முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஆம் இது ராஜ ராஜனின் ஆட்சி தான். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 66
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2010 11:25

தஞ்சாவூர் பெரிய கோயிலின் 1000வது ஆண்டு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி “சோழர் காலம் பொற்காலமாக இருந்தது. தமிழகத்தில் பொற்கால ஆட்சியை முதல் அமைச்சர் கருணாநிதி நடத்தி வருகிறார். ராஜராஜ சோழனாக இருக்கும் உங்கள் பொற்காலத்தில் நீங்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும். இந்த விழா எடுத்தால் ஆட்சிக்கு வர முடியாது என்று சொன்னார்கள்.   அந்த எண்ணங்களை எல்லாம் எல்லாம் தகர்த்து எரியும் முயற்சியாக வந்து இருக்கிறீர்கள். யார் எடுத்தால் என்ன ? பெரியார் வழியில் வந்தவன். அண்ணா வழியில் வந்தவன் என்பதை நிரூபிக்கும் வகையில் விழாவிற்கு வந்து இருக்கும் உங்களை வணங்குகிறேன்“

முதலில், பெரியார் வழி வந்தவருக்கு மூட நம்பிக்கை பழக்கம் இருக்கலாமா ?   வாய்க்கு வாய் பெரியார் காட்டிய வழி, அண்ணா காட்டிய வழி என்று கூறும் கருணாநிதி, பெரிய கோவிலின் முதன்மை வழியில் நுழையாமல், சிவகங்கை பூங்கா வழியாக பெரிய கோயிலில் நுழைந்த மர்மம் என்ன ? இதுதான் பகுத்தறிவுக்கு அடையாளமா ?

 கருணாநிதிக்கு 1989-90ல் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் சொன்ன விஷயம் என்ன தெரியுமா ? கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டை விட்டு, வண்டி கிளம்பியவுடன், வீட்டின் அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலைப் பார்த்து, கருணாநிதி, ரகசியமாக கும்பிடுவார் என்பதுதான். இது தவிரவும், வீட்டில் ரகசியமாக நடைபெறும் யாகங்களிலும், கருணாநிதி பங்கேற்பது வழக்கம் என்றே அந்த பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

 புட்டபர்த்தி சாய்பாபா வழங்கிய மோதிரத்தையே தயாளு அம்மாள் அவர் கையால் பயபக்தியோடு பெற்றுக் கொண்டதை வேடிக்கை பார்த்தவர் தானே இந்தக் கருணாநிதி.

 சரி. இப்போது அடுத்த விஷயத்திற்கு வருவோம்.   பொன்முடி, ராஜராஜனின் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது என்று கூறுகிறாரே ? ராஜராஜன் எப்படிப் பட்ட ஆட்சியை நடத்தினான் என்பதைப் பற்றி வரலாற்று ஏடுகள் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்.

 

Raraja_detail

 

ராஜராஜன் காலத்தில் அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது. பெரும்பாலும் அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன.

 சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாக சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.

சோழர் காலத்தில் தேவரடியார்கள் எனப்படும் ஆடல் மகளிர் பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். ஆடவர்களுடன் இன்முகத்துடன் பழகினாள். ஆனால், சிலருடன் மட்டும் நெருங்கிய நட்புக் கொண்டாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். தற்காலத்தில் நகரத்தில் தோன்றியுள்ள விலைமாதர்களை மனத்தில் கொண்டு அக்காலத்திய ஆடற்பெண்டிரை நாம் மதிப்பிடுவது பெரும் தவறு என்பதற்கு அக்காலத்துக் கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் படிப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.


சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான தானங்களைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.

 சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று ‘தீண்டாச்சேரி’ என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது – கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் ‘தீண்டாதார்’ எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் ‘சேரிகள்’, அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.

பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாக செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.

 சோழர்கள் வேழத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு"[6] என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

 
ரொமிலா தபார் (Romila Thapar) என்று முக்கிய வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்தை குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது வேற்றோராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

சோழர்களின் வெளிநாட்டு வணிக முயற்சிகளின் செல்வாக்கு, சீனா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகள் வரை எட்டியிருந்தது.

 இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. இப்பெயர்களுடன் சோழேந்திர சிம்மன், சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி, சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன், இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க குல காலன் போன்ற பல பட்டங்கள் பெற்றிருந்தான்.

 

ராஜராஜ சோழனின் மிகச் சிறந்த சாதனையாக தஞ்சை பெரிய கோயில் கருதப் படுகிறது.

 

சரி. இப்போது கருணாநிதியையும், ராஜராஜனையும் ஒப்பிடுவோம்.   ராஜராஜன் காலத்தில் அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப் பட்டது.   கருணாநிதி காலத்தில் மூத்த ஆண் வாரிசுக்கு அரசுரிமை வழங்கப் பட இருக்கிறது.

karunanidhi-in-pattu-vaetti-sattai

 ராஜராஜன் காலத்தில் அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.   கருணாநிதி குடும்பத்துப் பெண்களுக்கு கருணாநிதி மீது இருக்கும் செல்வாக்கு, ஊரறிந்தது.

 அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரை திருமணம் செய்து கொண்டனர். கருணாநிதிக்கு எத்தனை மனைவி என்பது உங்களுக்கே தெரியும்.

karunanidhi-fast-28-04-09-05

 சோழர் காலத்தில் தேவரடியார்கள் எனப்படும் ஆடல் மகளிர் பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். கருணாநிதி காலத்தில் நடனத்திலும், இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்ற பெண்கள், கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் தொண்டு புரிகிறார்கள்.

 சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான தானங்களைப் பற்றிய கல்வெட்டுக்களை பார்த்தால் விளங்கும்.   கருணாநிதி காலத்தில் கூத்தாடிகள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது கருணாநிதி அவர்களுக்கு வாரி வழங்கியுள்ள அரசு நிலங்களையும், வரிச்சலுகைகளைப் பற்றிய அரசாணைகளைப் பார்த்தால் தெரியும்.

 சோழர்கள் சாதிய அடுக்கமைவையும், அமைப்பையும் ஏற்று ஆட்சி புரிந்தார்கள். கருணாநிதி, சாதிய அடுக்கமைவுக்கு ஏற்றவாறு, அதை பாதுகாக்கும் வகையில், குடும்பத்தையும் நடத்துகிறார், ஆட்சியையும் நடத்துகிறார்.

 பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுக்குள் வைத்திருந்தனர்.   இந்து ராம், சோ, சுப்ரமணிய சுவாமி போன்ற பிராமணர்களே, இன்றும் கருணாநிதியை கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.

