முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அன்பான கனிமொழி… …. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 20
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011 18:11

வணக்கம் கனிமொழி அவர்களே….   நாளை முதன் முறையாக சிறையை விட்டு நீங்கள் வெளியே வரும்போது எப்படி உணர்வீர்கள் என்பது சவுக்குக்கு நன்றாகத் தெரியும். சவுக்கு அதை உணர்ந்திருக்கிறது.

 

கடந்த காலங்களில் சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக நீங்கள் புழல் சிறைக்கு சென்று நிகழ்ச்சி நடத்திய போதெல்லாம், அந்தக் கைதியோடு கைதியாக இருப்பீர்கள் என்பதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள்.  காலம் எப்படியெல்லாம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடுகிறது !!!

 DSC_4400

சிறை என்பது மனிதர்களை பக்குவப் படுத்தவும் செய்யும், அழிக்கவும் செய்யும்.  ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த போதுதான் தன் மகளுக்கு கடிதங்கள் வாயிலாக, உலக சரித்திரத்தை எழுதினார்.   சவுக்கு அந்தப் புத்தகத்தை புழல் சிறையில்தான் படிக்க நேரிட்டது.   அதே நேரத்தில் சிறை ஒரு மனிதனுக்கு தன்னுடைய நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண உதவும். சிறைக்குக் சென்றவுடன் நண்பர்கள் என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் நடந்து கொள்ளும் தன்மையே வித்தியாசமாக இருக்கும்.  புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  புதிய நண்பர்கள் காலா காலத்துக்கும் நண்பர்களாக இருக்கும் வாய்ப்பு உண்டு.

 

உங்கள் விஷயத்தில், உங்கள் தந்தையின் கட்டாயத்திற்காக வேறு வழியின்றி உங்களை சிறையில் வந்து சிலர் பார்த்திருக்கக் கூடும்.  ஆனால் உண்மையில் நீங்கள் சிறையில் இருப்பதற்காக வருத்தப் பட்டவர்கள் யார் என்பதை புத்திசாலிப் பெண்ணான நீங்கள் கண்டு பிடித்திருப்பீர்கள்.

 

2ஜி விஷயத்தில் உங்களை விட தப்பு செய்தவர்கள் வெளியில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.  ஆனாலும் 2ஜி விவகாரத்தில் உங்களுக்குப் பங்கே இல்லை என்பதை ஏற்க முடியாது.   அந்த 200 கோடிப் பணத்தை நீங்கள் வாங்கவில்லை என்பதையும், அது லஞ்சப் பணம் என்பதையும், சிபிஐ நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தவறலாம்.    ஆனாலும் உண்மை என்ன என்பதை உங்கள் மனசாட்சி அறியும்.   உங்களை நீங்களே எந்தக் காலத்திலும் ஏமாற்ற முடியாது.

 

எம்.பி பதவிக்கு வருவதற்கு முன்பெல்லாம், உங்களை மிக மிக நல்ல மனிதர் என்றே சொல்லுகிறார்கள், உங்களோடு பழகியவர்கள்.  பத்திரிக்கையாளர் நண்பர்களிடம் பேசிய போது, உங்களை ஒரு அறிவுஜீவித் தளத்திலேயே வைத்துப் பார்க்கிறர்கள்.   ஒரு பத்திரிக்கையாளர் உங்களை ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் என்று குறிப்பிட்டார்.

 

சவுக்குக்கு உங்களைப் பற்றி முதலில் கேள்விப் பட்ட சம்பவம் உங்கள் முதல் கவிதைத் தொகுதி வெளியீட்டின் போது.  உங்கள் கவிதைத் தொகுப்பு வெளியிடப் பட்டவுடன், சவுக்கு மதிக்கக் கூடிய தமிழாசிரியர் ஒருவர், அதைப் படித்து விட்டு, கருணாநிதி மகள் என்பதற்காக அல்லாமல், தனிப்பட்ட முறையிலேயே ஒரு நல்ல கவிஞராக வரக் கூடியவர் என்ற குறிப்பிட்ட போது உங்கள் மீது நல்ல மரியாதை ஏற்பட்டது.  கருணாநிதியின் கலை உலக வாரிசாக முயற்சித்து, உங்கள் அண்ணன் மு.க.ஸ்டாலின், குறிஞ்சி மலர் கதாநாயகன் அரவிந்தனாக தொலைக் காட்சித் தொடரில் நடித்து வெற்றி பெற முடியாமல் போனதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.

 

இரண்டாம் தாரத்து வாரிசுகளுக்கு எப்போதுமே இரண்டாம் இடம்தான்.  முதல் தாரத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் தாரத்து வாரிசுகளை, சொத்தில் தேவைப்படாத ஒரு பங்கு என்றே பார்ப்பார்கள்.  பெரிய இடத்துக் குடும்பமான உங்கள் குடும்பத்தில் இந்தப் பகையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  அண்ணாமலை ரஜினிகாந்த் போல உங்கள் குடும்பம் குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தக் குடும்பம் ஆனது.   இதனால் உங்கள் மீதான வெறுப்பு முதல் குடும்பத்திடம் அதிகமாகவே ஆகியிருந்திருக்கும்.  ஆனாலும், உங்கள் தந்தை கருணாநிதி உங்கள் மீது வைத்திருந்த பாசம், உங்களை இத்தனை நாட்களும் நம்பிக்கை இழக்காமல் வளர வைத்தது.

 kanimozhi-8

இரண்டாம் தாரத்துப் பிள்ளை என்பதால், நீங்களும் அரசியலில் பெரிய அளவில் இறங்காமல், நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்றுதான் இருந்து வந்தீர்கள்.

 

