|
கருணாநிதி மீண்டும் என்னை ஆறாவது முறையாக முதலமைச்சராக ஆக்குங்கள் என்று உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்காக கருணாநிதி தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கின் படி, (பிள்ளைகள், மகள், மகன்கள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள் சொத்து நீங்கலாக) பல கோடிக்கு அதிபதி.
சரி, தனது அரசியல் வாழ்வை தொடங்கி, அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஆரம்ப காலத்தில் கருணாநிதியின் சொத்துக் கணக்கை பார்ப்போமா ?

இந்த விபரங்கள் சவுக்கு சொல்வது இல்லை. கருணாநிதியின் ஊழல்களை விசாரித்த நீதிபதி சர்க்காரியா சொன்னது.
கோபாலபுரம் நான்காவது தெருவிலுள்ள இரண்டாவது எண்ணுள்ள வீட்டை ரூ.50,000க்கு வாங்கியது. அதற்காக நிதி ஆதாரம்.
MSR 1335 என்ற எண்ணுள்ள காரை 5,000
விற்றதிலிருந்து கிடைத்த தொகை
மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து 45,000
கடனாக பொற்ற தொகை
இந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனமே ஒரு டுபாக்கூர் நிறுவனம். இந்த நிறுவனத்தில், யார் பங்குதாரர்கள் என்பது தெரிந்தால் உங்களுக்கே புரியும்.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் 1951ல் தொடங்கப் பட்டது. இந்த நிறுவனத்தில், கருணாநிதி, காசிலிங்கம் மற்றும், கேடி சகோதரர்களை பெற்றெடுத்த புண்ணியவான் மாறன் ஆகியோர் பங்குதாரர்கள்.
காசிலிங்கம் என்பவர், 1965ல் அந்நிறுவனத்திலிருந்து விலகிக் கொண்டார். பிறகு, மாமனும் மருமகனும் மட்டுமே பங்குதாரர்கள். இந்த நிறுவனம், கருணாநிதி முதலமைச்சராக இருந்து சம்பாதித்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக பயன்படுத்தப் பட்டது.
கருணாநிதி முதலமைச்சரானதும், இந்நிறுவனத்தின் பங்குதாரராக இருப்பதிலிருந்து விலகுகிறார். விலகியபின், தயாளு அந்நிறுவனத்தின் பங்குதாரராகிறார். இந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்திலிருந்து கருணாநிதி பெற்ற கடன் விபரங்கள்.

31.03.1967 2,55,112
31.03.1968 2,87,112
31.03.1969 2,77,112
31.03.1971 2,88,002
இந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனம், கருப்பை வெள்ளையாக்குவதற்கு பயன் பட்டது என்று கூறப்பட்டது அல்லவா ? எப்படி வெள்ளையாக்குகிறார்கள் என்று பார்ப்போம்.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களில் பல்வேறு நபர்கள் பல்வேறு தொகைகளை கடனாக கொடுத்ததாக எழுதப் பட்டிருந்தது. அவர்கள், விசாலாட்சி ஆச்சி, காசிநாதன் செட்டியார், ராமநாதன் செட்டியார், சௌந்தரவல்லி ஆச்சி, சொக்கலிங்கம் செட்டியார், சுந்தரம் செட்டியார், சோமசுந்தரம், ராம.வெள்ளையன், லட்சுமி, மாணிக்கச் செட்டியார், உண்ணாமலை ஆச்சி, இந்திரா ஆச்சி, லட்சுமணன் செட்டியார், திருநாவுக்கரசு செட்டியார், திண்ணப்ப செட்டியார், கருப்பன் செட்டியார், லட்சுமணன் செட்டியார் ஆகியோர்.
இவர்களிடம் கடன் பெறப்பட்டதாக கணக்கு எழுதப் பட்டிருந்தது. இந்தப் பெயர்களில் ராம.வெள்ளையன் என்பவர்தான், திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுக்கும் தரகராக செயல்படுபவர்.