 சோழர் காலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். கருணாநிதி ஆட்சிக் காலத்தில், நூற்றுக்கணக்கான நடிகைகளும், துணை நடிகைகளும், விழா நடத்தி அதில் நடனமாடி கருணாநிதியை களியூட்டுவதற்காக இருக்கிறார்கள்.

 சோழர் காலத்தில் ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். கருணாநிதி ஆட்சியில், அதிகாரிகள் என்ற போர்வையில் ஏராளமான அடிமைகள் வேலை செய்கிறார்கள்.

 இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். கருணாநிதி தொடக்க காலத்திலேயே முத்தமிழ் அறிஞர் என்ற பட்டத்தைப் பெற்றார்.

 இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன.   சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலைஞர் கருணாநிதி நகர் என்று நகரங்களுக்கு பெயரிடப் பட்டதோடு, கலைஞர் நகரம், கலைஞர் நினைவு சமத்துவபுரம் என்று பல்வேறு ஊர்களுக்கு கருணாநிதியின் பெயர் வைக்கப் பட்டது.

 இப்பெயர்களுடன் ராஜராஜன் சோழேந்திர சிம்மன், சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி, சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன், இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க குல காலன் போன்ற பல பட்டங்கள் பெற்றிருந்தான்.

 

PR_014

 

கருணாநிதி முத்தமிழ் அறிஞர் என்ற பட்டத்தோடு, செம்மொழிக் காவலர், தமிழறிஞர், தமிழினக் காவலர், தமிழர் தலைவர், கலைஞர், டாக்டர், கூத்தாடிகளைக் காத்த காத்தாடி, தொல்காப்பிய நாயகன், முத்தமிழ் வித்தகர், மூதறிஞர், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞர், குறளோவிய நாயகர், தொல்காப்பிய பூங்காவின் வாட்ச் மேன், போன்ற பல பட்டங்களை பெற்றிருந்தார்.

 சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது.

 சோழர்களின் வெளிநாட்டு வணிக முயற்சிகளின் செல்வாக்கு, சீனா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகள் வரை எட்டியிருந்தது.

கருணாநிதி குடும்பத்தின் வணிக முயற்சிகள், தமிழகத்தை தாண்டி, சுவிட்சர்லாந்து, கேமன் தீவுகள் என்று பல்வேறு இடங்களில் பரவியுள்ளன.

ராஜராஜனின் மிகப் பெரிய சாதனை தஞ்சை பெரிய கோயில்.  கருணாநிதியின் மிகப் பெரிய சாதனை, புதிய தலைமைச் செயலக கட்டிடம்.

கருணாநிதி படையெடுத்துச் செல்லாமலேயே, ஈழத் தமிழினத்தை தனது உண்ணாவிரதம் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவுமே அழித்தார்.

இப்போது சொல்லுங்கள். இது ராஜராஜன் ஆட்சி தானே…. …. ?  

 

 ராஜராஜன் சிலையைப் பற்றி கருணாநிதி வருத்தப் பட்டு பேசியது குறித்து, கவிஞர் இன்குலாபின் கவிதையோடு, இக்கட்டுரையை நிறைவு செய்கிறது சவுக்கு..

 

ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்

ராஜராஜனின் சிலையின் உள்ளே

நரம்புகள் உண்டா ? நாளங்கள் உண்டா ?

சிலையாகுமுன்னர் ஜீவித்திருந்த

இம்மன்னன்

எதைச் செய்து கிழித்துவிட்டானாம் ?

ஈழம் கொண்டானாம்...

சாவகம் வென்றானாம்...

காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலை

பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு

மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்

கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்

பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக

குடும்பவிளக்கின் கொழுந்துகளை எல்லாம்

மண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்

தஞ்சை நகரில் தேவரடியார் தெருக்களுக்குக்

கால்கோள் விழாச்செய்த காமுகன்

இம் மன்னன்.

மக்களாட்சியின் மகத்துவத்தைச்

சிலையான பின்னும் கற்பழிக்கிறான்

 

Comments  

 
0 #79 leelavinothan 2011-07-25 00:25
i was read your openions. but i dont like your negative openions for against raja raja solan. because did not know the democracy if supposed knowed advancely.definetly he would followed that if you dont like kalainar" you can write against him. but dont write against raja raja solan because you are a little stone but the kingdom raja rajan is sun mind it.
Quote
 
 
+2 #78 Arunkumar 2011-05-31 14:19
சவுக்கு வாசகர்களுக்கு கவனிக்கவும். ராஜ ராஜன் மிகச்சிறந்த மன்னர்தான். சிறந்த நிர்வாகத் திறமை பெரும் சாம்ரஜ்ஜியத்தை கட்டிக்காத்த ஆளுமைக்கு தலை வணங்கலாம். ஆனால் துணி துவைக்கும் சலவைக்கல்லுக்கு ம் வரி விதித்த சோழன் பார்ப்பனர்களுக் கு பல கிராமங்களை வாரி வழங்கினான். பார்ப்பனர்களுக் கு தானமாக வழங்கப்பட்ட கிராமங்களுக்குள ் அரசாங்க அதிகாரிகள்கூட பார்ப்பனர்களின் அனுமதியின்றி நுழைய முடியாது. பார்ப்பனர்கள் சாதி பேதத்தை வளர்த்தனர். ராஜ ராஜன் பார்ப்பன சமுதாயத்தை வளர்த்தான். வரி கட்ட முடியாத விவசாயிகளிடமிரு ந்து நிலம் கையகப்படுத்தப்ப ட்டது. தனது பாவங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு கோவிலைக்கட்டியத ாக ஆய்வாளர்களும் கூறுகின்றனர். குடவோலை முறை ஒன்றும் தேர்தல் அல்லவே? நட்பு மன்னர்களுக்கு பரிசுகள் கொடுக்கும்போது கனிகயரையும் அனுப்பியதாகவும் செய்தி உண்டே? இதுதான் பெண்களை மதிக்கும் குணமா? வாசகர்கள் உண்மை நிலயை உணரவே நான் இக்கருத்தை எழுதியது. உண்மயான வரலாற்றை படித்தவர்கள் சிந்திக்கவும்.
Quote
 
 
-1 #77 M G Bala 2011-05-12 12:46
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர் கருவூறார் அருளிய சத்தி
காயந்திரி மந்தரத்திற்கு முதன் முதலாக இசை அமைக்கப்பட்டுள் ளது
சித்தர் அடியார்கள் சோழ தேச வரலாற்று அன்பர்கள் வாங்கி பயனடையவும்
தொடர்புக்கு: M G பாலா 9345342424
Quote
 