ஆரம்பகாலத்தில் உங்களோடு பழகியவர்கள் உங்களை மிகச் சிறந்த பெண்ணியவாதி என்று குறிப்பிட்டதைக் கூறுகிறார்கள்.  2002ம் ஆண்டில் குஜராத் கலவரம் மிகப் பெரிய அதிர்ச்சியை நாடெங்கும் ஏற்படுத்தியது.    நான்கு பண்டாரங்கள் சேர்ந்து தொடங்கிய கட்சி என்று பிஜேபியை விமர்சித்த உங்கள் தந்தை பின்னாளில் அக்கட்சியோடு கூட்டு சேர்ந்து அப்போது மத்திய பிஜேபி அரசில் அங்கம் வகித்துக் கொண்டிருந்தார். அப்போது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று ஞாபகம்.  அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டம், சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெற்றது. அப்போது அந்த அரங்கில் பேசிய பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன், உங்கள் தந்தையை பிடி பிடியென பிடித்தார்.   நாடே பதை பதைக்கும் அளவுக்கு நடந்திருக்கும் ஒரு கலவரத்தை “அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை” என்று வர்ணிக்கும் ஒரு தலைவர் எப்படி தன்னை சுயமரியாதைக் கட்சியின் தலைவன் என்று அழைத்துக்கொள்ள முடியும்.  இவர் என்ன பகுத்தறிவு வாதி என்றே வெளிப்படையாக உங்களை மேடையில் வைத்துக் கொண்டே பேசினார்.  அவருடைய கருத்தில் உடன்பாடு உள்ளதோ என்று தோன்றுவது போலவே, நீங்கள் ஒரு சுயமரியாதைக் கட்சியின் தலைவர் எப்படிப் பேசுவாரோ அப்படியே பேசினீர்கள்.  உங்கள் தந்தையைப் பற்றி டி.என்.கோபாலன் பேசியதை நீங்கள் பொருட்படுத்தவில்லை.  ஒரு கை தேர்ந்த மேடைப் பேச்சாளருக்கு உள்ள சொல் அலங்காரம் இல்லாமல், உணர்வோடு நீங்கள் பேசியதைக் காண முடிந்தது. அப்போது உங்கள் மீதான மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் நீங்கள் ஒரு ஆட்டோவில் சென்றதாக நினைவு.

 

உங்கள் முதல் திருமண வாழ்வில் உங்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி இல்லாததோடு மட்டுமல்லாமல், கடும் சித்திரவதைகளையும் அனுபவித் திருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.  ஒரு முதலமைச்சர் மகளையே சித்திரவதை செய்கிறேன் பார் என்ற வெற்று ஈகோவுக்காகவே நீங்கள் வதைக்கப் பட்டீர்கள் என்று சொல்கிறார்கள்.

 

இன்று திராவிட இயக்கத்தின் மூத்த முதுபெரும் தலைவராக உருவெடுத்திருக்கும், தமிழ்த் தாய் குஷ்பூ “கற்பு” கட்டுரையால் சர்ச்சையில் சிக்கிய போது உங்கள் தந்தை உங்களுக்கு நேர்மாறான நிலைபாடு எடுத்தார் என்பதை நீங்கள் மறந்திருக்க முடியாது.  குஷ்பூ பேசியதை வெளிப்படையாக எதிர்க்காவிட்டாலும், மறைமுகமாக அதை கடுமையாக எதிர்த்தார்.   இந்த நிலைபாட்டை எதிர்த்து நீங்கள் ஆனந்த விகடனில் தந்தையோடு இதனால் மனக்கசப்பு என்று பேட்டியே கொடுத்தீர்கள்.   நீங்கள் வெளிப்படையாகவே குஷ்பூவை ஆதரித்தீர்கள்.   இதே கருணாநிதி, குஷ்பூ கட்சியில் சேரும்போது குஷ்பூ கருத்தை ஆதரித்து சங்க இலக்கியத்திலே “களவொழுக்கம்” என்ற பிரிவே உண்டு என்று பசப்பியது வேறு விஷயம்.

 DSC_0235

அந்த நேரத்தில் உங்கள் தந்தை உங்களோடு பேசாவிட்டாலும் கூட பரவாயில்லை என்று தெளிவாக கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தவர் நீங்கள்.  உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளாமல், உங்கள் தந்தையே உங்களிடம் வந்து பேசியவுடன் தான் நீங்கள் பேசினீர்கள். அதையொட்டித் தொடங்கப் பட்டதுதானே கருத்து என்ற இணையதளம் ?

 23

பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உங்களுக்கு மிக நல்ல பெயர் இருக்கிறது.  நல்ல பத்திரிக்கையாளர்கள் மத்தியில்.  இன்று உங்களுக்கு நண்பராக இருக்கும் இரா.சரவணன் அல்ல.  மிக மிக தன்நம்பிக்கை உடைய பெண் என்றே உங்களை வர்ணிக்கிறார்கள்.

 

உங்களின் சரிவு தொடங்கியதே இந்த 2ஜி விவகாரத்தால் தான் என்பதை நீங்கள் சற்றே யோசித்துப் பார்த்தீர்களென்றால் தெரியும். அது வரை அமைதியாக நதியினில் ஓடமாகத்தான் போய்க் கொண்டிருந்தது உங்கள் வாழ்க்கை.  2ஜியில் வந்த பணம் உங்கள் வாழ்க்கையை புயலில் சிக்கிய தோணியாக மாற்றிப் போட்டு விட்டது.

 

2004 பொதுத் தேர்தலின் போதே உங்களுக்கு எம்.பியாக போட்டியிட வாய்ப்பு வந்தது. ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல உங்கள் இயல்பு உங்களை அரசியலையும், பதவியையும் உதாசீனப் படுத்த வைத்தது.

 

16 மே 2007ல் ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகிறார்.  அவர் அமைச்சரான மறுநாளே ஒரு பெரும் தொகையை கருணாநிதியிடம் கொண்டு வந்து கொடுத்தாக டெல்லி வட்டாரங்களிலும், சென்னையிலும் சொல்லப் படும் தகவல்.  உங்கள் குடும்பத்தை சாராதவராக இருப்பதால், தன்னுடைய அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள ராசா உங்களையும், உங்கள் குடும்பத்தையும் நம்புகிறார். ராசா கொண்டு வந்து கொடுத்த பணத்தைப் பார்த்த உங்கள் தாயாரின் பேராசை கொழுந்து விட்டு எரிகிறது.    ராசாவே இவ்வளவு சம்பாதிக்கிறார் என்றால், நம்முடைய பெண் அமைச்சரானால் எவ்வளவு சம்பாதிப்பார் என்ற மனக்கணக்கோடு, உங்களை எம்.பியாக்க வேண்டும் என்று உங்கள் தந்தையை நிர்பந்திக்கிறார்.  உங்கள் தந்தையும் வேறு வழியின்றி, உங்களை ஜுலை 2007ல் பாராளுமன்ற உறுப்பினர் ஆக்குகிறார்.  திமுகவே உங்கள்  குடும்ப சொத்துதானே… உங்களைத் தவிர வேறு யார் வர முடியும் ?

 

இதன் பிறகுதான் கனிமொழி உங்களிடத்தில் ஒரு அசுரத்தனமான மாற்றம்.   இத்தனை மென்மைத் தன்மையாடு இருந்த நீங்கள் உங்களின் மறுபக்கத்தைக் காட்டுகிறீர்கள்.   நீங்களா இது என்று உங்களோடு நெருக்கமான நட்போடு இருந்த இலக்கியவாதிகளும், நல்ல நண்பர்களும் விலகி ஓடுகின்றனர்.  கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்ட கொள்ளைக் காரர்கள் உங்களோடு நெருக்கமாகிறார்கள்.   அப்படி உங்களோடு நெருக்கமானவர்கள் தான் போலிப் பாதிரி ஜெகத் கஸ்பர், ஜாபர் சேட், ரவிக்குமார் போன்றவர்கள் எல்லாம்.

