முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
கடை வீதிக்கு வந்த கத்தரிக்காய். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 56
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 23 செப்டம்பர் 2010 22:34

கத்தரிக்காய் வீதிக்கு வந்தே விட்டது.   அரசல் புரசலாக நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்களுக்குள் குசுகுசுப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்த விஷயம் வெட்டவெளிக்கு வந்து விட்டது. இந்த விஷயத்தை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளவர், இந்தியாவின் மிக மூத்த வழக்கறிஞரும், இந்திரா காந்தியின் தேர்தலை செல்லாதாக்கக் கோரிய வழக்கில் ராஜ் நாராயணனுக்காக வாதாடிய வழக்கறிஞரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சாந்தி பூஷண். 

Shanti20Bhushan

 உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப் பட்ட பிரமாண வாக்குமூலத்தில் சாந்தி பூஷண் 16 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளை பட்டியலிட்டு அவர்களுள், 8 பேர் ஊழல் வாதிகள், 6 பேர் நேர்மையானவர்கள், 2 பேரைப் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.   சாந்தி பூஷண் ஊழல் வாதிகள் என்று நம்பும் எட்டு பேரின் பட்டியலையும் தனது பிரமாண பத்திரத்தோடு சீலிடப் பட்ட உறையில் இணைத்துள்ளார்.

 அந்த 16 நீதிபதிகள்

 

1)  நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா

2)  நீதிபதி கே.என்.சிங்

3)  நீதிபதி எம்.எஸ்.கணியா

4)  நீதிபதி எல்.எம்.சர்மா

5)  நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலைய்யா

6)  நீதிபதி ஏ.எம்.அஹமாதி

7)  நீதிபதி ஜே.எஸ்.வர்மா

8)  நீதிபதி எம்.எம்.புன்ச்சி

9)  நீதிபதி ஏ.எஸ் ஆனந்த்

10) நீதிபதி எஸ்.ப்பி.பரூச்சா

11) நீதிபதி பி.என்.கிர்ப்பால்

12) நீதிபதி ஜி.பி.பட்நாயக்

13) நீதிபதி ராஜேந்திர பாபு

14) நீதிபதி ஆர்.சி.லஹோதி

15) நீதிபதி வி.என்.காரே

16) நீதிபதி ஒய்.கே.சபர்வால்

 

இந்த 16ல் சாந்தி பூஷண் சொல்லும் ஊழல் நீதிபதிகள் யார் என்பது உச்ச நீதிமன்றம் சீலிடப்பட்ட உறையை பிரித்து படித்தால் தெரியும்.   தன்னுடைய மகனான பிரஷாந்த் பூஷண் மேல் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்திருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரியே சாந்தி பூஷண் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 அதோடு, தனது மனுவையும், தனது மகன் மீதான மனுவையும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தேர்ந்தெடுக்கும் யாரோ ஒரு மூன்று நீதிபதிகள் அமர்ந்து விசாரிக்கக் கூடாது எனவும், மொத்த உச்சநீதிமன்றமும் அமர்ந்து விசாரிக்க வேண்டுமெனவும், சாந்தி பூஷண் கோரியுள்ளார்.

 இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தொடக்கப் புள்ளி எது தெரியுமா ? பிரசாந்த் பூஷண் டெகல்கா வார இதழுக்கு கொடுத்த பேட்டி தான். 

 

Tehelka_interview_with_Prashant_Bhushan_Page_1

 

Tehelka_interview_with_Prashant_Bhushan_Page_2 

 

Tehelka_interview_with_Prashant_Bhushan_Page_3

அந்தப் பேட்டியில் தான் பிரசாந்த் பூஷண், நீதித் துறையில் ஊழல் பல்வேறு வடிவங்களில் உள்ளது. உதாரணத்துக்கு நீதிபதி கபாடியா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்தும், அந்நிறுவனத்துக்கு சாதகமாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார், என்று பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.

images_S_H__Kapadia__743653547

 

நீதிபதி கபாடியா

 

அதைத் தொடர்ந்து ஹரீஷ் சால்வே என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு இந்தப் பேட்டியை கொண்டு வருகிறார். உச்ச நீதிமன்றம், அவரையே நீதிமன்றத்தின் நண்பனாக இருக்க கேட்டுக் கொண்டு (Amicus Curiae) அவர் பெயரிலேயே தானாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிரசாந்த் பூஷண் மேல் எடுக்கிறது.   இவ்வழக்கு வரும் போது பிரசாந்த் பூஷணுக்காக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, தானாக முன் வந்து எடுக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அரிதிலும் அரிதான நேர்வுகளிலேயே எடுக்க வேண்டும், இந்த நேர்வு அப்படிப் பட்ட ஒரு நேர்வு அல்ல என்று வாதாடினார். ஆனால், அவரது வாதத்தை ஏற்றுக் கொள்ளாத உச்ச நீதிமன்றம், பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்கிறது.

 

இந்த வழக்கின் தொடர்ச்சியாகத் தான் சாந்தி பூஷண் தன்னையும் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு செய்துள்ளார்.

 

தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி கபாடியா அப்படி என்ன தான் தவறு செய்து விட்டார் ?