 
+3 #76 கல்கியின் நந்தகி 2011-02-11 18:33
எனகென்னமோ இந்த கட்டுரைய (ராஜராஜன் தொடர்பான கருத்துக்களை மன்னிக்கவும் பேத்தல்களை) படிச்சா பிறகு உங்கள லூசோன்னு நினைக்க தோணுது. நீங்க இன்னம் நெறைய ராஜராஜ சோழன பத்தி படிச்சிட்டு எழுதுங்க
Quote
 
 
+1 #75 kilan 2011-02-06 11:32
காணியாட்சி எனப்படும் உரிமையும் பொறுப்பாண்மையும ் கொண்ட நிலப் பரிமாற்ற உரிமை சோழர்களின் தனித்த நிலக்கிழமை உருவாக்கத்தின் கூறு ஆகும். ஆங்கிலேயர்கள்தா ன் இந்தியாவில் முதன்முதலாக நிலத்தை அளவு செய்து குறித்தனர் என்பது தவறான கருத்தாகும். ராசராசன் காலத்தின் நிலஅளவை செய்யப்பட்டுள்ள து. அவன் அதை ஆள்வினை வசதிக்காக வளநாடுகளாகப் பிரித்துள்ளான். மிகப்பரிய நில வருவாய்த்துறை சோழனுடையது. வளநாடு என்பது சோழர்களால் உருவாக்கப்பட்ட ஆள்வினை அமைப்பு, கோட்டம் என்பது பல்லவர்களால் உருவாக்கப்பட்டத ு. ஊர் என்ற பிரிவு சங்கக் காலத்திற்கு முன்பிருந்தே இருந்த அமைப்பு, சபா என்பது பிரமதேயம் போன்ற பார்ப்பனக் குடியிருப்பு அத்துடன் நகரம் என்ற வணிகர்கள் பெரும்பான்மையாக உள்ள அமைப்பு என்று செம்மையான ஆள்வினை அமைப்புகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைத்ததைப் பார்க்கையில் வியப்பு மேலிடுகிறது. இது இன்று உள்ள ஊராட்சி நகராட்சி, மாநகராட்சி என்ற அமைப்பிற்குச் சற்று குறைவில்லாமல் இருந்துள்ளது. நிலம் உள்ளவர்கள்தான் ஊர் சபையில் உறுப்பினராக முடியும் என்பது அந்த பிரமதேயத்திற்கே உரிய விதியே தவிர சோழ மண்டலம் முழுமைக்கும் ஆனதன்று. இது தவிர தனியடைமைகளை பரந்துபட்ட சாதியினரும் பெற்றுள்ளனர். ஆனால் பல்வேறு அடுக்குமுறைகள் இருந்துள்ளன. வேளாளர்கள் நிலவுடைமையை காராண்மை என்ற உரிமையின் கீழ் பெற்றிருந்தனர். இவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அல்லர். வேளாண்மையில் ஈடுபட்டுள்ள பல சாதிகளும் இந்த உரிமை பெற்றனர். உழுகுடிகள் என்ற குத்தகை உழவர்களும் இருந்துள்ளனர். இவர்களும் குறிப்பிட்ட சாதியினர் அல்லர். இந்தச் சூழல் பலரும் இதுதவிர பிரமதேயம் போன்ற முழு உரிமை கொண்ட நிலவுரிமை அதாவது வாங்கவும் விற்கவும் கூடிய தன்மை கொண்ட நிலவுரிமையும் இருந்துள்ளது.
Quote
 
 
0 #74 kilan 2011-02-06 11:32
நொபொரு கரசிமா தனது ஆய்வில் சோழர்களின் காலத்தில் பிரமதேயங்களும், பார்ப்பன தனியார் நிலங்களும் கோவில்களுக்கு மாற்றப்பட்டுள்ள தாக கூறுகிறார். அதாவது இராசராசன் பிரமதேயங்களின் அதிகார மையத்தை உடைக்க மாற்று அதிகார மையமாக கோவிலை உருவாக்கியுள்ளா ன். ஏனெனில் பல்லவர்கள் சமற்கிருதத்தை அறிமுகம் செய்து வளர்ப்பதற்கும் உதவினார்கள். ராசராசன் போன்றவர்கள் தமிழுக்கு முதன்மை கொடுக்க முனைந்தனர். முதல் சமற்கிருதக் கல்வெட்டு பல்லவர் காலத்திலேயே வந்துவிட்டது (கிக்ஷீநீலீணீமீ ஷீறீஷீரீஹ் ஞிணீவீறீஹ் ழிமீஷ்s ) நந்திவர்மனின் சமற்கிருத செப்பேடு பற்றி ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார ். அதன் பயனாகவே சிதம்பரத்தில் தமிழ் மறைகளை மீட்டது போன்ற செயல்கள். ஆனால் சோழனுக்கு கருத்தியல் உதவியும் தேவைப்பட்டது. அதற்கு தமிழ்ப்பக்தி இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டான். சமற்கிருத ஆட்சி மொழி மீது பொதுவான மக்களுக்கு இருந்த வெறுப்பைப் பயன்படுத்தி வளர்ந்த பக்தி இயக்கம் சோழர்களுக்கும் பயன்பட்டது. தனியார் நிலவுடமை சோழர்கள் காலத்தில் அதிகமானதாக ரொமிலா தாப்பர் போன்றவர்கள் கூறுவதை எஸ். ராகவன் மறுத்து பிரிட்டிசாரின் ரயத்துவாரி போன்றதல்ல அந்த தனியுடமை, அது கோயில்களுக்கும் ஊர்களுக்கும் பொதுவானதாக இருந்தது என்கிறார்.
Quote
 
 
+4 #73 velmurugan007 2011-01-07 14:37
IDIOTS, I HATE THE POEM WHICH WAS IN THE ABOVE , HOW DARE YOU ARE TALKING ABOUT SRI RAJARAJAN . FIRST STUDY THE HISTORY THEN PUT YOUR COMMENTS.

HOW YOU CAN COMPARE KALAIGAR AND RAJARAJAN...