இந்த ராம.வெள்ளையன் சர்க்காரியா கமிஷன் முன்பாக அளித்த சாட்சியம் என்னவென்று பார்ப்போமா ?
“இவர் 1976ம் ஆண்டு ஜுலை திங்கள் 5ம் நாளிட்ட தனது உறுதி மொழிப் பத்திரத்தில் தாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் என்றும், திரு.மு.கருணாநிதியை இருபது ஆண்டுகளாக்கு மேலாகத் தெரியும் என்று கூறியிருந்தா. 1970ல் எப்போதோ ஒரு தடவை மேகலா பிக்சர்ஸ்சாரின் கணக்குகளில் சிலரது பெயரில் ரொக்கக் கடன் வசதி பெறுவதற்காக குறிப்பாக, தேவக்கோட்டையில் பணம் தருபவராக பெயர் மட்டும் கொடுக்கின்ற செட்டியார்கள் சிலரின் பெயர்களை சேகரித்துத் தருமாறு திரு.கருணாநிதி இவரது உதவியை நாடினார். திரு.கருணாநிதி விரும்பியவாறே வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் சிலரின் பெயரைச் சேகரித்துத தர சாட்சி ஒப்புக் கொண்டார். மேலும், தனது பெயரிலும், தனது மனைவி திருமதி.வி.லட்சுமி பெயரிலும், ரொக்க வரவு வைத்துக் கொள்ளவும் அவர் ஒப்புக் கொண்டார். இவ்வாறு மேகலா படத்தயாரிப்பு நிறுவனத்தின் கணக்குகளில் மேற்குறிப்பிட்ட 18 பேர்களில் மொத்தம் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை கருணாநிதி கணக்கில் கொண்டு வந்தார். ராம.வெள்ளையன் மேலும் தெரிவித்ததாவது, 1973ம் ஆண்டு இறுதியிலோ, 1974ம் ஆண்டு தொடக்கத்திலோ திரு.கருணாநிதி அவரைக் கூப்பிட்டனுப்பி வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரித்து வருவதால், ரொக்க வரவுக்காக அவர் சேகரித்துத் தந்த பெயர்களில் அவர்கள் பணம் கொடுத்ததாக உறுதி செய்யும் கடிதங்களை தயாரித்து அவற்றில் அவர்களது கையொப்பங்களை பெற்றுத்தருமாறு அவரிடம் கேட்டார். ரொக்க வரவுக்கு ஆதரவாக போலி புரோநோட்டுக்களை தயாரிக்குமாறு திரு.கருணாநிதி ராம.வெள்ளையனிடம் கூறினார். அப்போது சில கடிதங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்காளர் அழகுமாணிக்கம் என்பவரால் தயாரிக்கப் பட்டு தட்டச்சு செய்யப் பட்டன. காசோலைகள் கடன் கொடுத்தவர்கள் பெயருக்கு வழங்கப் படும் என்றும், அந்தக் காரோலைகளை மாற்றி பணத்தை மேகலா பிக்சர்ஸார் பயன் படுத்திக் கொள்வதற்காக காசோலைகளின் பின்புறத்தில் கடன் கொடுத்தவர்களின் கையொப்பத்தை அவர் பெற வேண்டும் என்றும் ராம.வெள்ளையனிடம் கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கீழ்கண்ட விபரங்கள் தெரிய வந்தன.

