ramar 2010-09-13 15:11
nalla adi
Quote
 
 
+1 #10 avudaiappan 2010-09-13 03:38
very good..brilliant
Quote
 
 
-1 #9 மானம்கெட்டவன் 2010-09-13 00:29
தல கலக்குற.பாதுப்பா அவனமாதிரி எழுத ஆருமிசி நீ கவுந்துரபோற,மோச மான கைங்க அதுங்க.கொஞ்சநேரம் அதுங்க பேர சொல்லிகினுருந்த ோம் நாமலே கல்ப்ரிட் ஆய்டுவோம் பாத்து உசாரா இருந்துக்கோ.
Quote
 
 
+1 #8 kuppusamy 2010-09-12 18:10
Dear Mr Savukku, Excellent ! you are one of the great investigative journalists in TN. Pl continue your great work.

Rgds.....
Quote
 
 
0 #7 Natarajan ponnambala 2010-09-11 22:33
good story..saryana savukku than :roll:
Quote
 
 
0 #6 singan 2010-09-11 19:39
savukku kural nalla Nagaichuvai.
Quote
 
 
0 #5 vijay 2010-09-10 19:11
innum indha thimuka ennum thillu mullu kazhagam enna enna kodumaigalai seiyapogudho endru romba bayamaaga irukiradhu.ozhiga thimuka ennum thillu mullu kazhagam or thirudargal munnetra kazhagam.
Quote
 
 
0 #4 Gopi 2010-09-10 18:12
Weldon keep it up.
thiruvaroor theya sakthi yai naar,naaraga kezhikanum. kezhatu payaluku innum pathavi assai!!
Quote
 
 
0 #3 ramkumar 2010-09-10 13:15
please keep it up. atleast some one in tamilnadu has has the guards to talk the truth against this swindling gang.
Quote
 
 
0 #2 premkumar 2010-09-10 11:15
iyya dinamum paper padithee nattil nadakkum nigalvugalai ellam parthuu rathamm kothukkirathu ithil neenga verru kili kilinuu kilikkirenga ithayallam padithuu eneakellam ethavathu atchunna unga saavukku website than poruppu !!!!
Quote
 
 
0 #1 Lakshmidharan 2010-09-10 03:38
Piramaadham poongal Kolaignarai minjivitteergal .
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 54 விருந்தினர்கள் மற்றும் 1 உறுப்பினர்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2282
mod_vvisit_counterYesterday10960
mod_vvisit_counterThis week47628
mod_vvisit_counterLast week74101
mod_vvisit_counterThis month262018
mod_vvisit_counterLast month376831
mod_vvisit_counterAll days7425095