PANNIKKUM , MANITHANUKKUM VITHITHIYASAM THERIYATHA MADAYANEY
Quote
 
 
+3 #72 Venkat 2010-12-10 14:54
Savuku, you should think at least twice before writing article about the legends like Raja Rajan. You lost your name and respect!!! Also don't compare Raja rajan with these mother F**kers. Very very bad article so for....
Quote
 
 
0 #71 Prakash 2010-12-08 21:46
Quoting Pradeep_P:
தமிழின துரோகி ...இதையும் சேர்த்துக்குங்க

Info given on Raja Rajan by savukku is absolutely correct, Casteism in tamil nadu is strictly imposed by raja rajan rule we have lot of proofs for this,,, what we all speaking about Raja rajan is a illusion. Dont blame savukku edharathathai edharthamai parungal oru DMK karan karunanidhikku vakkalathu vanguvadhu polavae ulladhu ungal anaivaradhu pechum....ungalin indha pinnutam enaku miguntha varutham allikkiradhu
Quote
 
 
+3 #70 Panivazhan 2010-11-29 17:17
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
+2 #69 Thanjai.Siva 2010-11-29 16:00
Savukku! please dont compare this politicians, robbers, criminals, rapist & fuckers... with the "Great Rajaraja Cholan".
Mr.Ingulaab... What you know about Hinduism? Thirukkural is not only for Hindus, thats for human behavier.
Quote
 
 
-1 #68 walajabalaji 2010-11-24 02:32
எந்த ஒரு ஆட்சியிலும் நல்லதும் கெட்டதும் இனைந்தே கானப்படும்.
There is no system still in the world with zero flaw.
ஆக ஒப்புமான அடிபடயில் நீங்கள் மு.க ஆட்சியை ராஜராஜன் ஆட்சி உடன் ஒப்பிட்டுள்ளீர் கள். கன்டிக்கபட வேன்டியது. சற்றேழ தாழ உள்ள விஷயங்களை மட்டுமே ஒப்பிட வேன்டும் என்ற குறைந்த பட்ச அறிவு பதிபாளருக்கு வேன்டும்.
மிக மோசமான பதிவு !

சவுக்கிற்க்கு சவுக்கடி கொடுக்கப்படும்.
Quote
 
 
+5 #67 veeraraj 2010-11-21 15:08
தீவிர சிவ பக்தர்களான சோழர்களை மனு தர்மத்தை ஏற்கசெய்து பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சியின் விளைவு தான் "தீண்டாமை"..ராஜராஜ சோழன் மட்டும் அல்ல முழு தமிழகமுமே அப்போது சமஸ்கிருதம் மற்றும் பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு உட்பட்டு தான் இருந்தது..இதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்..ஏன் பணிய தேசத்தில் இல்லையா? பல்லவ தேசத்தில் இல்லையா?எங்கு இல்லை என்று உங்களால் கூற முடியுமா?..ஆயிரம் வருடங்கள் கடந்தும் அவரை உலகம் மறக்கவில்லையே அது எதனால்?..நீங்கள் கூறியது போல் அவர் கொடுமைகள் புரிந்ததாலா?..ஏன் நீங்களோ..மக்களாட்சியை பற்றி அவ்ளோ கவலைப்பட்ட அந்த உலக மகா கவிஞரும் ராஜராஜனால் உணவு கூட உட்கொள்ள முடியாத நிலைக்கு போய் விட்டீர்களா?..இப்போதைய அரசியல் தலைவர்களை பற்றி நீங்கள் எழுதுவதற்கு உலகம் போற்ற வாழ்ந்த அந்த தமிழ் பேரரசனை அவமதிப்பது சற்றும் அழகல்ல..
Quote
 
 
+1 #66 pozhilan 2010-10-09 02:30
http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=106981695&tid=5525674549637446212&na=4
Quote
 
 
+3 #65 revathasan 2010-10-05 16:13
சவுக்கே, நான் உன் ரசிகன், உன் சவுக்கு சுழலும் போது அதன் உண்மையை மனமார பாராட்டி மகிழ்ந்தவன் , என் தந்தையிடமும் உன்னை பற்றி பெருமையாக சொன்னவன், ஆனால் உன்னிடம் இருந்து இந்த ஒப்பிட்டு பதிவை வன்மையாக எதிர்க்கிறேன். கண்ராவதி கருணா நாயை- ஐ பற்றி என்ன வேண்டுமென்றாலும ் கூவிக்கொள், மாமன்னர் ராஜராஜனை இழிவு படுத்தாதே, அவர் தமிழின அடையாளத்துள் ஒருவர்,
Quote
 
 
0 #64 alax 2010-10-05 10:23
மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்த தீண்டாமையும் அதன் காரணமாக எழுந்த புரட்சிகளும் பதினாராம் நூட்ட்ரண்டில் நடந்தன என்றல் அம்மக்கள் எவ்வளவு காலம் நம்மைவிட keez எந்த விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலத்தில் சமுதாயத்தை அமைதியாக வைத்திருக்க ஆடல், பாடல், கலைகள் என்று ஏற்படுத்தி வைத்தார்கள். அது கூட ஒரு சமூக நியதிக்கு கட்டுப்பாட்டு இருந்தது. தற்போது?
Quote
 
 
+4 #63 alax 2010-10-05 09:59
" ஆனால் அந்த ஏரி வெட்டும் பணியில் தலித்துகள் எந்தக் காரணம் கொண்டும் ஈடுபடுத்தப் பட மாட்டார்கள். ஏனெனில் அந்த ஏரியில் வரும் நீர் தலித்துகள் வெட்டினால் தீட்டுப் பட்டு விடுமாம். குடவோலை முறையில், தலித்துகள் வாக்களிக்க உரிமை இல்லை என்பது தெள்ளத் தெளிவாக திருவாலங்காடு செப்புப் பட்டயத்தில் உள்ளது. மேலும் விபரம் தேவைப் பட்டால், நீலகண்ட சாஸ்திரிகளின் A History of South India படித்து விட்டு, ராஜராஜனின் மறு பக்கத்தை சவுக்கு எழுத தயாராகவே உள்ளது."