கொடுத்துள்ளதாகக் கூறப்பட்ட கடன்களுக்கு ஆதரவாக இருக்கும் புரோநோட்டுக்களையும், கடனைத் திருப்பிக் கொடுத்தவகையில் வழங்கப்பட்டதாகத் தோன்றும், ரொக்கமாற்று காசோலைகளையும், சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள இந்தியன் வங்கி கிளையிடமிருந்து வருமான வரித் துறை கைப்பற்றியது. கொடுத்துத் தீர்க்கப் பட்ட புரோ நோட்டுக்களின் மீது கடன் கொடுத்ததாக கூறப்படுபவர்களின் கையொப்பத்திற்கும் கடன்கள் பெற்றுக் கொண்டதை உறுதிப் செய்து அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளதாக கூறப்படுபவைகளையும் 05.02.1974 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு தாக்கல் செய்துள்ள கடிதங்களில் உள்ள அவர்களது கையொப்பங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. பல இடங்களில் கையொப்பங்கள் வேறுபட்டன. கடன்களை திருப்பிக் கொடுத்தவகையில் அவர்களுக்கு வழங்கப் பட்ட ரொக்க மாற்றுக் காசோலைகளின் பின்புறத்தில் அவர்கள் இட்டுள்ளதாக தெரியவந்த கையொப்பங்களும் வேறுபட்டிருந்தன.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களை ஆய்வு செய்ததில், அந்நிறுவனத்தின் நிதிகளை கருணாநிதியும் அவரது நெருங்கிய உறவினர்களும் எடுத்துள்ள தொகை பின் வருமாறு:
1967-68
மு.கருணாநிதி 45,000.00
மாறன் 69,115.70
அமிர்தம் 3,179.73
1968-69
தயாளு 2,582.00
அமிர்தம் 1,320.00
1969-70
அமிர்தம் 1,320.00
1970-71
மாறன் 96,675.00
தயாளு 9,000.00
அமிர்தம் 600.00
1971-72
தயாளு 15,922.00
மாறன் 4,600.00
செல்வம் 15,000.00
1972-73
மாறன் 10,500.00

எப்படி கருணாநிதி குடும்பம் லஞ்சப் பணத்தை வெள்ளையாக்குவதில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா ?
சரி… இவர்கள் கணக்குப் படியே வைத்துக் கொண்டாலும் கருணாநிதி மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து 45,000 ரூபாய் கடன் வாங்கித் தான் கோபாலபுரம் வீட்டை வாங்கினார். ஆக, 1971ம் ஆண்டு, கருணாநிதியிடம் 45,000 ரூபாய் கூட இல்லை.
2011ல் கருணாநிதியின் சொத்துக்களைப் பாருங்களேன்…..
கருணாநிதி கையில் உள்ள ரொக்கம் 15,000
இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளையில் நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit) 3 கோடி, 1 கோடி, 33,920 ரூபாய், 13,15,232 ரூபாய்.
அடையாறு கரூர் வைஸ்யா வங்கி 13,74,664 ரூபாய்.
கர்நாடகா வங்கி வைப்பு நிதி 39,62,995 ரூபாய்.
இந்தியன் வங்கி ராயப்பேட்டை கையிருப்பு ரூபாய் 10,956
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மஹாலிங்கபுரம் ரூபாய். 11,135
இந்தியன் வங்கி கோடம்பாக்கம் ரூபாய் 11,39,441
ராசாத்தி அம்மாளுடன் ஜாயின்ட் அக்கவுன்ட்.
இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலை ரூபாய் புரம் ரூபாய். 13,15,180

முதலில் மனைவி தயாளு அம்மாள்.
ரொக்க கையிருப்பு ரூபாய் 30,000
நிரந்தர வைப்பு நிதி இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளை
1 கோடியே 20 லட்சம்.
3 கோடியே 50 லட்சம்
ரூபாய் 3,90,373
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,98,247
ரூபாய் 32,50,255
இந்தியன் வங்கி கொத்தவால் பாசார்
ரூபாய் 6,98,250
ரூபாய் 6,93,579
ரூபாய் 13,92,503
ரூபாய் 1,40,723
கர்நாடகா வங்கி. கோடம்பாக்கம்
ரூபாய் 13,74,664
கரூர் வைஸ்யா வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய் 30 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய்.2,66,226
சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய்.1,65,380

அடுத்து துணைவி ராசாத்தி அம்மாள்.
இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலை புரம்
நிரந்தர வைப்பு நிதி.