 

Kapadia_3

 

பிரசாந்த் பூஷண் அவர் மீது அப்படி என்ன தவறான குற்றச் சாட்டை சுமத்தி விட்டார் ?   அதைப் பற்றி விளக்கமாக பார்ப்போம்.   இந்தியாவின் தலைமை நீதிபதி கபாடியா உண்மையில் தவறு செய்தாரா ? நடந்தவைகளை அப்படியே சவுக்கு உங்கள் முன் வைக்கிறது. எது சரி, எது தவறு என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

 

ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் வேதாந்தா என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனத்தின் துணை நிறுவனம்.   சுரங்கம் தோண்டி, அதில் உள்ள தாமிரம் போன்ற உலோகங்களை எடுத்து விற்பனை செய்வதுதான் இந்நிறுவனத்தின் முக்கியப் பணி.   இவ்வாறு சுரங்கத் தொழிலில் ஈடுபடுகையில், இந்தியாவின் இயற்கை வளங்களை அழித்து, மலைவாழ் பழங்குடியினரை வீதியில் நிறுத்தும் நிறுவனம் என்று இந்நிறுவனத்தின் மீது குற்றச் சாட்டுகள் உண்டு.

 

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஒரு ஆண்டுக்கான, வரிக்குப் பிந்தைய லாபம் 1000 கோடி என்றால், இது எவ்வளவு பெரிய நிறுவனம் என்று பார்த்துக் கொள்ளுங்கள். (கருணாநிதி குடும்பத்தினர் எப்படி இதை விட்டு வைத்தனர் என்பது ஆச்சர்யம்).

 

இந்த ஸ்டெர்லைட் நிறுவனம் ஒரிஸ்ஸாவில் உள்ள ஒரு அலுமினியம் ப்ராஜெக்டை தனது துணை நிறுவனமான வேதாந்தா அலுமினா லிமிட்டெட் என்ற கம்பெனிக்கு மாறுதல் செய்கிறது.   இந்த திட்டத்திற்கு சுற்றுச் சூழல் தடையில்லா சான்று வழங்கப் பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றத்தின் நண்பனாக நியமிக்கப் பட்டவர் ஹரீஷ் சால்வே என்ற வழக்கறிஞர். இவரைப் பற்றி பிறகு பார்ப்போம்.

 

உச்ச நீதிமன்றம் 2002ம் ஆண்டில், சுற்றுச் சூழல் தொடர்பான விவகாரங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமிக்ககிறது. Centrally Empowered Committee மத்திய அதிகாரக் குழு. இந்தக் குழுவில் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறையின் செயலர், வனத் துறையில் கூடுதல் இயக்குநர், வால்மீக் தாப்பர் என்ற ரந்தம்போர் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர், மற்றும் ஜிவாரைக்கா என்ற வனத்துறை தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாக போட்டு இந்தக் குழுவை நியமிக்கிறது உச்ச நீதிமன்றம்.

 

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அலுமினா ப்ராஜெக்டை இந்த மத்திய அதிகாரக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று நீதிமன்ற நண்பன் ஹரீஷ் சால்வே கூறுகிறார். அதன் படி, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு வழங்கிய தடையில்லா சான்று சரியா தவறா என்று ஆராய்ந்து எட்டு வாரங்களுக்குள் அறிக்கை வழங்கும் படி, மத்திய அதிகாரக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.   செப்டம்பர் 2005ல், இந்தக் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது.  

 

அந்த அறிக்கையில் மத்திய அதிகாரக் குழு, ஸ்டெர்லைட் ப்ராஜெக்டின் இந்தத் திட்டம், வனம், வன விலங்குகள், நீர்நிலைகள், நீராதாரங்கள், சுற்றுச் சூழல், மற்றும் அரிதிலும் அரிதான மலைவாழ் மக்களையும், அவர்களை வாழ்வையும் சூறையாடி விடும் என்று அறிக்கை அளிக்கிறது. மேலும் அந்த அறிக்கையில், நியாம்கரி மலைகள் போன்ற சுற்றுச் சூழலுக்கு ஆதாரமான இடங்களில் இது போன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கப் படக் கூடாது. தேசிய நலன் மற்றும் பொது நலன் குறித்து எவ்வித அக்கறையும் காட்டாமல் மிக மிக அவசரத் தன்மையோடு, இந்தத் திட்டத்திற்கு தடையில்லா சான்று அளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மிகவும் அலட்சியமான முறையில் இந்தச் சான்று வழங்கப் பட்டுள்ளது.   இத்திட்டத்தைப் பற்றிய ஒரு முழுமையான ஆய்வை நடத்தியிருந்தால், சுற்றுச் சூழலுக்கும், வனத்துக்கும் எத்தகைய தீமையையும் அழிவையும் இத்திட்டம் ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்து, தொடக்கத்திலேயே இத்திட்டத்தை கைவிட்டிருக்க முடியும்.