சவுக்காரே முதலில் ஒன்றை புரிந்துகொள்ளவே ண்டும். ராஜராஜன் தீண்டாமையை ஆதரித்ததாக எழுதியுள்ளீர்கள ். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால நிலைமையும் தற்போது உள்ள நிலைமையும் ஒப்பிடும் சிறுமையை என்ன செய்வது?.
எல்லா மதங்களையும் அரவணைத்து வந்தேறி மதங்களுக்கும் இடம் கொடுத்தவன் ராஜராஜன் மற்றும் அவர் மகன் ராஜேந்திரன்.
குதர்க்கமாக எதை வேண்டுமானாலும் எழுத கூடாது.
உலகில் எல்லா இனங்களும் குழுக்கள்க வாழவே பழகி உள்ளன. இயற்கை அப்படியாக உள்ளது. செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து உயர்வு, தாழ்வு கருதும் போக்கு நவீன காலத்தில்தான் ஏற்பட்டது.
Quote
 
 
+3 #62 புரவி 2010-10-04 16:32
குட வோலை முறையை கொண்டு வந்து மக்களாட்சியை நிலை நிறுத்தியவன் சோழன்.
விவசாயம் மேம்படுவதற்காக பாலம் காட்டினவன் சோழன்.
பள்ளர் பறையர் ஐ உயர்ந்த பதவியை அடைய வைத்தவன் சோழன்,
பெரிய கோவிலை கட்டிய அனைவரின் பெயரையும் கல்வெட்டில் செதுக்கியவன் சோழன்.
தேவரடியார் வேறு தேவதாசி என்பது வேறு. தேவரடியார் என்பவர்கள் ஆடல் பாடல் கலைகளில் உள்ளவர்கள்.
அதில் உயர்ந்த குடும்பத்தில் உள்ளவரும் இருந்தனர். இது தெரியாமல் வேண்டும் என்றே கால்புனற்சியோடு சோழனி காரி உமிழ்வது ஏற்று கொள்ள முடியாத ஒன்று.


சமஸ்கிருதம் குறைந்து தமிழில் பக்தி இலக்கியங்கள் படைக்கப்பட்டது சோழர்கள் காலத்தில்தான்,

தமிழகத்தில் மற்ற மன்னவர்கள் நாயக்கர், பல்லவர்கள் காலத்தில் நிகழ்த்து கொடுமைகள் அதிகம்.
தமிழுக்கு நேர்ந்த அவளமோ மிக அதிகம். அனால் இதை பற்றி தமிழகத்தில் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.
குறிப்பாக சோழனை காரி உமிழ்வது இந்த திராவிடம் பேசுபவர் கல்தான் இருகிறார்கள் என்பதி வேல்டை மழை.




சவுக்கின் நடு நிலைமை ????????? சந்தேக பட வைக்கிறதே.!!!!!!!!
Quote
 
 
+6 #61 புரவி 2010-10-04 16:18
ராஜ ராஜ சோழனை காரி உமிழ்ந்து எழுதிய இன்குலாப் திப்பு சுல்தானை மட்டும் புகழ்ந்து கவிதை எழுதி இருப்பது ஏன்?
ஒரு முறை திருக்குறளை பற்றி என்ன நினைகிரிர்கள் என்று கேட்டதற்கு "நீங்கள் திருக்குறளை பற்றி பேசினால் நான் குரானை பற்றி பேசுவேன் என்று சொன்னார்.
இதில் இருண்டு அவருடைய தமிழ் பற்றிய காழ்புணர்ச்சி நன்றாக புரிய முடிகிறது.
நல்ல வேலை ராஜ ராஜ சோழனை பற்றிய ராஜபக்ஷேவின் கவிதை போடாமல் விட்டதற்காக ஆறுதல் பட வேண்டி இருக்கிறது.


தடம் புரள்கிறது சவுக்கு.
Quote
 
 
+2 #60 G.G.Senthil 2010-10-04 13:19
karunanethi Oru Loosu
Quote
 
 
+3 #59 alax 2010-10-04 11:52
நதிர்சா, திமூர், செய்த படுகொலைகளும் சோழர்களின் தர்ம யுத்த நெறிகளும் ஒப்பிட்டு பார்த்தல் தான் இதெல்லாம் புரியும். தயவு செய்து வரலாட்ற்றை முழுமையாக படிப்பது நல்லது,
Quote
 
 
+7 #58 alax 2010-10-04 11:51
"சோழப்படையெடுப்ப ு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது."

சோழர்கள் ஒன்றும் நாடு பிடிக்கும் ஆசையினால் இலங்கையில் போர் நடத்தவில்லை. இலங்கை அரசர்கள் வாரிசு போட்டியினால் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு கொண்டிருந்தமயால ும், பாண்டியர்களுக்க ு உதவும் சாக்கில் சோழ, தமிழக உள் விவகாரங்களி தலையிட்டமயலும் தான் இலங்கை மீது சோழர் படையெடுப்பு நடந்ததேயன்றி நாடு பிடிக்கும் ஆசையால் அல்ல. வந்தேறிகள் வேண்டுமானால் சோழர் மீது அவதூறு பரப்பலாம். ஆனால் உண்மையான தமிழர் அவ்வாறு செய்ய மாட்டார்கள். மற்ற நாடுகளில் அரசர்கள் மதத்தின் பெயரால், ஆதிக்கத்தின் பெயரால், அடித்த கொள்ளைகளும், இன அழிப்புகளும் ஏராளம். அவற்றிற்கெல்லாம ் இந்த கவிஞர் என்ன சொல்லபோகிறார்?? தமிழர் மீது புழுதியை வாரி தூற்றும் இவர் சிலுவைப்போர்களு க்கும் (cross வார்), மக்கத்து போர்களுக்கும் என்ன பதில் வைத்திருக்கிறார ்.
Quote
 
 
+7 #57 alax 2010-10-04 11:39
ராஜ ராஜனை குறை சொல்ல எந்த மதத்தினருக்கும் அருகதை இல்லை . மற்ற அனைத்து மதங்களும் இன அழிப்பு செய்து , நாடுகளை பிடித்துதான் வளர்ந்துள்ளன . கவிஞர் இன்குலாபின் கவிதை அவர் முகத்தில் மட்டுமல்ல சவுக்கின் முகத்திலும் கரியை பூசிவிட்டது .
Quote
 
 
+2 #56 alax 2010-10-04 11:35
raja rajanai kurai solla entha mathatthinarukk um arugathai illai. mattra anaitthu mathangalum ina azhippu seithu, nadukalai piditthu than valarnthullana. kavingar ingulabin kavithai avar mugatthil mattumalla savukkin mugatthilum kariyai poosivittathu.
Quote
 
 
0 #55 nangavathuthoone 2010-10-01 20:35
TRUE NEWS:WWW.nangavathuthoon e.com
Quote
 
 
0 #54 nangavathuthoone 2010-10-01 20:33
TRUE NEWS: WWW.ullatchithagaval.com Tamil online magazine
Quote
 