 A4

இவர்களோடு சேர்ந்து நீங்கள் நடத்திய சென்னை சங்கமம் நிகழ்ச்சியைப் பார்த்து எரிச்சலடைந்தவர்களே அதிகம்.  அதுவும் அந்தப் போலிப் பாதிரியை அருகில் வைத்துக் கொண்டு நீங்கள் அரசு அதிகாரத்தை தாறுமறாக துஷ்பிரயோகம் செய்தது பலருக்கும் உங்கள் மீது வெறுப்பையே ஏற்படுத்தியது.

 

ஒரு எம்.பி. பதவியைக் கூட வேண்டாம் என்று புறந்தள்ளிய நீங்கள், 2009 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நீரா ராடியாவோடு உரையாடியதைக் கேட்டவர்கள் அதிர்ந்து போனார்கள். இப்படிப் பட்ட பதவி வெறி பிடித்த பெண்ணா இந்தக் கனிமொழி என்று.  அரசியலே வேண்டாம் என்று விலகி இருந்த உங்களை ஒரு தரகரோடு திரை மறைவு பேரங்கள் நடத்த வைத்தது எது  என்பது உங்களோடு பழகியவர்கள் அனைவருக்குமே புரியாத புதிராக இருந்தது.

Download Name Play Size Length
download Kanni--15-188819-0-09-20090522-144615

1.7 MB 3:43 min
download Kanni--17-188819-0-09-20090522-200419

1.8 MB 3:58 min
download Kanni--22-188819-0-11-20090524-092731

1.5 MB 3:13 min
download Kanni--32-188819-0-20-20090522-224116

4 MB 8:40 min
download Kanni--34-188819-0-21-20090522-111541

1.1 MB 2:29 min
download Kanni--46-188819-0-26-20090522-104506

1 MB 2:14 min
download Kanni-37-188819-0-22-20090523-095902

3.4 MB 7:26 min
Joomla! web design... 

இத்தனை பேரங்களை நீங்கள் நடத்தினாலும், சமுதாயத்தைப் போலவே அரசியலிலும் பெண் வெற்றி பெறுவது எளிதானது அல்ல என்பதையே உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது காட்டியது.

 

குஷ்பூ குறித்த சர்ச்சை வந்த போது வெளிப்படையாக உங்கள் தந்தையையே எதிர்க்கத் துணிந்த நீங்கள், ஈழப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த போது உங்கள் தந்தையோடு சேர்ந்து நடத்திய நாடகம், உங்களை ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக, மாற்றியது.    உங்கள் தந்தை நடத்திய எம்.பி.பதவி ராஜினாமா நாடகத்தின் போது முதல் ஆளாக ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பாமல், உங்கள் தந்தையிடம் அளித்து விட்டு நல்ல பிள்ளை போல கை கட்டி இருந்தீர்கள்.

 

இது மக்களிடத்தில் உங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச அபிப்பிராயத்தையும் அடியோடு நீக்கியது.  வெள்ளைக் கொடியோடு நடேசன் சென்ற போது அவர் கொல்லப் பட்டதன் பின்னணியில் உங்கள் பங்கு என்ன என்பது நன்கு தெரிந்தாலும், இப்போது அதைச் சொல்ல விரும்பவில்லை.

 

இதற்குப் பிறகு, சென்னை சங்கமம் நடத்திய போது மக்களுக்கு உங்கள் மேல் கோபம் தான் வந்தது. அதை நீங்கள் உணரத் தவறினீர்கள்.   அப்போது உங்களுக்கு நெருக்கமாக இருந்த போலிப் பாதிரியும், ஜாபர் சேட்டும், உங்களுக்கு தைரியம் கொடுத்து, உங்களின் மெல்லிய உணர்வுகளையெல்லாம் பட்டுப் போக வைத்து உங்களை முழு நேர அரசியல்வாதியாக்கினார்கள்.

 Kanimozhi_20110507

2ஜி விவகாரம் முழுமையாக வெளியான போது, நீங்கள் கைது செய்யப் படுவீர்களா இல்லையா என்று சர்ச்சைகள் எழுந்த போது, பெரும்பாலான கருத்து நீங்கள் சிறை செல்ல வேண்டும் என்பதுதான்.   நீங்கள் சிறைக்கு சென்ற போது, எத்தனை பேர் அகமகிழ்ந்தார்கள் தெரியுமா ?  இந்த மகிழ்ச்சிக்கு காரணம் உங்களின் கடந்த கால நடவடிக்கைகள் தான்.  இறுதியாகக் கூட, கைது செய்வதற்கு முன்பாக, மீனவர்கள் கொல்லப் பட்ட செய்தி கேட்டு, நீங்களே ஒரு போராட்டத்தை அறிவித்து, உங்கள் தந்தையின் காவல்துறையை வைத்து கைது செய்யப் பட்டு, பி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் ஒரு நாள் இருந்து, கனிமொழி கைது, கனிமொழி கைது என்று நீங்களே செய்தியைப் பரப்பினீர்களே…. நினைவிருக்கிறதா ?    அது போன்ற நடவடிக்கைகள் உங்கள் மீதான வெறுப்பை அதிகரித்தது.

 

சரி பழசையெல்லாம் விடுவோம்.   இனி நீங்கள்  விரும்பாவிட்டாலும் அரசியலை விட முடியாது.  அப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளீர்கள்.   2ஜி வழக்கு விசாரணை எப்படிப் போகிறதோ அப்படிப் போகட்டும்.  நீங்கள் இனி செய்ய வேண்டியதெல்லாம் உங்களை கட்சியில் பலப்படுத்திக் கொள்வதுதான்.  கட்சியில் உங்கள் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுபவர்கள் உங்கள் சகோதரர்களும், உறவினர்களும் தானே தவிர, வேறு யாரும் அல்ல.  கட்சியின் மூத்த தலைவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.

 

உங்கள் தந்தை சொன்னாரே… கூடா நட்பு என்று.  ஜெகத் கஸ்பர், ஜாபர் சேட், இரா.சரவணன் போன்ற கூடா நட்பை விட்டு ஒழியுங்கள்.  நாளை நீங்கள் சென்னை வந்தவுடன், இரா.சரவணனும், ஜாபர் சேட்டும், ஜுனியர் விகடனில் தொடர்ந்து செய்தி வருவதற்கு நாங்கள் தான் காரணம் என்று சொல்லக் கூடும்.  ஆனால், இந்த ஜாபர் சேட்டால் தான் இன்று திமுகவே நிலைகுலைந்து போய் உள்ளது என்பது மற்ற யாரையும் விட உங்களுக்கு நன்கு தெரியும்.