 

இது குறித்த விரிவான அறிக்கைய பரிசீலித்து, உச்ச நீதிமன்றம், இத்திட்டத்திற்கு 22.09.2004 அன்று வழங்கப் பட்ட தடையில்லா சான்றை ரத்து செய்து, இத்திட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை உடனடியாக தடை செய்யுமாறு மத்திய அதிகாரக் குழு கேட்டுக் கொள்கிறது. மேலும், சுற்றுச் சூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் தடையில்லா சான்று வழங்குவதற்கு முன்பே, இந்த திட்டத்திற்கான பணிகளை வேதாந்தா நிறுவனம் தொடங்கி விட்டது என்றும் அந்தக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

26.10.2007 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்தக் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தின் முன் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கை அப்போது விசாரித்தது, தற்போதைய தலைமை நீதிபதி கபாடியா அடங்கிய டிவிஷன் பென்ச்.   சஞ்சய் பாரிக் என்ற வழக்கறிஞர், இந்திய பழங்குடியின மக்கள் சார்பாக ஆஜராகிறார். ஆனால் மத்தியக் குழுவின் அறிக்கையையோ, சஞ்சய் பாரிக்கின் வாதத்தையோ கேட்க மறுத்த கபாடியா, எடுத்த எடுப்பில், வேதாந்தாவுக்கு எந்த விதிகளின் அடிப்படையில் தடையில்லா சான்றும், சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதியும் வழங்க வேண்டும் என்று விவாதிக்கிறார்.

Kapadia_2

 

விவாதித்து விட்டு, வேதாந்தா நிறுவனத்தின் வழக்கறிஞர் சொல்வதையும், வேதாந்தா நிறுவனத்திற்கு சுரங்கம் தோண்ட அனுமதி கொடுத்த ஒரிஸ்ஸா மாநில அரசின் வழக்கறிஞர் சொல்வதையும் கேட்டு விட்டு, இந்த திட்டத்திற்கு தடையில்லா சான்று வழங்கிய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தையும் கேட்டு விட்டு, மலைவாழ் மக்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தை கேட்க மறுத்து நீதிமன்றத்தின் ஜுனியர் நண்பனாக நியமிக்கப் பட்டிருந்த வழக்கறிஞர் உதய் லலித் என்பவர் வாதத்தையும் கேட்டு விட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

 

23.11.2007 அன்று இவ்வழக்கின் தீர்ப்பை நீதியரசர் கபாடியா வழங்குகிறார்.   அத்தீர்ப்பில், இங்கிலாந்தைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான வேதாந்தா அலுமினா லிமிடெட் என்ற நிறுவனம் நார்வே நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் தொழிலாளர் உரிமை மீறல் ஆகிய குற்றங்களை புரிந்து தடை செய்யப் பட்டு உள்ளதால், வேதாந்தா அலுமினா லிமிடெட்டுக்கு இந்த திட்டத்திற்கான ஒப்புதல் வழங்குவது முறையாக இருக்காது. அதே நேரத்தில் வேதாந்த அலுமினா லிமிடெட்டின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இத்திட்டத்திற்காக விண்ணப்பிப்பதற்கு தடையேதுமில்லை. !!!!!!!

 

ஒரு துணை நிறுவனம் தடை செய்யப் பட்டிருந்தால் அது நீதிமன்றத்தால் தகுதியிழப்பு செய்யப் படும் போது, அதே நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கலாமா ?

 

மத்திய அதிகாரக் குழு தனது அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா ? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே இது குறிப்பிடப் பட்டிருக்கிறது.

 

வேதாந்தா அலுமினா லிமிடேட் நிறுவனம் அனுமதி கேட்கும் திட்டமானது, நியாம்கரி மலைகளில் பாக்சைட் அள்ளுவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.   லாஞ்சிகர் என்ற வன விலங்குகள் வாழும் பகுதியும், யானைகள் பகுதி என்று அறிவிக்கப் பட்ட பகுதியும் இந்த சுரங்கம் தோண்டப் படும் பகுதியில் இருப்பதனாலும், புதிதாக உருவாக்கப் பட இருக்கும் வனவிலங்க சரணாலயம் இதே இடத்தில் வருவதனாலும், தோங்கிரியா, காந்தா போன்ற மலைவாழ் இன மக்கள் இந்த இடத்தில் வசித்து வருவதனாலும் இத்திட்டத்திற்க அனுமதி வழங்கக் கூடாது. மேலும் இரண்டு நதிகளுக்கு நீராதாரமாக இந்த நியாம்கரி மலை இருப்பதனாலும் இந்த அனுமதி வழங்கப் படக் கூடாது என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

 

இந்த அறிக்கையை விவாதித்து விட்டு, நீதிபதி கபாடியா தனது தீர்ப்பில் என்ன எழுதுகிறார் தெரியுமா ? லாஞ்சிகர் தாலுகாவில் கடுமையான வறுமை நிலவுகிறது.   அங்கே சரியான வீடுகள் இல்லை. மருத்துவமனைகள் இல்லை பள்ளிகள் இல்லை. ஜிடிபி வளர்ச்சி 8 முதல் 9 சதவிகிதத்துக்கு அற்புதமாக வளர்ந்துள்ளது. ஆனால் மலைவாழ் மக்கள் வறுமையில் இருக்கிறார்கள். அதனால் வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழல் இரண்டையும் சரி சமமாக பாவித்து இந்நீதிமன்றம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். (நல்ல வேளை கபாடியா நிதி அமைச்சராகவோ, சுற்றுச் சூழல் அமைச்சராகவோ இல்லை)

manmohan-singh-sarosh-homi-kapadia-2010-5-12-11-31-15

 