 
0 #53 Pradeep_P 2010-09-30 15:01
தமிழின துரோகி ...இதையும் சேர்த்துக்குங்க
Quote
 
 
+2 #52 ravi nathan 2010-09-30 04:47
Quoting Velan:
உமது ரகசியக் கேமராவிலும் ஒட்டுக்கேட்புக் கருவிகளிலும் கருணாநிதி சாமி கும்பிடுவதும், யாகம் வளர்ப்பதும் பதிவாகியுள்ளதோ? கருணாநிதியே பிள்ளையாரைக் கும்பிடுகிறார், யாகம் வளர்க்கிறார் என்று பரப்பிவிட்டால், எவனும் நாத்திகம் பேசமுடியாதில்லை யா? போட்டீர்கள் பாரும் ஒரே அடி. சாயிபாபா-விடம் மோதிரம் வாங்கும் தயாளு அம்மாளை அமைதியாகப் பார்த்துக்கொண்ட ிருந்தவர்தானே இவர்… என்று. தனது கருத்தை மீறி மோதிரம் வாங்கிய பொண்டாட்டியை, ஒர்……ரே அறை விட்டிருக்கவேண் டாமா? அவர் சும்மா இருந்தால் சவுக்கு சும்மா இருக்குமா? சவுக்குக்கு கருத்துச் சுதந்திரம், பெண்ணுரிமை என்றால் ஜவ்வு மிட்டாய் சாப்பிடுவது போல அவ்வளவு இஷ்டம்.

.
thaavu seithu intha likai parkavum http://www.hayyram.blogspot.com/
Quote
 
 
0 #51 vasanth 2010-09-30 04:26
Sila natkalukku munbu than sadhi oru poruttu illai, thiramai dhan mukkiyam endru oru padhivil sonnergal. Indru Cho, S.Swamy & Ram-in meedhu thakudhal nadathi, ungal sadhi veriyai kaati viteergal...adhavadhu poonai kutti veliyil vandhu vittadhu. adhu eppidi ayya koochame padamal indha moonru perin kattupattil aatchi nadakiradhu endru sonneergal? Idhu varai neegnal pottadhu Mudhal Mariyadhai vesham, aanal ippoddhu Lollu Sabha Manohar...ha, ha, ha!
Quote
 
 
-3 #50 புலி 2010-09-29 21:40
Quoting புலி:
கால்புணர்ச்சியு டன் எழுதப்பட்டதாக சில தோழர்கள் எழுதுவது ஓரளவு சரியே எனினும் இந்த உணர்ச்சியும் சரி என்பதில் எந்த மாற்றமும் இல்லை .ஆனால் எந்த கருத்தாக இருந்தாலும் நாகரிகமாக விமர்சிப்பது மட்டுமே நாம் சவுக்குற்கு தரும் ஆதரவுக்கு அடையாளம் .இனி வரும் நாட்களில் சவுக்கிடமிருந்த ு நிறைய பொறுப்பு மிக்க பல விசயங்களை நாம் எதிர்பார்ப்பதால ் இது போன்ற பதிவுகளை தவிர்க்கலாம்

[quote name="புலி"]கால்புணர்ச்சிய டன் எழுதப்பட்டதாக சில தோழர்கள் எழுதுவது ஓரளவு சரியே எனினும் இந்த உணர்ச்சியும் சரி என்பதில் எந்த மாற்றமும் இல்லை .ஆனால் எந்த கருத்தாக இருந்தாலும் நாகரிகமாக விமர்சிப்பது மட்டுமே நாம் சவுக்குற்கு தரும் ஆதரவுக்கு அடையாளம் .இனி வரும் நாட்களில் சவுக்கிடமிருந்த ு நிறைய பொறுப்பு மிக்க பல விசயங்களை நாம் எதிர்பார்ப்பதால ் இது போன்ற பதிவுகளை தவிர்க்கலாம்]
Quote
 
 
-4 #49 புலி 2010-09-29 21:39
கால்புணர்ச்சியு டன் எழுதப்பட்டதாக சில தோழர்கள் எழுதுவது ஓரளவு சரியே எனினும் இந்த உணர்ச்சியும் சரி என்பதில் எந்த மாற்றமும் இல்லை .ஆனால் எந்த கருத்தாக இருந்தாலும் நாகரிகமாக விமர்சிப்பது மட்டுமே நாம் சவுக்குற்கு தரும் ஆதரவுக்கு அடையாளம் .இனி வரும் நாட்களில் சவுக்கிடமிருந்த ு நிறைய பொறுப்பு மிக்க பல விசயங்களை நாம் எதிர்பார்ப்பதால ் இது போன்ற பதிவுகளை தவிர்க்கலாம்
Quote
 
 
-2 #48 ஒரிஜினல் உடன்பிறப்பு 2010-09-29 19:59
கொஞ்சம் பழைய நாட்களை கலைஞர் திரும்பி பார்த்திருந்தால ், கரை வேட்டியை உதறியிருப்பாரா... அதே தஞ்சாவூர்... ஸ்டாலின் திருமணத்தின் போது தோள் மாப்பிள்ளையாக இருந்த அன்பில் பொய்யாமொழியின் மகன் திருமணம். தனது நண்பன் அகால மரணத்துக்கு பின், தந்தை ஸ்தானத்தில் இருந்து அத்திருமணத்தை நடத்தித் தர ஸ்டாலின் முடிவு செய்து, அத்திருமணத்தில் பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையும் அணிந்திருந்தார் . அதைப் பார்த்த கலைஞர் என்ன பேசினார். ‘எந்த நிலையிலும் தி.மு.க.காரனுக்கு கருப்பு சிவப்பு போட்ட கரை வேட்டிதான் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அந்த கரை வேட்டியைவிட, பட்டு வேட்டி உயர்ந்தது அல்ல. இனிமேல் தம்பி ஸ்டாலின் மட்டுமல்ல, எனது உடன்பிறப்புக்கள ் யாராக இருந்தாலும் பட்டு வேட்டி அணியவே கூடாது’ என்றார் கலைஞர்.
அப்படிப்பட்ட கலைஞரா.... பட்டுவேட்டியில் ...? ஏன் இப்படி செய்தார் கலைஞர்... பரிகாரமா... அல்லது ராஜராஜ சோழனின் தோஷம் ஒட்டிக் கொள்ளும் என்ற பயமா...ஆனாலும் என் தலைவன் கலைஞர் பட்டு வேட்டியில் இன்னும் மாப்பிள்ளை போலவே ஜொலிக்கிறார். அது சவுக்கு உள்ளிட்ட சிலருக்கு பொறாமையோ?
Quote
 
 
+11 #47 ஓவியம் பாலு 2010-09-29 16:14
கருணாநிதியை எந்த மன்னருடன்
ஒப்பிட்டு பேச வேண்டாம்.
எதற்கும் தகுதி இல்லாத ஒரு ஈனபிறவி
தமிழ் (ஈன) தலைவன் இவனே
கரு(நாய்) நீதியை சமகால
திருடர்களுடன் ஒப்பிட்டு பேசுங்கள்