 

உங்களோடு நண்பர்களாக இருந்தவர்களை தேடிப் போய் சந்தியுங்கள். பழைய நட்பு வட்டாரத்தை புதுப்பியுங்கள்.  கட்சியின் தொண்டர்களை சந்தியுங்கள்.  இன்றுதான் புதிதாக அரசியலில் இறங்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.  நேற்று நீங்கள் கைது செய்யப் படும் வரை ஆரவாரமாக ஆர்ப்பரித்து கவர் ஸ்டோரி வெளியிட்ட இதழ்கள் உங்களுக்கு இன்று கொடுக்கும் ஆதரவை நம்பி விடாதீர்கள்.   அதே இதழ்கள் உங்கள் சகோதரரோடு சேர்ந்து உங்களை கவிழ்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும்.  அவற்றை நம்பாதீர்கள்.  உங்களின் உண்மையான பலம் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவதுதான்.

 3854625319_2bd6942499_b

உங்கள் அரசியல் வளர்ச்சிக்கு ஜெயலலிதாவின் ஆட்சி நிச்சயம் உதவி செய்யும்.

 

ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று உங்களிடம் ஒரு பேட்டியில் கேட்ட போது, “அவரது துணிச்சல்” என்று சொன்னீர்கள்.  அந்தத் துணிச்சல் உங்களுக்கு நிச்சயம் வேண்டும்.

 

வாழ்த்துக்கள்.

 

அன்புடன்

 

சவுக்கு.

 

Comments  

 
0 #58 manivaasagan ranga 2011-12-28 15:35
கனிமொழி துவக்கத்தில் அனைவரது நன்மதிப்பையும்( அவரது பின்புலத்தையும் தாண்டி) பெற்றிருந்தார். அரசியலில் பிரவேசித்தபின் நேரிடை ஆலோசகர்களை விட்டு விலகியதாலும் பேராசை கொண்டவர்களின் அண்மையாலும் தம் செல்வாக்கை இழந்து அவப்பெயரை பெறும்படி நேரிட்டது. எனினும் நீங்கள் எழுதியபடி அவர் தன் வட்டத்தை சீர்செய்து தகுந்த ஆலோசகர்களையும் நலம்விரும்பிகளை யும் உடன்வைத்து செயல்பட்டால் வருங்காலத்தில் ஒரு நல்ல நிலையை அடைவதற்கான சாத்தியக்கூறுகள ் தென்படுகின்றன. என்ன ஆகப்போகிறார் என்பதை காலம் தான் தீர்மானிக்க முடியும் ஆனால் அதற்கான தயார் நிலையை அவர் தான் முயற்சிக்க வேண்டும்.
Quote
 
 
+1 #57 Mahesh kumar 2011-12-14 10:58
200 கோடியில் 120 கோடி தயாளூ கருணானிதிக்கு 60% பங்குதாரர் என்ற வகையில் சேர்ந்தது. அவர் ஏன் கைது செய்யப்படவில்லை ? அவர் சார்பில் முடிவுகலை நிச்சயம் கனிமொழி எடுத்திருக்க முடியாது. குடும்பத்தில் உள்ள தகராறீல் அவர் பெயரை சொல்லி நிச்சயம் கனிமொழி கடன் வாங்கி இருக்க முடியாது. அப்போது தயாளூவுக்க்காக முடிவுகள் எடுத்தவர் எங்கே? ஏன் சரத்குமாரும் கனிமொழியும் பலிகடாவாக்கப்பட ்டிருக்கிறார்கள ்? யாரைக் காப்பாற்ற? இந்த கேள்விகள் கேட்கப்படாமலே இருக்கின்றன.
Quote
 
 
0 #56 Mahesh kumar 2011-12-14 10:28
200 கோடியில் 120கோடி தயாளூ கருணானிதிக்கு 60% பங்குதாரர் என்ற வகையில் சேர்ந்தது. அவர் ஏன் கைது செய்யப்படவில்லை ? அவர் சார்பில் முடிவுகளை நிச்சயம் கனிமொழி எடுத்திருக்க முடியாது. குடும்பத்தில் உள்ள தகராறீல் அவர் பெயரைச் சொல்லி நிச்சயம் கனிமொழி கடன் வாங்கியிருக்க முடியது. தயாளூக்காக முடிவுகள் எடுத்தவர் எங்கே? ஏன் சரத் குமாரும், கனிமொழியும் பலிகடாவாக்கப்பட ்டிருக்கிறார்கள ்? யாரைக் காப்பதற்காக? இந்த கேள்விகள் கேட்கப்ப்டாமலே இருக்கின்றன.
Quote
 
 
0 #55 Meghanathan Raja 2011-12-10 03:22
சவுக்கு நல்ல விஷயங்களுக்காக எப்போதும் சொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஜன நாயகம் செம்மையாக விளங்க அறிவுக் கூர்மையுள்ள தலைமையைக் கொண்ட நீண்டகால அடிப்படையிலான மாற்றுக் கட்சி அவசியம் தேவை. அத்தகைய பண்புகளைப் பெற்ற ஓர் ஆளுமை கனிமொழி ஆவார். அவரிடம் எண்ணம், எழுத்து, செயல்திறம் ஆகியவை ஒருங்கே அமையப் பெற்றுள்ளன. கனிவான பேச்சு, பழையன போற்றுதல் மற்றும் புதியன புகுத்துதல் ஆகிய கூடுதல் தகுதிகளும் உள்ளன. தக்க வழிகாட்டுதலும் பொறுமையுடன் கூடிய நீடித்த அணுகுமுறையும் அமையப்பெற்றால் தமிழக அரசியல் களத்தில் ஒரு மாற்று சக்தியாக உருவெடுப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
Quote
 
 
+1 #54 janucece 2011-12-04 15:12
[ஃஉஒடெ நமெ="ஸூட்ஹீறாண்"]கனிமொழி ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் புலமை பெற்றவர்! அத்துடன் கணிப்பொறி பயன்படுத்தவும் திறமை பெற்றவர்! இவரைப் பற்றியும், இவருக்கு ஜாமின் கிடைப்பதைப் பற்றியும் தமிழ் மற்றும் ஆங்கில பத்ரிக்கைகள் அனைத்திலும் வாசகர்கள் எழுதிய கருத்துக்களை இவர் படித்துப் பார்க்க வேண்டும் ! அப்பொழுது தான் தன்னைப் பற்றி இந்த உலகம் என்ன நினைக்கிறது என்ற நிதர்ஸனமான் உண்மை புரியும் ! இவர் எப்படி கோடீஸ்வரி ஆனார்? என்ன அப்படி இவருக்கும் இவர் தாயருக்கும் தொழில் அறிவு அதுவும் நூற்றுக் கணக்கான கோடிகளில் பணம் , லாபம் புரளும் அளவுக்கு? வோல்டாஸ் நிலம், ஊட்டித் தோட்டம் என்று எப்படி இவ்வளவு சொத்துக்கள்? மனசாட்சி என்று ஒன்று இருந்திருந்தால் இவர் நீரா ராடியாவிடம் இவ்வளவு பேரங்கள் அதுவும் கீழ்த்தரமான பேரங்கள் பேசியிருப்பாரா? இப்பொழுது ஜாமின் தான் கிடைத்துள்ளது ! 2 ஜி ஊழல் வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை! இதை நினைவில் வைத்துக்கொண்டு கொஞ்சம் நிதான நிலைக்கு தி மு க வினர் முக்கியமாக "கற்புக்கரசி" குஷ்பு முதலானோர்
வந்தால் நல்லது![/ஃஉஒடெ]நான் சொல்ல நினைத்தது 100% இதுதான்.
Quote
 