தங்களுக்கு எது வேண்டும், தங்கள் வாழ்கை முறையை பாதுகாப்பது எது, இந்த சுரங்கத் திட்டம் எப்படி தங்கள் வாழ்க்கையை சூறையாடும் என்று பழங்குடியின மக்கள் தாக்கல் செய்திருந்து மனுவை காது கொடுத்துத் கேட்கத் தயாராக இல்லாத நீதியரசர் கபாடியா, மலைவாழ் மக்களின் ஏழ்மையைப் பற்றி எப்படிப் பேச முடியும் ?   மேலும், இத்தனை ஆண்டுகளாக அந்த மலைகளில் வாழ்ந்து வந்த அந்த மக்கள் அழிந்தா போய் விட்டார்கள் ?   அந்த மக்களின் வறுமை நிலையை அவர்களுக்கு எதிராகவே பயன் படுத்தும் தந்திரத்தை எப்படி மன்னிப்பது ?   வன விலங்குகளையும், சுற்றுச் சூழலையும், நீராதாரங்களையும், மலைவாழ் மக்களையும் அழித்துவிட்டு கட்டப் படும் மருத்தவமனைகளும், பள்ளிக் கூடங்களும் யாருக்காக ? இறந்த மலைவாழ் மக்களின் பிணங்களை பாடம் செய்து வைக்கவா ?

 

இதை விட மோசமான விஷயம் என்னவென்றால், இப்போது விவாதிக்கப் பட்ட வழக்கு 58.943 ஹெக்டேர் வன நிலங்களில் அலுமினா நிறுவனம் பாக்சைட் சுரங்கங்கள் தோண்டுவதற்கான தடையில்லா சான்று பற்றியது. 08.08.20008 நாளிட்ட தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் நியாம்கரி மலைப்பகுதியில் 606.749 ஹெக்டேர் நிலத்தில் பாக்சைட் சுரங்கம் தோண்ட அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, மத்திய அரசு தடையில்லா சான்று வழங்கும் முன்பே வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.

 

நீதிபதிகளுக்கான நடத்தை விதிகளின் படி, ஒரு நீதிபதி ஒரு நிறுவனத்தின் பங்குகளை தான் வைத்திருப்பதைப் பற்றி வெளிப்படையாக சொல்லி, அதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்கா விட்டால், அந்த நீதிபதி, அந்த வழக்கை விசாரிப்பதில் தவறொன்றும் இல்லை என்று உள்ளது. நீதிபதி கபாடியா இந்த வாதத்தையும் எடுத்து வைக்க முடியாது. ஏனென்றால் நீதிபதி கபாடியா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் தான் பங்குகள் வைத்திருப்பதை வெளிப்படையாக அறிவித்தது 26.10.2007ல்.   ஆனால், 2005ம் ஆண்டு முதல் இந்த வழக்கை கபாடியா விசாரித்து வருகிறார். மேலும், கபாடியா ஸ்டெர்லைட் பங்குகளை வைத்திருப்பதைப் பற்றி தானாக முன்வந்து சொல்லவில்லை. வேதாந்தா நிறுவனம் பங்குச் சந்தையில் லிஸ்ட் ஆகவில்லை, ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனம் லிஸ்ட் ஆகி இருக்கிறது, ஏனென்றால், நானே அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கிறேன் என்றுதான் நீதிமன்றத்தில் அறிவித்தார்.  

 

மலைவாழ் மக்களில் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் பாரீக் தான் கபாடியா இந்த வழக்கை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் சஞ்சய் பாரீக்கை பேசவே கூடாது என்றும் மலைவாழ் மக்களின் நலனை நீதிமன்றத்தின் நண்பனாக நியமிக்கப் பட்டுள்ள இரு வழக்கறிஞர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்று கபாடியா உத்தரவிட்ட பிறகு எப்படி அவர் எதிர்ப்பு தெரிவிக்க முடியும் ? மேலும், நீதிமன்றத்தின் நண்பனாக நியமிக்கப் பட்டுள்ள ஹரீஷ் சால்வே வேதாந்தா நிறுவனத்தின் வழக்கறிஞராகவும் இருக்கும் போது அவர் எப்படி எதிர்ப்பு தெரிவிப்பார் ?

 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.என்.வெங்கடாச்சலைய்யா ஒரு தீர்ப்பில், ஒரு நீதிபதி தான் பாரபட்சமானவனா இல்லையா என்பதை, தனது மனதில் தோன்றுவதை வைத்து முடிவு செய்யக் கூடாது, சம்பந்தப் பட்ட கட்சிக்காரரின் மனதில் என்ன தோன்றும் என்பதை வைத்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

 

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சார்பாக அளிக்கப் பட்டிருக்கும் இது போன்றதொரு தீர்ப்பு, பங்குச் சந்தையில், இந்நிறுவனத்தின் பங்குகளை எந்த அளவுக்கு விலை உயர்த்தும் என்பது பங்குச் சந்தையைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும்.