தேசிய தலைவரின்
அன்பு தம்பி
ஓவியம் பாலு
Quote
 
 
+6 #46 Bharathi.. 2010-09-29 16:04
மனிதர்களின் செயல்களை காலங்களுடன், சமுதாயத்துடன் ஒப்பிட்டு பாருங்கள். அக்பரின் அந்தபுற மாளிகை இன்றும் அழியாமல் தான் இருக்கிறது.. மன்னர்கள் அன்றைய நாளில் எவ்வளவு சக்தி படைத்தவர்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும், எவ்வளவோ கொடுங்கோலர்களைப ் பற்றிய வரலாறுகளை நாம் அறிவோம். A History of South India படித்து விட்டு மட்டும் அல்ல நீங்கள் எந்த history படித்தாலும் அது கசப்பாகவே இருக்கும். ( சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள் நான் சொல்வது புரியும்) (இன்றைய ஆட்சியாளர்களுக் கு நான் ஆதரவு கருத்தாக இதனை சொல்லவில்லை.. )

நன்றி..
Quote
 
 
+5 #45 Bharathi.. 2010-09-29 16:03
சவுக்கு அவர்களுக்கு..
நான் கருத்தை ஆரம்பிக்கும் போதே "ராஜா ராஜனின் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது" என்று தான் ஆரம்பித்தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் நிலை என்ன என்பது உங்களுக்கு தெரியுமா..? அன்றைய கால கட்ட மன்னர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பீர்கள் என்று நினைத்தேன்.. ஆனால், நீங்களோ ..? 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஏன் இந்த நூற்றாண்டில் கூட தலித்துகளுக்கு எதிராக கொடுமைகள் நடக்கிறது தெரியுமா..? காட்டில் வசித்த மனிதன் வீடு கட்டி கொண்டது நாகரிகம், அவன் எழும்புகளை பயன் படுத்திதான் அதனை கட்டினான், அதை காடுமிரண்டிதனம் என்று சொல்ல முடியுமா..? (ctd..)
Quote
 
 
+1 #44 GUJARATHIYAN 2010-09-29 14:50
NALLA VELAI GUJARATH MUTHALVARIDAM RAJARAJANIN SILAYAI KETTARKAL
RAJARAJANIN VALAI KETIRUNDHAL
NARENDRA MODI YIN VAALAI KODUTHIRUPAR
TAMIL NADU SUPER POWER GUJARATHAKA MAARA KARUNANIDHI VIRUMBAVILLAI
Quote
 
 
+3 #43 ramsh 2010-09-29 14:28
Our society has become so negative that it is now seeing only the "Pathar" among Grains... If we are still speaking about one's Legacy after 1000 years what else do you require??? constant criticism is not going to take us any where and historically we dont remember any critics coming up big in their life....
Quote
 
 
-1 #42 raj 2010-09-29 11:20
you are targeting DMK peoples only. write about the AiADMK too. Then believe you are a right person. otherwise you are onesided.
Quote
 
 
+3 #41 Velan 2010-09-29 11:08
உமது ரகசியக் கேமராவிலும் ஒட்டுக்கேட்புக் கருவிகளிலும் கருணாநிதி சாமி கும்பிடுவதும், யாகம் வளர்ப்பதும் பதிவாகியுள்ளதோ? கருணாநிதியே பிள்ளையாரைக் கும்பிடுகிறார், யாகம் வளர்க்கிறார் என்று பரப்பிவிட்டால், எவனும் நாத்திகம் பேசமுடியாதில்லை யா? போட்டீர்கள் பாரும் ஒரே அடி. சாயிபாபா-விடம் மோதிரம் வாங்கும் தயாளு அம்மாளை அமைதியாகப் பார்த்துக்கொண்ட ிருந்தவர்தானே இவர்… என்று. தனது கருத்தை மீறி மோதிரம் வாங்கிய பொண்டாட்டியை, ஒர்……ரே அறை விட்டிருக்கவேண் டாமா? அவர் சும்மா இருந்தால் சவுக்கு சும்மா இருக்குமா? சவுக்குக்கு கருத்துச் சுதந்திரம், பெண்ணுரிமை என்றால் ஜவ்வு மிட்டாய் சாப்பிடுவது போல அவ்வளவு இஷ்டம். சாயிபாபாதானே கருணாநிதியைப் பார்க்கவந்தார், கருணாநிதி அவரைப் பார்க்கப் போகவில்லையே, தெலுங்கு கங்கை கால்வாய்க்கு நன்கொடையாக சுற்றுச்சுவர் கட்டித்தரும் விருப்பத்தை தெரிவிக்கத்தானே சாயிபாபா வந்தார் என்றெல்லாம் யாரும் அதிகப்பிரசங்கித ் தனமாக கேட்கக் கூடாது. வரலாறு, தர்க்கம், ஆதாரம் எல்லாம் சவுக்காரின் தனிச்சொத்து, யாராவது பங்குக்கு வந்தால் அவருக்கு கெட்ட கோபம் வரும்.
Quote
 
 
-4 #40 புரவி 2010-09-29 10:38
நல்ல வேலை ஈழத்தின் இந்த நிலைமைக்கே ராஜ ராஜ சோழன் தான் என்று சொல்லாமல் விடீர்களே.
Quote
 
 
-9 #39 iniavan 2010-09-29 10:30
AURANGZEB இன் கால் தூசுக்கு வரமாட்டான் இவன்.
Quote
 
 
-11 #38 iniavan 2010-09-29 10:27
aurangeb இன் கால் தூசுக்கு வரமாட்டான் இவன்.
Quote
 
 
+5 #37 கடோத்கஜன் 2010-09-29 09:30
HELLO KARTHIK_In
சு.சுவாமி ஆ.ராசா விற்கு எதிராக கொடுத்த பேட்டிகளையும் spectrum விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தில் அவர் தொடுத்த வழக்கு பற்றிய விவரங்களையும் தேடி படியுங்கள்.சோ தன் பத்திரிகையின் இந்த ஆண்டு விழாவில் கருணாநிதி குடும்பத்தை பற்றி எப்படி விமர்சனம் செய்துள்ளார் என youtube இல் பாருங்கள் பிறகு அடுத்தவரை loose என்று சொல்லலாம்.
Quote
 
 
-2 #36 Iyer 2010-09-29 06:23
இந்து ராம், சோ, சுப்ரமணிய சுவாமி போன்ற பிராமணர்களே, இன்றும் கருணாநிதியை கட்டுக்குள் வைத்திருக்கின்ற னர். Very correct
This is 100% true
Quote
 