 
+3 #53 Jey 2011-12-03 06:14
I can only dream of the day when our fellow citizens won't tolerate corrupt politicians and officials who misuse their power.

Even Raja will get out soon. This will drag on for another 20 years and nothing will come out it. :sad:
Quote
 
 
-3 #52 iniavan 2011-12-02 11:28
'''''''' ஜாபர் சேட்டால் தான் இன்று திமுகவே நிலைகுலைந்து போய் உள்ளது என்பது மற்ற யாரையும் விட உங்களுக்கு நன்கு தெரியும்.'''''''''''இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலையா சவுக்கு.
Quote
 
 
+7 #51 RAJKUMARPANDIAN 2011-12-01 17:57
ஈழப் பிரச்சனை தீவிரமடைந்த இறுதி கட்டடத்தின் ஆரம்பத்தில் சென்னை மயிலை மாங்கொல்லையில் திமுக நடத்திய இலங்கை சிக்கல் திமுக வின் நிலை என்ன என்று அவர்கள் நடத்திய கூட்டத்தில் கனிமொழி பேசியது இது தான் "அங்கே தமிழர்களின் நகங்களில் ஊசியால் குத்துகிறார்கள் ..."என்ற வகையில் தான் இருந்தது" இந்த பணப்பேய் பண மொழிக்கு ஈழ சிக்கல் பற்றி ஒரு இழவும் தெரியாது..என்பது அன்று தான் எனக்கு புரிந்தது..இப்படி சக தமிழன் சாகும்போது கூட அரசியல் செய்த இவர்கள்..உயிர் வாழ்வது மண்ணுக்கே பாரம்..சவுக்குக்கு வீணானது அவரது பொன்னான நேரம் ..இவர்கள் மனமெல்லாம் மாற வேண்டாம் மரணமடைந்தால் போதும் ..தீரும்...தாய் தமிழர்களின் நீண்ட துயரம் ..அப்பனுக்கு தப்பாமல் பிறந்த இவள்ளெல்லாம் ..வாழ்ந்து என்ன பயன் நாட்டுக்கு ..இவரை உங்கள் கட்டுரையின் கதாநாயகி ..ஆக்குவதின் நோக்கம் என்ன சவுக்கு sir
Quote
 
 
+3 #50 Napoleon.elamvazhuth 2011-12-01 15:41
தடுமாறும் சவுக்கு,
கனிமொழிக்கு அறிவுரை செய்ய வேண்டிய
அறிவுரை என்ன?
சவுக்கும் விரைவில் மஞ்சள் நிறம் மாறுமா...?
Quote
 
 
-4 #49 Kutti 2011-12-01 15:05
good article savukku... but i can't undersatand one thing that y u aalways have a soft corner on kani mozhi... your way of approach to kani is appreciatable....
Quote
 
 
+5 #48 force 2011-12-01 15:02
ஜாமின்ல தான வெளியே வந்திருக்காங்க?
வழக்கிலிருந்தே விடுதலை ஆனது மாதிரி திமுகவும், ஊடகங்களும் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கின்றன, உங்களையும் சேர்த்துத்தான் கேட்கிறோம்?
Quote
 
 
+5 #47 kumplu 2011-12-01 11:26
[ஃஉஒடெ நமெ="கும்பகர்னன்"]மிகக் கூர்மையான கடிதம். தவறுகளை சுட்டிக்காட்டிய அதே வேளையில் ஸ்டாலினின் முப்பத்தி ஐந்து ஆண்டு கால இருப்பையும் உழைப்பையும் புறந்தள்ளி , கனிமொழி ஒரு தலைவியாக உருவெடுத்து வரவேண்டும் என்ற சவுக்குவின் தொனி சரியாகப் படவில்லை.[/ஃஉஒடெ]
ellaam oru saathi paasamthaan ...
Quote
 
 
+5 #46 eleventh sense 2011-12-01 00:57
நாய் வாலை நிமிர்த்த முடியது..............சவுக்கு. Better get another topic to weave.
Quote
 
 
+1 #45 eleventh sense 2011-12-01 00:34
ALL ROADS DOESN'T LEAD TO ROME.................
Quote
 
 
+25 #44 Villaalan 2011-11-30 22:40
Savukku is weaning in quality and dignity.it will become azhukku site:-)
Quote
 
 
-15 #43 mohana sundara, 2011-11-30 22:25
Savukku sir, your intelligence expertise has grown to good extent,you might have verified the public's response towards kanimozhi and her bail out, great job.
Quote
 
 
+46 #42 Maaamallan 2011-11-30 21:23
அப்படியென்றால் இவள் தமிழ் நாட்டுக்கும், ஈழத்தமிழருக்கும ் செய்த குற்றத்திற்கு என்ன தண்டனை? அப்படியென்றால் நாம் மு க வையும் மன்னிக்கலாமே. அவரும் ஒரு காலத்தில் ஒழுங்காக இருந்திருக்கலாம ் அல்லவா? நீ சொல்வதெல்லாம் சரியாக இருக்குமென்று நினைக்கிறாயா, சவுக்கு?
Quote
 
 
+13 #41 lankan 2011-11-30 21:02
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனிற்கு தமிழ்மக்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். -- approam உங்கள் தந்தை நடத்திய எம்.பி.பதவி ராஜினாமா நாடகத்தின் போது முதல் ஆளாக ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பாமல், உங்கள் தந்தையிடம் அளித்து விட்டு நல்ல பிள்ளை போல கை கட்டி இருந்தீர்கள்.