 

தற்போது இந்திய தலைமை நீதிபதி கபாடியா 22 லட்சம் மதிப்பிலான பங்குகளை வைத்திருக்கிறார்.   இதில் ஸ்டெர்லைட் பங்குகளின் அளவு எத்தனை எவ்வளவு என்பது தெரியவில்லை.

 

வேதாந்தா நிறுவன வழக்கில் நீதிமன்றம் ஹரீஷ் சால்வேயை நீதிமன்றத்தின் நண்பனாக நியமித்த பிறகு, வேதாந்தா நிறுவனம் சார்பாக ஒரு வழக்கை நடத்த ஒப்புக் கொள்கிறார் ஹரீஷ் சால்வே.   ஒப்புக் கொண்ட பிறகு, உதய் லலித் என்ற வழக்கறிஞரை வேதாந்தா வழக்கில் நீதிமன்றத்தின் நண்பனாக ஹரீஷ் சால்வேவே நியமிக்கிறார். வேதாந்தா நிறுவனத்துக்கு வழக்கறிஞராக மாறிய விஷயத்தை நீதிமன்றத்துக்கு தெரியாமல் மறைத்து விட்டு, பிரசாந்த் பூஷண் நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக வழக்கு தொடுத்துள்ளார் ஹரீஷ் சால்வே.

 

harish_salve

வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே 

இதே போல் யூனிசான் ஹோட்டல்ஸ் என்ற நிறுவனம் 92 ஹெக்டேர் வன நிலத்தில் வீடு கட்டுவது தொடர்பான வழக்கில் நீதிமன்ற நண்பனாக (Amicus Curiae) இருந்த ஹரீஷ் சால்வே, யூனிசால் ஹோட்டல் சார்பாக வழக்கறிஞராக இருக்க சம்மதித்தார்.

 

இதே போல, உத்தரப் பிரதேசத்தில் நோய்டா மாகாணத்தில் சிலைகள் கட்டுவது தொடர்பான வழக்கிலும் நீதிமன்றத்தின் நண்பனாக இருந்த ஹரீஷ் சால்வே, மற்றொரு வழக்கில், உத்தரப் பிரதேச அரசு சார்பாக ஆஜராகி வாதாடினார்.

 

இவ்வாறு ஒரு வழக்கில் நீதிமன்றத்தின் நண்பனாக இருந்து கொண்டு, அந்த வழக்கில் சம்பந்தப் பட்ட கட்சிக் காரருக்கு மற்றொரு நேர்வில் ஆஜராவது என்பது, வழக்கறிஞர்கள் நடத்தைக்கு எதிரானதாகும்.

 

இவரைப் போன்ற வழக்கறிஞர்கள் தான், நீதிபதிகளுக்கு இடைத் தரகர்களாக இருந்து செயல்படுகிறார்கள். இது போன்ற வழக்கறிஞர்களைத் தான் நீதிபதிகள் நம்புகிறார்கள்.

 

இந்த உச்ச நீதிமன்ற நீதிபதி கபாடியா ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்திருக்கக் கூடாது என்று பிரசாந்த் பூஷண், டெஹல்கா பத்திரிக்கையில் கொடுத்த பேட்டிக்காகத் தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.

 

இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு மனு தாக்கல் செய்துள்ள பிரசாந்த் பூஷணின் தந்தை சாந்தி பூஷண், இந்திய நீதித்துறையில் உள்ள தவறுகளை திருத்த முனைவதற்காக தனக்கு சிறைத் தண்டனை கிடைக்கும் என்றால், தான் மகிழ்ச்சியோடு சிறை செல்லத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

 

வெளிப்படையாக விவாதிக்கப் படத் தொடங்கியிருக்கும், நீதித்துறையின் ஊழல்கள், சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஒரு திருப்பு முனை என்றே சவுக்கு பார்க்கிறது.

 

Comments  

 
+3 #50 kuchi 2011-01-09 05:23
[quote name="பொதுஜனம்"எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்து வழங்கப்பட்ட
எதிர்மறைத் தீர்ப்பில் மூன்று உயிர்கள் பலியாக வேண்டுமா?
சிந்தியுங்கள் என் தமிழ் மக்களே! சிந்தியுங்கள்
நாளை நமக்கும் இதுபோல் தீர்ப்பு வரலாம்

யோவ் நீ எழுதிருப்பதை பார்த்தால் பஸ் எரிப்பில் உனக்கும் பங்கு இருக்கு போல ? பஸ் எரித்த பொறுக்கிகளின் நோக்கம் பஸ் மற்றும் தான் என்றால் ஏன் மாணவ மாணவிகளை இறங்க சொல்லி பிறகு பஸ்சை எரித்திருக்கலாம ே? இவங்களது நோக்கம் சிலரை கொன்று தங்கள் கிரிமினல் தலைவியிடம் நல்ல பெயர் வாங்குவதுதான், ஆகவே இவங்களை தூக்கில் என்ன நடுரோட்டில் அம்மணமாக நிறுத்தி கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் இவர்கலுக்கு வக்காலத்து வாங்கும் உன்னையும் சேர்த்து !! உளறுது பார் பேமானி !!!
Quote
 