ரூபாய் 15,00,000
ரூபாய் 33,04,087
ரூபாய் 1,14,93,325
ரூபாய் 10,55,641
ரூபாய் 6 கோடியே 67 லட்சத்து 53 ஆயிரத்து 14
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, ராயப்பேட்டை
ரூபாய் 6 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 753
ரூபாய் 46,78,221
சேமிப்புக் கணக்கு, இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலைபுரம்.
கையிருப்பு ரூ.11,378
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, ராயப்பேட்டை
ரூபாய்.4,84,027
தயாளு அம்மாள் வணிக முதலீடுகள்.
கலைஞர் டிவி பங்குகள் ரூபாய் 6 கோடியே 60 லட்சம்
ராசாத்தி அம்மாள் வணிக முதலீடுகள்
வெஸ்ட்கேட் லாஜிஸ்ட்டிக்ஸ் பங்கு 2 கோடியே 50 லட்சம்
சொந்தத் தொழில் முதலீடு
ரூபாய் 2 கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 878
வாகனங்கள்.
தயாளு அம்மாள்.
ஹோண்டா அக்கார்டு கார்
ரூபாய்.16,02,321
இது வரை சொன்ன படி, கருணாநிதியின் மொத்த சொத்து மதிப்பு
ரூபாய் 4 கோடியே 96 லட்சத்து 56 ஆயிரத்து 855
மனைவி மற்றும் துணைவிகளின் சொத்து மதிப்பு
ரூபாய் 36 கோடியே, 2 லட்சத்து 47 ஆயிரத்து 287
இது போக தயாளு மற்றும் ராசாத்தியின் பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு
தயாளு ரூ.5,51,1000
ராசாத்தி ரூபாய் 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628
கருணாநிதி, மனைவி, துணைவி ஆகியோரின் பெயரில் இருக்கும், சொத்துக்களின் மதிப்பு மட்டும் 44 கோடியே 18 லட்சத்து 93 ஆயிரத்து 770.

இந்தக் குடும்பத்திடம் மீண்டும் ஒரு முறை தமிழகத்தை ஒப்படைத்தால் என்ன ஆகும் ?
|
Comments
i appreciate your willingness....can savukku do this?....i think he can't
Nadu enga poguthunnu theriyala
"மத்திய மந்திரி மு.க.அழகிரி மீது பொய் வழக்கு போட வற்புறுத்துகிறா ர்; மதுரை கலெக்டர் மீது கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி புகார்" என்று photo படம் போட்டு விளம்பரம் ? சவுக்கு சொன்ன மாதிரி இந்தக் குடும்பத்திடம் மீண்டும் ஒரு முறை தமிழகத்தை ஒப்படைத்தால் என்ன ஆகும் ?
``தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்று நான் பேசவில்லை. கட்சிப் பாகுபாடு இன்றி நேர்மையாகக் கடமையாற்றுகிறேன ்" என்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியராகவும், மாவட்ட தேர்தல் அலுவலராகவும் உள்ள சகாயம் தேர்தல் விழிப்புணர்வு கூட்டங்களில் ``தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை" என்று பகிரங்கமாக பேசிவருவதாக தி.மு.க. தென்மண்டல அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி குற்றம்சாட்டியி ருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாகவ ும் தெரிவித்திருந்த ார்.
இது குறித்து சகாயத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியது, ``நான் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு, மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நேர்மையான சமுதாயத்தையும், நாட்டையும் உருவாக்க மாணவர்கள் சமுதாயம் தயாராக இருக்க வேண்டும்.
அதற்கு லஞ்சம் வாங்காமல் வாக்களிக்கும் வகையில் மாற்றம் வேண்டும் என்றும் அனைவரும் வாக்களித்து நூறு சதம் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தேன். எந்த மாவட்ட ஆட்சியரும் 'ஆட்சி மாற்றம் தேவை' என்று பேச மாட்டார்கள். எந்த இடத்திலும் நான் அப்படி பேசவில்லை. என் பேச்சுகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ள ன. தேவைப்பட்டால் அதைப்போட்டுப் பார்த்துக்கொள்ள லாம்.