இது மக்களிடத்தில் உங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச அபிப்பிராயத்தைய ும் அடியோடு நீக்கியது. வெள்ளைக் கொடியோடு நடேசன் சென்ற போது அவர் கொல்லப் பட்டதன் பின்னணியில் உங்கள் பங்கு என்ன என்பது நன்கு தெரிந்தாலும், இப்போது அதைச் சொல்ல விரும்பவில்லை.

our slogan " we do business based on your issue"
Quote
 
 
+15 #40 arjunan 2011-11-30 21:01
DEAR SAVUKU,

I DO NOT KNOW WHY YOU HAVE TAKEN MUCH OF YOUR VALUABLE TIME AND ENERGY TO WRITE A ARTICLE. YOU SHOULD HAVE DEVOTED THAT TO SUCH GOOD THINGS AND NOT FOR THE BAD ELEMENTS. ANY HOW THE CLOSED DOOR MEETING HAD NOT BEEN TAKEN CARE AT THIHAR JAIL.
ALL THE BEST
Quote
 
 
-14 #39 kumbakarnan 2011-11-30 17:32
good.
Quote
 
 
+27 #38 MANSOOR RIYADH 2011-11-30 17:24
யார் என்ன தவரு செய்தாலும் பனமிருந்தால் வெளீயே வந்துவிடலாம் ...
Quote
 
 
+27 #37 kumbakarnan 2011-11-30 17:23
மிகக் கூர்மையான கடிதம். தவறுகளை சுட்டிக்காட்டிய அதே வேளையில் ஸ்டாலினின் முப்பத்தி ஐந்து ஆண்டு கால இருப்பையும் உழைப்பையும் புறந்தள்ளி , கனிமொழி ஒரு தலைவியாக உருவெடுத்து வரவேண்டும் என்ற சவுக்குவின் தொனி சரியாகப் படவில்லை.
Quote
 
 
+32 #36 joe the boss 2011-11-30 15:47
நீஙக சொல்ரத பாத்தா கனிமொழி என்னவோ விடுதலை போராலட்ட தியாகி மாதிரில்ல தெரியுது
Quote
 
 
-23 #35 M.S.Chagla 2011-11-30 15:27
இது ஒரு அரொகியாமான கட்டுரை. I wish all journalists shall follow and uphold the highest amount of journalistic ethics that you practice. Your article is futuristic and is really excellent.
Quote
 
 
+11 #34 mathi 2011-11-30 15:20
[ஃஉஒடெ நமெ="விவெக் ப்ரப்ஹ"]நல்ல தலைவர்கள் கிடைக்காதபச்சதி ல், இரன்டும்கட்டான் நிலையில் இருப்பவரை நல்வழிக்கு கொன்டுவர சவுக்கு எடுக்கும் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்.
ஆனால்
நரிக்கு சிங்கம் பிறக்காது (புது மொழி 0001)
ஃ சவுக்கு
வீண்முயற்ச்சி வெட்டிவேலை(புது மொழி 0002)
(அதிகபிரசங்கிதன மாக எதாவது ஏழுதிருந்தால்
மன்னிகவும்)[/ஃஉஒடெ]


நரிக்கும் சிங்கத்துக்கும் ரகசிய உறவிருந்த்தால் வாய்ப்புல்லது
Quote
 
 
+61 #33 rama pillappan 2011-11-30 15:08
சவுக்கும் பிழைக்கும் வழியை தேட ஆரம்பித்து விட்டது என்றே தோன்றுகிறது.
Quote
 
 
+41 #32 Kannan1 2011-11-30 14:34
I don't understand why you have to write this article.Kani is one of the culprit like anyone else.
Quote
 
 
+36 #31 mvenkatkumar1985 2011-11-30 14:22
இறுதியாகக் கூட, கைது செய்வதற்கு முன்பாக, மீனவர்கள் கொல்லப் பட்ட செய்தி கேட்டு, நீங்களே ஒரு போராட்டத்தை அறிவித்து, உங்கள் தந்தையின் காவல்துறையை வைத்து கைது செய்யப் பட்டு, பி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் ஒரு நாள் இருந்து, கனிமொழி கைது, கனிமொழி கைது என்று நீங்களே செய்தியைப் பரப்பினீர்களே…. நினைவிருக்கிறதா ? அது போன்ற நடவடிக்கைகள் உங்கள் மீதான வெறுப்பை அதிகரித்தது.
Quote
 
 
+22 #30 ஊர்க்குருவி. 2011-11-30 11:37
சீதை வனவாசம் மீண்ட களிப்பு
கோவலன்புரத்திலு ம்
சிஐடி நகரத்திலும்
கோலாகல விழாக்கோலம்.

ஏகாந்தம் துறந்து
சாவீட்டின் நெடி களையப்பட்டு
பட்டத்தரசியின் வதனம்
மழைக்கால மரங்களின் குளுமை.

மூன்றாம் அரசியின்
முகப்பொலிவு
ஆளவந்தானையே காளையாக்கிய
கணங்களாக.

தூரத்தே
இருட்டுக்கடை பக்கமிருந்து
கருகிய வாடையும் கூடவே
காற்றில் கலந்து
மூக்கை உறுத்துகிறது.

பரணில்
நீண்டநாள் பாவனையின்றி கிடந்த
கிரந்தம் எழுதிய தாள்கள்
சிலந்தி வலையின் சிக்கிடுக்கிலிர ுந்து
மறு பாவனைக்கு தயாராக.

சில பருவகால பறவைகள்
அங்கொன்று இங்கொன்றாய்
தூரத்தே நோட்டமிட்டு புள்ளியாக
செய்வதறியாது வட்டமடிக்கின்றன .

குஞ்சாமணி மட்டும்
தன் பங்கிற்கு முச்சந்தியில்
நின்று வில்லங்கமாக
வாகடம் வழிகாட்டியதாக
ஊளையிட்டு கூவி கலைகிறது.

மஞ்சள் மரத்து போய்விட்டதால்
ஆளவந்தான்
வெள்ளைக்கு மாறி
குதூகலமாக தத்துவம் பேசி
மனு நீதி சோழ வசனத்தை
மீண்டும் வலியுறுத்தி
மலையேறியது.