 
+1 #49 E.KALAIKOVAN 2010-12-16 21:30
ivanugala kaari thuppa yen oruthan yechil pathathu poola
Quote
 
 
0 #48 PURATCHI POOBALAM 2010-09-27 14:34
YOU FRAUDS AND CHEATS YOU DO EVERY STORY WITH THE SUPPORT OF TAMILNADU1S BLACKMAIL JOURNALISTS WHO HELPS IN THE NAME OF PRESSCLUB YOUR SELF APPEARED IN THE COURT IN SUPPORT OF THIS BLACKMAIL JOURNOS APPURAM ENNA MAOISM MAKKAL URIMAI ELLAME DUBACKOORISM THAN VEERANA IRUNDHA INDHA COMMENTYI SITELA PODU
Quote
 
 
+3 #47 பொதுஜனம் 2010-09-27 01:29
நாடாளுமன்றத்தை தகர்க்க வந்த
நாசகார சக்திகளுக்கு ராஜ உபசாரம்
மும்பையை சிதறடித்த, மூர்க்க
குணம் கொண்டவனுக்கு ராஜ உபசாரம்

விஷ வாயு மூலம் போபாலில் கூட்டமாய்
கொன்றவனுக்கு ராஜ உபசாரம்
கோவை மாநகரில் கொத்து கொத்தாய்
கொன்றவருக்கு ராஜ உபசாரம்

இந்திரா மறைந்தவுடன், சீக்கியரை
கூட்டமாய் கொன்றவனுக்கு அமைச்சர் பதவி
இலங்கைத்தீவில் தமிழர்களை கொடூரமாய்
கொன்றவனுக்கு ராஜ உபசாரம்

தலித் இளைஞரை சென்னையில் கொன்ற
டக்ளசுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
தமிழக முன்னாள் அமைச்சரை
கொன்றவருக்கு மத்திய மந்திரி பதவி

சொல்லிக்கொண்டே போகலாம் இதுபோல்
பல பல நீதி தவறிய உதாரணங்களை
திட்டமிட்டு மக்களை கொன்றவர்களை
திட்டமிட்டே நீதிபதிகள் காப்பாற்றினர்
Quote
 
 
-2 #46 பொதுஜனம் 2010-09-27 01:28
மனசாட்சி இல்லாத நீதிபதிகளை கேட்டால்
"போதிய சாட்சி" இல்லை என்றே கூறுவார்கள்
கொடுமை யாதெனில், கோவை பஸ் எரிப்பு
குற்றவாளிகளுக்க ு தூக்கு விதித்திருப்பது தான்

மாணவிகளின் இறப்புக்கு காரணமானவர்கள்
தண்டிக்கப்பட வேண்டியவர்கள்! சந்தேகம் இல்லை.
பேருந்தை கொளுத்தியது யாரையும் கொல்வதற்கு அல்ல
தலைமையின் "கைதுக்கு" தங்கள் எதிர்ப்பை காட்டவே

பேருந்தை கொளுத்தியதற்கு தூக்கு என்றால்
இந்திய மக்கள்தொகையில் கணிசமான அளவு
குறைந்திருக்கும ், பல அரசியல் தலைவர்களும்,
பல பேருந்துகளும் கூட குறைந்திருக்கும

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பதினாறில் எட்டுபேர்
கறைபடிந்தவர்கள் என ஒரு முன்னாள் நீதிபதியே
கூறும் இந்நாளில், பேருந்தை எரித்தவர்களுக்க ு
தூக்கு விதித்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளதோ?

எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்து வழங்கப்பட்ட
எதிர்மறைத் தீர்ப்பில் மூன்று உயிர்கள் பலியாக வேண்டுமா?
சிந்தியுங்கள் என் தமிழ் மக்களே! சிந்தியுங்கள்
நாளை நமக்கும் இதுபோல் தீர்ப்பு வரலாம்
Quote
 
 
+4 #45 suresh G 2010-09-26 07:57
ஊழல் செய்து வெற்றி பெற்ற உள்துறை அமைச்சர், தேர்தலில் போட்டியிடாமல் பதவிக்கு வந்த பிரதமர், இவர்களது ஆட்சியில் சட்டமும், நீதிபதிகளும் இப்படித்தான் இருப்பார்கள்.
Quote
 
 
0 #44 Pradeep_P 2010-09-25 22:37
நீதிக்கு கூட விலை
Quote
 
 
-2 #43 Lakshmidharan 2010-09-25 20:45
vELAN AVARGALUKKU
GOTSE ENDHI NATTIN OPPATRA THALAIVARAI YE KONDRAN THAN THUPPAKKIYAL MUTTALTHANAMAGA . EPPODHU AVAN ERUNDHIRUNDHAL ENDA OOZHAL PERVAZHIGALAI
THEERTHUKATTIER UPPAN PORUKKAMAL MELUM GANDHI YAI KONDRATHUKKU VARUNDHIERUPPAN .
GOTSE MADHIRI AAL VENDUM ENRU EDUTHTHUKOLLUNG AL.
Quote
 