 
+1 #35 Karthik_in 2010-09-29 03:20
Quoting pandian, journalist:
savukkukku paaraaddukaz. kaaval turai parria unkaz kadduraiaz piramaatam. inta aadsiyil unkazai kaitu seyta pin veeru enta miraddalum varavillaiyaa.? etarkum mikavum kavanamaaka irunkaz. makkaz urimai kazakattukku vantaal unkazai santikka mudiyumaa? vakkiilkaz pukazeenti, raataakirushnan aiyum paarkka veendum. attudan reyilil intu paperai virittu padutt unkaz aasiriar, unkazai sharp seyta police atikaari parriyum terintu kozza aasai. adikkadi santippoom/


SAVUKKU, IVAR ENNAMO ENAKKU SERIYA PADALAI. USHAAAARRRRR.
Quote
 
 
0 #34 Karthik_in 2010-09-29 03:19
Quoting கடோத்கஜன்:
இந்து ராம், சோ, சுப்ரமணிய சுவாமி போன்ற பிராமணர்களே, இன்றும் கருணாநிதியை கட்டுக்குள் வைத்திருக்கின்ற னர்.ஐயோ...ஐயோ... சவுக்கு நீ என்ன லூசா?


enakku ennamo neengathan loosu pola iruku..
Quote
 
 
0 #33 pandian, journalist 2010-09-29 01:40
savukkukku paaraaddukaz. kaaval turai parria unkaz kadduraiaz piramaatam. inta aadsiyil unkazai kaitu seyta pin veeru enta miraddalum varavillaiyaa.? etarkum mikavum kavanamaaka irunkaz. makkaz urimai kazakattukku vantaal unkazai santikka mudiyumaa? vakkiilkaz pukazeenti, raataakirushnan aiyum paarkka veendum. attudan reyilil intu paperai virittu padutt unkaz aasiriar, unkazai sharp seyta police atikaari parriyum terintu kozza aasai. adikkadi santippoom/
Quote
 
 
+2 #32 Kumar.T 2010-09-28 23:47
Quoting களப்பிரன்2:
சவுக்கு இன்று எத்தனை பேருக்கு அரசு வேலை கிடைத்திருக்கிற து தெரியுமா? ஒரு ருபாய் அரிசி எத்தனை லட்சம் குடும்பங்களில் பசியை போக்கி இருக்கிறது அறிவாயா? சத்துணவு திட்டத்தில் தினமும் முட்டை உண்டு தெரியுமா?காப்பீட்டு திட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கையாவது தெரியுமா?பெண்களுக்கு சொத்தில் சம உரிமை யார் கொடுத்தது அறிவாயா?முதியோர் pension? பெண்களுக்கு திருமண உதவிதொகை? கலைஞர் ராஜராஜனுக்கு தாத்தா.

கலைஞரின் திட்டங்கள் எல்லாம் மேலோட்டமாக மக்களுக்கு நல்லது செய்வது போல் தான் தோன்றும் ஆனால் உண்மைலில் அது அவருக்கும் அவர் குடும்பத்துக்கு ம் தான் பலன் போய் சேரும். ஒரு ரூபாய் அரிசி மக்களுக்கு விநியோகிப்பத்தை விட அதிகமாக கடத்த படுகிறது. அதன் பலன் அவர் குடும்பத்துக்கு .
காப்பீட்டு திட்டத்தின் (Start health insurance) மூலம் தனியார் மருத்துவமனைகள் தான் அதிக பலன் பெறுகின்றன. அதன் மூலம் ஒரு பெரிய commission குடும்பத்துக்கு போகிறது.
அதனால் தான் அவரை Sarkariya commission விஞ்ஞான பூர்வ ஊழல்வாதி என்று பெருமை படுத்தியது...
Quote
 
 
+3 #31 Mugil Bala 2010-09-28 23:01
இது ‘பகுத்தறிவு சிங்கம்’ கருணாநிதியின் மூட நம்பிக்கை!

கண்ணெதிரில் கட்சிக்கார் யாராவது குங்குமம் வைத்தபடி எதிரில் தென்பட்டால் உடனே அதை அழிக்கச் சொல்வார்… ராகு காலம் நல்ல நேரம் பற்றிப் பேசுபவர்களை எள்ளி நகையாடுவார்… கடவுள் இல்லை அல்லது இருந்தால் நன்றாக இருக்கும் என நேரத்துக்குத் தக்கபடி கமெண்ட் அடிப்பார்…
ஆனால் இந்த உபதேசமெல்லாம் ஊருக்குதான். தனக்கென்று வரும்போது நல்ல நேரம் பார்த்தால் தப்பில்லை… சங்கராச்சாரியின ் பிரசாதம் பரவாயில்லை… சாய்பாபா வீட்டுக்கு வந்து மாஜிக்கில் மோதிரம் வரவழைத்துத் தந்தாலும் ஓகேதான்… வீட்டுக்கு அருகில் உள்ள பெருமாள் கோயிலில் தினசரி அவர் பெயருக்கு பூஜை கூட நடக்கலாம்…
-அவர் வேறு யாருமில்லை, பெரியாரின் தொண்டர், அண்ணாவின் அரசியல் வாரிசு, பகுத்தறிவு சிங்கம் தமிழக முதல்வர் கருணாநிதிதான்.

- நன்றி என்வழி
Quote
 
 
-3 #30 victor 2010-09-28 22:48
Quoting சவுக்கு:
சில தோழர்கள், சவுக்கு, ராஜராஜ சோழனை இழிவு படுத்தி விட்டதாகவும், அவர் மிகச் சிறந்த நிர்வாகி என்றும், குடவோலை முறையை கொண்டுவந்தவர் என்றும், கருணாநிதி மீது காழ்ப்புணர்ச்சி என்றும் எழுதியிருக்கிறா ர்கள்.
கருணாநிதி மீது காழ்ப்புணர்ச்சி இருக்கிறதா என்றால் ஏராளமாக இருக்கிறது. எப்போதும் இருக்கும். அதற்கான காரணங்கள் ஏராளமாக உள்ளன. அவை சவுக்கில் பதிவு செய்யப் பட்டும் உள்ளது.
.


சார், சில அறிவு இல்லாத ஜென்மங்கள் எதையாவது இப்படித்தான் லூசுத்தனமா எழுதும் ,அதுக்கெல்லாம் நீங்க பதில் எழுதனும ....நாங்க பதில் சொல்லுவோம்ல
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 90 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4286
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57023
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month175831
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391559