இருந்தும்
உறுமல் சத்தம் ஒன்று மட்டும்
மிக மிக வித்தியாசமாக
உடைந்த முகாரி ராகத்தில்
மந்தாரமாக மேட்டு தெருவில்
தொடர்ந்து கேட்டுக்கொண்டேய ிருக்கிறது.
Quote
 
 
+53 #29 Vidhya 2011-11-30 11:37
நீங்கள் இவரை பற்றி என்ன எழுதினாலும் இவரது தந்தையுடன் சேர்ந்து செய்த ஈழத் துரோகம் ஒரு போதும் மன்னிக்கவோ மறக்கவோ முடியாது
Quote
 
 
+18 #28 Zafar Rahmani 2011-11-30 10:57
:-) சவுக்கு இன்று தான் நீர் பல உண்மைகளை போட்டு உடைத்திருக்கிறீ ர்.
அட்வைஸ் மழையில் அம்மணி கனிமொழி நனைந்து அரவிந்தனின் குடையில் போவாரா?
கருணாநிதியின் காரில் போவாரா?
Quote
 
 
+33 #27 SUTHIRAN 2011-11-30 10:51
கனிமொழி ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் புலமை பெற்றவர்! அத்துடன் கணிப்பொறி பயன்படுத்தவும் திறமை பெற்றவர்! இவரைப் பற்றியும், இவருக்கு ஜாமின் கிடைப்பதைப் பற்றியும் தமிழ் மற்றும் ஆங்கில பத்ரிக்கைகள் அனைத்திலும் வாசகர்கள் எழுதிய கருத்துக்களை இவர் படித்துப் பார்க்க வேண்டும் ! அப்பொழுது தான் தன்னைப் பற்றி இந்த உலகம் என்ன நினைக்கிறது என்ற நிதர்ஸனமான் உண்மை புரியும் ! இவர் எப்படி கோடீஸ்வரி ஆனார்? என்ன அப்படி இவருக்கும் இவர் தாயருக்கும் தொழில் அறிவு அதுவும் நூற்றுக் கணக்கான கோடிகளில் பணம் , லாபம் புரளும் அளவுக்கு? வோல்டாஸ் நிலம், ஊட்டித் தோட்டம் என்று எப்படி இவ்வளவு சொத்துக்கள்? மனசாட்சி என்று ஒன்று இருந்திருந்தால் இவர் நீரா ராடியாவிடம் இவ்வளவு பேரங்கள் அதுவும் கீழ்த்தரமான பேரங்கள் பேசியிருப்பாரா? இப்பொழுது ஜாமின் தான் கிடைத்துள்ளது ! 2 ஜி ஊழல் வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை! இதை நினைவில் வைத்துக்கொண்டு கொஞ்சம் நிதான நிலைக்கு தி மு க வினர் முக்கியமாக "கற்புக்கரசி" குஷ்பு முதலானோர்
வந்தால் நல்லது!
Quote
 
 
+25 #26 Zafar Rahmani 2011-11-30 10:50
சவுக்கு,
இது வஞ்சப்புகழ்ச்சி தானே?
நம்மளை ஏமாத்தலயே?
Quote
 
 
+12 #25 vennai 2011-11-30 10:11
andha alavvu valarchi adaindha oru state ila makkal pitchai karargal pola ilavasm kku odukinraargal!! !!!!!!!. ahaa Quoting தமிழ்ப்பிரியன்:
சவுக்கு, ஒரு சிறு பிழை இக்கட்டுரையில்:

கருணாநிதியின் வாரிசுகள் (தெரிந்தவை மட்டும்):
முதல் தாரம்: மு.க. முத்து, இரண்டாம் தாரம்: மு.க.அழகிரி, மு. க. ஸ்டாலின், மூன்றாம் தாரம்: கனிமொழி (ராஜாதி'க்கு ????)

பண்டாரங்கள் ஆட்சி செய்யும் குஜராத், மத்திய பிரதேசம் தமிழகத்தை விட நூறு மடங் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
இதற்கு கர்நாடகம் மட்டுமே விதி விளக்கு. கனிமொழி கவிஞராக இருந்து விட்டு போகட்டும். மற்ற மாநிலங்களின் வளர்ச்சி பற்றி கனிமொழிக்கு தெரியாதது ஒன்றும் ஒரு பெரிய விடயம் இல்லை. கருணாநிதிக்கு பிறந்த பிள்ளை இப்படி தான் இருக்குமென்பதில ் ஐயமென்ன.

வாழ்த்துக்கள்
தமிழ்ப்பிரியன், பாரிஸ்.
Quote
 
 
+40 #24 Bharath Arunachalam 2011-11-30 10:05
இந்த உத்தமி அரசியல்ல இருந்து சேவ
செஞ்சா தான் தமிழனுக்கு சோரு எரங்குமா? இந்த போலி கவி அரசியல்ல இருந்தா என்ன, இல்லனா என்ன!
Quote
 
 
+24 #23 VM Rajesh 2011-11-30 09:50
சவுக்கு ஒரு நேர்மையான கட்டுரை. நிறைய பேர், அரசியல் வரும் முன், கனி மொழி பற்றி நல்ல அபிப்ராயம் வைத்து இருந்தனர். அவரை மாற்றிக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். அதே சமயம், 2ஜி வழக்கில் அவர் தப்பக்கூடாது. வழக்கு நேர்மையாக நடந்தால், நிச்சயம் அவர் ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது
Quote
 
 
-16 #22 Vijay123 2011-11-30 09:45
I don't see anything wrong in this post. It's just savukku's view about Kanimozhi. It gives a overall view about what Kanimozhi was before getting into politics and after getting into politics.

Jaya also has cases against her, went to jail and the case is still going on...but she is a CM now. I don't understand this difference.
Quote
 
 
+77 #21 karthikprabakarn 2011-11-30 08:40
..ஜிங்...ஜக்...ஜிங்...ஜக்...
Quote
 
 
-32 #20 santhi 2011-11-30 07:47
/உங்கள் அரசியல் வளர்ச்சிக்கு ஜெயலலிதாவின் ஆட்சி நிச்சயம் உதவி செய்யும்.

ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று உங்களிடம் ஒரு பேட்டியில் கேட்ட போது, “அவரது துணிச்சல்” என்று சொன்னீர்கள். அந்தத் துணிச்சல் உங்களுக்கு நிச்சயம் வேண்டும்.

வாழ்த்துக்கள்./ yes we too join in wishing her a brave , trustworthy, successful journey in politics.
Quote
 
 
+74 #19 k krishnan 2011-11-30 05:46
இவள் திருந்த சவுக்கு இவ்வளவு மண்டியிட்டு பேச வேணுமா? உப்பு தின்னவன் தண்ணி குடித்துதானே ஆக வேண்டும்.
Quote
 
 
+100 #18 தமிழ் அமுதன் 2011-11-30 05:24
அன்பான சவுக்கு, இந்த கட்டுரை எனக்கு சற்று ஆச்சர்யம் அளிக்கிறது. எதன் அடிப்படையில் கருணாநிதியை, ஜெகத் கஸ்பரை, ஜாபர் சேட்டை வெறுத்தோமா அதே அடிப்படை இவருக்கும் பொருந்தும்தானே? இவர்கள் வரலாற்றின் முக்கியமான தருணங்களில் முதுகில் குத்தியவர்கள்! வெறும் 2க் உழல் மட்டுமா இவர்கள் சரிவுக்கு காரணம்? நீங்கள் ஒரு "கிருமி" போல் வருணிக்கும் இந்த சரவணன் கூட பனிரெண்டு வருடத்திற்கு மிக மென்மையான நபர்தான்! ஆனால் என்னால் காலத்தில் பின்னோக்கி பயனித்து என் தோழன் சரவணன் மேல் தீர்ப்பெழுத முடியாது! நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்! கவிஞர் என்ற போர்வையும், அறிவுஜீவி என்ற போர்வையும் எப்போதோ நீக்கப்பட்டுவிட ்டது! இனி அவர் திருந்துவதும் திருந்தாதும் அவரின் சொந்த விஷயம்! தமிழ் சமூகம் ஒருபோதும் அவரை நம்ப போவதில்லை.கனிமொழிகள் மன்னிக்கபடலாம் என்றால், எவரும் மன்னிக்கபடலாம்!
Quote
 