 
0 #42 DEVARAJ.D 2010-09-25 16:25
நீதித்துறையில் ௭௦ சதவிதம் நீதிபதிகள் ஊழல் கரை படிந்தவர்களே இவர்களின் யோக்கியதை அனைத்து வழக்கறிஞர்களுக் கும் தெரியும். இவர்களுக்கு தரகர்களாக இருப்பவர்கள் நம்முடிய சில வழக்கறிஞர்களே இவர்கள் ஊழலுக்கு உள்ள ஒரே பாதுகாப்பு நீதிமன்ற அவமதிப்பு தான் அதுவும் நீதிமன்ற ஆணையை மதிக்காத அரசின் மீது சிவில் அவமதிப்பு தான் பாயும் ஆனால் பத்திரிக்கைகளின ் மீது கிரிமினல் அவமதிப்பு வைத்தே இவர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் நமது சென்னை நீதிமன்ற நீதிபதிகள் யார் யார் எல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது சவுக்குக்கு தெரியும் அவர்களின் லிஸ்டை தைரியமாக வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழிக்க சவுக்கால் தான் முடியும்
Quote
 
 
0 #41 sureshkv 2010-09-25 11:43
yes . i agree with this friend. due to caste politics one straight forward person is removed from the director post.






Quoting Saran:
Please investigate the below please;
குணா - Chennai,இந்தியா 2010-09-24 09:07:43 IST
ஒரு திறமைமிக்க நேர்மையான இயக்குனரை திருச்சி தேசிய தொழிற்நுட்ப கழகம் இழந்து விட்டது. ஊழல் செய்யாமல் இருந்ததிற்காக கிடைத்த பரிசு . வாழ்க இந்திய அரசு !! வாழ்க தமிழக அரசு ! திரு சிதம்பரத்தின் வெற்றிடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது ... பதிவர்களே NITT வாருங்கள் ... கள ஆய்வு செய்துவிட்டு அரசாங்கத்திற்கு தெரிய வையுங்கள்
Quote
 
 
0 #40 Akm, Vetriyur 2010-09-25 11:41
I agree with Rukku coments...
Quote
 
 
0 #39 asriram 2010-09-25 11:20
Very good and very useful site "SAVUKKU". I read daily without fail. I wish to state that " You do'nt targeted one group of IPS officers only.
Many of the IAS & DrO Officers done same corruptions also.
Quote
 
 
+1 #38 Saran 2010-09-25 11:13
Please investigate the below please;
குணா - Chennai,இந்தியா 2010-09-24 09:07:43 IST
ஒரு திறமைமிக்க நேர்மையான இயக்குனரை திருச்சி தேசிய தொழிற்நுட்ப கழகம் இழந்து விட்டது. ஊழல் செய்யாமல் இருந்ததிற்காக கிடைத்த பரிசு . வாழ்க இந்திய அரசு !! வாழ்க தமிழக அரசு ! திரு சிதம்பரத்தின் வெற்றிடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது ... பதிவர்களே NITT வாருங்கள் ... கள ஆய்வு செய்துவிட்டு அரசாங்கத்திற்கு தெரிய வையுங்கள்
Quote
 
 
0 #37 meyporulan 2010-09-25 06:55
the total system is corrupt. politicians,law makers, police ,officials,educ ationlists, all are corrupt but what can we do as a simple citizen?except reading and getting angry. pl tell the solutions and initiate it sir, LETS GIVE BETTER INDIA to our childrens
Quote
 
 
0 #36 மனிதன் 2010-09-25 00:30
அனைவரும் படிக்க வேண்டிய அயோத்தி வரலாறு
http://juniorreporter.blogspot.com/2010/09/blog-post_577.html
Quote
 
 
0 #35 ananchalight 2010-09-24 22:39
really superb.some readers suspect savukku that savukku
only comment against karunanidhi and jaffer. but savukku
reaches all over india.
Quote
 
 
0 #34 rukku 2010-09-24 21:48
Quoting தமிழன்:
//யாரை கடுமையாக திட்டினால் அவாள்
எல்லாம் ஒன்று கூடி ஹிட்டுகள் கொடுப்பர் என்று ஒண்ணாம் க்லாஸ் குழந்தையும் கூறும்.//

இங்கேயுமாடா !!!!!!!!!!!

திருக்குவளை தீயசக்திக்குக் நீதிக்குஞ்சுகளு க்கும் தெரியும்,
Quote
 
 
0 #33 தமிழன் 2010-09-24 21:25
//யாரை கடுமையாக திட்டினால் அவாள்
எல்லாம் ஒன்று கூடி ஹிட்டுகள் கொடுப்பர் என்று ஒண்ணாம் க்லாஸ் குழந்தையும் கூறும்.//

இங்கேயுமாடா !!!!!!!!!!!
Quote
 
 
-1 #32 ஆதித்தமிழன் 2010-09-24 21:09
இன்னொரு கொட்ச்சே தேவை என ஒருவன் கேட்பதில் இருந்தே பார்ப்பான் இது தனக்கான
இடம் என தெளிவாக முடிவு செய்திருப்பது புரிகிறது .யாரை கடுமையாக திட்டினால் அவாள்
எல்லாம் ஒன்று கூடி ஹிட்டுகள் கொடுப்பர் என்று ஒண்ணாம் க்லாஸ் குழந்தையும் கூறும்.
நீ, ஞாநி ,சோ,கார்ட்டூன் மதி ஆகியோர் அடிக்கடி பேசுவதை யாம் அறிவோம்.
Quote
 