என் பணியை திசைத் திருப்பும் செயலாகவே இது போன்ற குற்றச்சாட்டுகள ை கருதுகிறேன். கட்சிப்பாகுபாடு இன்றி நேர்மையாகக் கடமையாற்றி வருகிறேன். இதுவே நேர்மையான ஆட்சியர்களின் கடமையாக இருக்கும்" என்றார் சகாயம்.
நரேந்திர மோடியைப் போல மீண்டும் ஆட்சி அமைப்பார் கருணாநிதி: நெப்போலியன்
First Published : 02 Apr 2011 11:53:31 AM IST
Last Updated :
காரைக்கால், ஏப். 1: நல்லாட்சி தந்து மீண்டும் ஆட்சி அமைத்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட முதல்வர்களைப் போல, தமிழகத்தில் கருணாநிதி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்றார் மத்திய இணை அமைச்சர் து. நெப்போலியன்.
திமுக வேட்பாளர் ஏ.எம்.எச். நாஜிமை ஆதரித்து பிரசாரம் செய்ய காரைக்கால் வந்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணை அமைச்சர் நெப்போலியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிட ம் கூறியது:
தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில், மக்கள் ஆதரவு பெருகியுள்ளது. தமிழக அரசு செய்த சாதனைகளால் மக்கள் எழுச்சி பெற்றுள்ளனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நல்லாட்சி தந்ததால் மக்கள் மீண்டும் அவர் ஆட்சி அமைக்க வாக்களித்தனர்
என்ன ஆகும் ... தமிழ்நாட்டு எல்லைகளில் இப்படி ஒரு போர்டை பார்க்கலாம்..
"இது தனியாருக்கு சொந்தமான மாநிலம் அத்து மீறி நுழைவோர் தண்டிக்கபடுவார் கள்"
கேஸ் பெங்களூர்ல இருக்கிறதால அதை பற்றி பேசவில்லை எனில் , ஸ்பெக்ட்ரமும் சுப்ரீம்கோர்ட்ட ில் தானே இருக்கிறது அதை பற்றி மட்டும் ஏன் அவ்வளவு விவாதம் சவுக்கு. நாங்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது நடு நிலை மட்டுமே. இதில் அதிமுக சார்பும் இல்லை , திமுக சார்பும் இல்லை. நடு நிலையே . ஆனால் வர வர நீங்கள் அதிமுக சார்பு நிலையையே கையாளுகிறீர்கள் . எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லா கொள்ளியோ அதை எடுத்து சொரிந்து கொள்ளுங்கள் (இப்போது திமுக வை ஒழிக்க அதிமுக கொள்ளி நல்லா கொள்ளி ) என்றது போல் உள்ளது உங்களுடைய சமீபத்திய கட்டுரைகள் எல்லாமே.
ஜெயலலிதா ஆட்சியில் ஐ.ஏ. எஸ். மேலேயே ஆசிட் வீசியவர்கள் இவர்கள்.
டி.என். செஷன் க்கு என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியாதா. வக்கீல் விஜயனின் நிலைமையும் உங்களுக்கு தெரியாத.
First Published : 01 Apr 2011 05:07:59 PM IST
Last Updated :
மும்பை, ஏப்.1- இலங்கையில் வாழும் தமிழர்களின் பிரச்னையை கிரிக்கெட் மூலம் தீர்க்க ஏன் மத்திய அரசு முயற்சி எடுக்கவில்லை என்று சிவசேனை தலைவர் பால் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார் .
இதுகுறித்து சிவசேனையின் கட்சிப் பத்திரிகையான "சாம்னா"வில் அவர் இன்று எழுதியுள்ள தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள ார்.
"இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளன ர். பாகிஸ்தானுடன் நட்பை மேம்படுத்த கிரிக்கெட் தூது முறையை நாம் கடைபிடிக்கிறோம் . இதே வழியில், இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் பிரச்னையை தீர்க்க ஏன் முயற்சி எடுக்கவில்லை?" என்று பால் தாக்கரே எழுதியுள்ளார்.