 
+70 #17 Radhamuthukmar 2011-11-30 04:27
சவுக்கு உமக்கு எதுக்கு கொலவெறி ? கனிமொழி, கருணாநிதிக்கு பிறகு ஒருபோதும் தமிழ்நாட்டு அரசியலில் ஒன்றையும் செய்துவிட முடியாது. அது இந்த உலகத்துக்கே தெரியும். ஏதோ கனியை விடுதலை போராட்ட தியாகி அளவுக்கு உசுப்பு ஏத்தி விட்டு இருப்பது நகைப்புக்கு உரியது.........அன்பான கனிமொழி.......ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ......அப்பா இப்பவே கண்ணை கட்டுதே............
Quote
 
 
+39 #16 தமிழ்ப்பிரியன் 2011-11-30 01:58
சவுக்கு, ஒரு சிறு பிழை இக்கட்டுரையில்:

கருணாநிதியின் வாரிசுகள் (தெரிந்தவை மட்டும்):
முதல் தாரம்: மு.க. முத்து, இரண்டாம் தாரம்: மு.க.அழகிரி, மு. க. ஸ்டாலின், மூன்றாம் தாரம்: கனிமொழி (ராஜாதி'க்கு ????)

பண்டாரங்கள் ஆட்சி செய்யும் குஜராத், மத்திய பிரதேசம் தமிழகத்தை விட நூறு மடங் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
இதற்கு கர்நாடகம் மட்டுமே விதி விளக்கு. கனிமொழி கவிஞராக இருந்து விட்டு போகட்டும். மற்ற மாநிலங்களின் வளர்ச்சி பற்றி கனிமொழிக்கு தெரியாதது ஒன்றும் ஒரு பெரிய விடயம் இல்லை. கருணாநிதிக்கு பிறந்த பிள்ளை இப்படி தான் இருக்குமென்பதில ் ஐயமென்ன.

வாழ்த்துக்கள்
தமிழ்ப்பிரியன், பாரிஸ்.
Quote
 
 
+33 #15 vivek prabha 2011-11-29 23:36
நல்ல தலைவர்கள் கிடைக்காதபச்சதி ல், இரன்டும்கட்டான் நிலையில் இருப்பவரை நல்வழிக்கு கொன்டுவர சவுக்கு எடுக்கும் முயற்ச்சிக்கு வாழ்த்துகள்.
ஆனால்
நரிக்கு சிங்கம் பிறக்காது (புது மொழி 0001)
ஃ சவுக்கு
வீண்முயற்ச்சி வெட்டிவேலை(புது மொழி 0002)
(அதிகபிரசங்கிதன மாக எதாவது ஏழுதிருந்தால்
மன்னிகவும்)
Quote
 
 
+25 #14 ஊர்க்குருவி. 2011-11-29 23:27
கருணாநிதியையும் திமுகவையும் மிகவும் வெறுத்தாலும் கனிமொழியை ஒருகாலத்தில் நான் மதித்ததுண்டு,

ஒருகட்டத்தில் இவர்களது செயல் மோசமாக வெறுக்கவேண்டியி ருந்தது. கனிமொழி சிறை சென்றபோது அது சரியானதாகவே பட்டது.

இன்று மனிதாபிமானமோ என்னவோ கனிமொழி பிணையில் வெளிவந்திருப்பத ை செய்தியில் பார்த்து எதிர்க்க தோன்றவில்லை, அதற்கான சரியான காரணங்களும் நேரடியாக கூறத் தெரியவில்லை.

மனிதன் ஒரு காலகட்டங்களில் பலவற்றை மறந்துவிடக்கூடி யவன். இன்னும் பார்த்தால் உறவினர்கள்/ விரும்பிய பிரபலங்கள் விடும் பிழைகளை மன்னிக்கக்கூடிய மனப்பாங்கும் பலரிடம் உண்டு.

இன்றய சவுக்கின் பதிவிலிருந்து நான் மறந்துபோன சில நிகழ்ச்சிகள் மீண்டும் ஞாபகத்துக்கு வந்தன. அவை சில நேரங்களில் கனிமொழிமீதிருந் த இரக்கம் தெவையற்றது என்பதுபோல் எண்ண வைக்கிறது. இருந்தும் காலம்தான் அனைத்தையும் தீர்மானிக்க வல்லது என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன்.இருந்தும் கனிமொழி தனது சென்றகால நிகழ்வுகளை பகுத்துணர்ந்து கொண்டால் அவருக்கும் மற்றவர்களுக்கும ் நன்று.
Quote
 
 
+26 #13 Hariharan. P 2011-11-29 23:03
There was a tiger which covered herself with cow skin. Many believed it was cow. But some wise people knew it was the tiger under cover. Later it was out and every one saw that tiger. Today savukku is advising the tiger about vegetarian habits. If the tiger reads this article it might laugh at savukku for his innocent expectations.
Quote
 
 
+46 #12 Natarajan05 2011-11-29 22:18
Did any body asked u what Kanimozhi should do now ?
You are utilizing all your Post to attack Jaffar Sait, Casper, Saravanan and the people you don't like..
Kanimozhi Nallavar Vallavar Kavingar Penniyavaandhi (sory Penniyavaadhi)... etc...
Why you are blowing Jalra to Kanimozhi now ?
Quote
 
 
+50 #11 Sankara 2011-11-29 22:06
வொய் திஸ் கொலவெறி சவுக்கு. ஏத்திவிட்டு ஏத்திவிட்டே திஹார் வரை அனுப்பிட்டீங்க.
Quote
 
 
+18 #10 gjjp 2011-11-29 21:22
சார் , இதை திறந்தவுடன் ,பின்புலத்தில் ஏதோ உரையாடல் போய்கொண்டிருக்க ிறது .
கவனிக்கவும்
Quote
 
 
+65 #9 prabhu ramaswamy 2011-11-29 21:12
சவுக்கிடம் எனக்கு மிகவும் பிடித்தமானதெ இந்த நக்கலும் நைய்யன்டியும் தான்

"இன்று திராவிட இயக்கத்தின் மூத்த முதுபெரும் தலைவராக உருவெடுத்திருக் கும், தமிழ்த் தாய் குஷ்பூ "
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 82 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4485
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57222
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month176030
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391758