"பாகிஸ்தான் பிரதமருக்கு கிரிக்கெட் பார்க்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது போல், இலங்கை அதிபருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதா ?" என்றும் அவர் கேட்டுள்ளார்.
"இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் கவனத்தை ஈர்க்கவே பாக். பிரதமர் கிலானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள ்ளது. கிரிக்கெட்டை பயன்படுத்தி நடைபெற்ற பேச்சுவார்த்தைய ில் இருநாடுகளுக்கு இடையே உள்ள எத்தனைப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டன என்பது தெரியவில்லை.
Note: He blamed Kamaraj as he had an account in Hyderabad and has huge money. How many bank account, normal and genune busienss men never have those many accoutns.
You wont see that in Pro ADMK sites like Savukku, look for it else where. It is difficulty to find because Pro DMK sites do not waste their time in proving what is already known to every one. Every one knows how corrupt JJ is.
What about Sarkaria commission found Karunanidhi guilty? That is about 30 years old. People want to throw out looters of Tamilnadu.
Nakkheran has predicted 160 seats for DMK
Looks like People have made up their mind and as days roll by momentum will shift to Winning alliance.
Saidai Duraiswamy is giving tought fight to Stalin and in Tiruvarur Jaya drew massive crowd .
Some efforts are on to bring some closure in Bangalore court case to put pressure on Jayalalitha. Also Raja may come on bail and Kani's chargesheet may be delayed.But nothing is going to help as the people want change
So far Outlook-MRDA
Headlines Today- Marg,Ananda Vikatan
Lensoneye.com have predicted AIADMK win.Nakkheeran has predicted DMK Victory.
Asianet Survey results is not yet known
ஆந்திராவிலிருந் து அழுக்கு துணியுடன் வந்த முத்துவேலுவுக்க ு இருந்த மன அமைதி அவரது மகன் இப்போதய கருணாநிதிக்கு இல்லை!!!. இத்தோடாவது கருணாநிதி கொள்ளையிலிருந்த ு விலகிவிடுவது நல்லது. தொடருவாராக இருந்தால் கடவுளுக்கு கொடுக்கவேண்டிய கணக்குடன் நீதிதேவதையையும் நிச்சியம் சந்திக்கவேண்டிவ ரும்,
ஏன் பத்மன் இப்படி செய்தால் என்ன?
இப்போ ஜெயாவிற்கு ஓட்டளித்து,ஆட்ச ியை ஒப்படைப்போம்.
2016 லும் அவர்களுக்கே ஓட்டளிபோம்.
எனவே இந்த 10ஆண்டுகளில் தி.மு க அழிந்து விடும்.
2021ல் ஜெயாவைத்தோறகடிப ்போம்!
என்ன சரியா?
http://sagamanithan.blogspot.com/2011/03/election-commission-or-commissined.html
சகமனிதன்-உங்களில் ஒருவன்
முதல் முறை முதல் அமைச்சர் 1969-76..மத்தியில் காங்கிரஸ்
இரண்டாம் முறை 1989-91 மத்தியில் Non-காங்கிரஸ்
மூன்றாம் முறை 1996-2001 மத்தியில் BJP
நான்காம் முறை 2006-11 மத்தியில் காங்கிரஸ்
கருணாநிதியின் ஊழல உச்சத்தில் இருந்தது
அவருடைய முதல் மற்றும் நான்காம் முறையில்...
கருணாநிதி just exploited the situation
அவர் வெற்றிக்கு நேர்முகமாகவோ,மற ைமுகமாகவோ உதவியோர்..
MGR
+இந்திரா காந்தி
+ஜெயலலிதா
+நரசிம்மராவ்
+ஜி.கே மூப்பனார்
+வாஜ்பாய்
+சோனியா
+மன்மோகன்சிங்
+பல நீதிபதிகள்,போலீ ஸ்,நிர்வாகத்துற ை அதிகாரிகள்
+ரஜினிகாந்த்
+தமிழ் மக்களின் சுயநலம்,அடிமனதி ல் இழையோடி கொண்டிருக்கும் பார்பன துவேஷம்
+இறைவன்
எனவே மேலே உள்ள அனைவரும் ஒருவகையில் குற்றவாளிகளே
கொஞ்சம் ரசக் குறைவுக்கு மன்னிக்கவும் -- என்ன கொடுமை 'சவுக்கு' இது, முதலில் ராசாத்தி அம்மாள் 'சொந்தத் தொழில் முதலீடு'! என்ன இழவு இது... அதைத் தவிர - மனைவி தயாளு அம்மாள் நிரந்தர வைப்பு நிதி! அடுத்து துணைவி ராசாத்தி அம்மாள் நிரந்தர வைப்பு நிதி வேறு!
இப்படியே அனைத்து தமிழ் பெண்களையும், வங்கியில் வைப்பு நிதி வைத்திருந்தால், கருணாநிதி தன் வீட்டிற்கு கூட்டிப் போய் வைப்பு ஆக்கி விடுவாரோ என்னமோ! ஆகவே தமிழ்ப் பெண்களே, நீங்கள் உங்கள் வங்கி வைப்புநிதிகளை, தயவு செய்து மாற்றி வேறு ஏதாவது செய்யவும்.
திமுக, பொம்பளைப் பொறுக்கிகள் - பாகம் ௨
http://othisaivu.wordpress.com/2011/03/31/post-7/
(ஏன் பின்னூட்டங்களைப ் பதிவு செய்வதற்கு நன்றி)
one lakh 80000 crores is your money and my money.This has ashamed all Tamilians and even Bihar people who respected tamilians now think we are the greatest crooks in corruption. In last year India has jumped high on corruption due to DMK 2g and congress scams.
If this is not highlighted by Savukku now there will be no liberation?
when time comes when Amma is ruling Savukku will be a watchdog .
Please vote out corrupt DMK
எஹிப்து, லிபியா மற்றும் பிற நாடுகளில் நடக்கும் புரட்சிகளை கவனித்தால் நான் சொல்வது பிரியும்.
தமிழர்களுக்குத் தேவை தொலை நோக்குப் பார்வை. எதிர்க் கட்சியா அதிமுக இன்னும் ஐந்து வருடம் தாக்குப்பிடிக்க வாய்பே இல்லை. அதற்கான திறமை ஜெ வுக்கும் இல்லை.
எனக்கென்னவோ இது ஒரு சிறந்த வாய்ப்பு. இனிமேல், லல்லுவோ, காங்கிரஸோ பிகாரில் வருவத்தற்கு வாய்ப்பே இல்லை. அதே நிலைதான் குஜராத் மற்றும் ஒரிசாவிலும்.
திமுக-வின் ஊழல், தவறான ஆட்சி முறை, ஒட்டு மொத்தமாக சினிமாவை சீரழிப்பது என அனைத்தும் தொடர வேண்டும்.
சவுக்கு... நீங்க கொஞ்சம் நினைச்சிப் பாருங்க... விஜயகாந்த் செய்கிற சேட்டைகள், ஜெ நடந்துகிட்ட விதம்... இலவசங்களுக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு... இதெல்லாம் நன்றாக இருக்கிறதா? எல்லாமே ஒட்டுமொத்தமா மாறனும் சவுக்கு.
ஒரே வழி இந்த இரு கழகங்களும் இல்லாமல் போவதே! மக்கள் இன்னும் ஜனநாயகத்தை ஒழுங்கா அனுபவிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். சவுக்கு போல விமர்சனங்கள் இன்னும் அதிகரிக்க வேண்டும்.
இன்னும் ஐந்து வருடம் இந்தக் கொடுமை தொடர்ந்தாலும் பரவாயில்லை. நமக்கு ஜெ வேண்டாம் சவுக்கு.
RSS feed for comments to this post