 
0 #31 rukku 2010-09-24 20:01
இங்கு வெளியிடப்பட்டிர ுக்கும் பின்னூட்டங்களின ் கருத்துப்படி மக்கள் விவரமாகத்தான் இருக்கிறார்களென ்பதை காட்டினாலும். அவற்றை திருத்துவதற்கான வழிமுறையும் அந்த இடத்திற்கு சென்றடைவதற்கான தூரம் எவ்வளவு என்பதையும் இலகுவாக பாமர மக்களால் அறிந்துகொள்ள முடிவதில்லை, எனவே இந்தியத்துணைக்க ண்டத்தில் அரசியல் வாதி ஒருவன் வைப்பதுதான் சட்டமென்றாகிவிட ்டது. திருத்தியமைக்கு ம் நோக்கோடு நீதிமன்றப்படி ஏறினால் அங்கேயும் அரசியல்வாதியின் கைத்தடி உச்ச நீதிபதியாக இருக்கிறான். எனவே இப்படி ஏதாவது பின்னூட்டம் எழுதி எழுத்தில் திருப்திப்பட்டு க்கொள்ள வேண்டியதுதான், திருத்தவேண்டுமெ ன்று திடமாக ந்ம்பினால் கோசமோ கூப்பாடோ போட்டுக்கொண்டிர ுக்காமல் உடனடியாக மூன்றுபேருக்கு சங்கூதிவிட்டால் பிரச்சினை தீர்வுக்கு வந்துவிடும். அவை திருக்குவளைக்கு ம் பொதுவானதே,,,,,, ,,,,,,,,,,,,,,, ,
Quote
 
 
0 #30 அப்பாவி 2010-09-24 18:35
வேலியே பயிரை மேய்கிறது....சட்டத்தை காப்பாற்றி மதிக்க வேண்டியவர்களே சட்டத்தை மதிப்பது இல்லை.
Quote
 
 
+1 #29 VIJAY_USA 2010-09-24 18:02
Quoting அழகி:
(கருணாநிதி குடும்பத்தினர் எப்படி இதை விட்டு வைத்தனர் என்பது ஆச்சர்யம்).
கட்டுரை சிறப்புதான்.
ஆனாலும் கட்டுரைக்கு சற்றும் தேவையற்ற மேற்கண்ட வரி சவுக்கின் திமிரையும், கொழுப்பையும் காட்டுகிறது.

- Azhaghi, then what your comment shows? Savukku is not writing something bad about Buddha! If you close your eyes and want to call it dark, go to hell with your stupidity!
Quote
 
 
0 #28 தமிழன் 2010-09-24 16:08
//தமிழ் கூறும் நல்லுலகில், ‘குடிமக்களின்’ எண்ணிக்கை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே இருக்கிறது. 2008-ம் ஆண்டு, உள்துறைச் செயலராக இருந்த மாலதி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார்.



‘‘தமிழ்நாட்டில் மது வகைகளை குடிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதை தேவை 38 லட்சம் பெட்டிகள் என்றாலும், 2012ம் ஆண்டில் 50 லட்சம் பெட்டிகள் தேவைப்படும். தற்போது மதுவகைகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு , மேலும் அதிகமாக தயாரிக்க ஆர்டர் கொடுப்பதற்கு பதிலாக, புதிய நிறுவனங்கள் தொடங்க உரிமம் கொடுப்பது சாலச்சிறந்தது’’ - இதுதான் அன்றைய உள்துறைச் செயலர் மாலதியின் அறிக்கை.//

இந்த அரசாங்கம் தான் மக்களைக் கெடுத்து குடிகாரர்களாக மாற்றுகிறது..
Quote
 
 
+1 #27 சவுக்கின் விசிறி 2010-09-24 14:58
கட்டுரையை படித்த நண்பர் ஒருவர், மக்கள் தான் பாவம்... என்று எழுதி இருக்கிறார். மக்கள் எப்படி பாவமாக முடியும். மக்களிடம் இருந்து யாரும் தப்பவே முடியாது. தப்பு செய்யும் நபரை கண்டித்து, எந்த மக்கள் கூட்டம் ரோட்டுக்கு வந்து
ஆர்ப்பரித்திருக ்கிறதா. அப்படி ஒரு முறை நடக்கட்டுமே பார்க்கலாம். எவனாவது தப்பு செய்வானா. இந்த மக்களுக்கு என்ன கொற்றை? ஒரு ரூபாய் அரிசி... இலவச டிவி.. இலவச அடுப்பு... இலவச போன்... தேர்தலுக்கு ஓட்டு போட துட்டு... தன்னிடம் இருக்கும் ஆயுதம் எது என்பதை தெரிந்துக் கொள்ளாமல், துட்டு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் ஜந்துக்களாக மக்கள் இருந்தால், அவர்களை பாவம் என்று சொல்லவேக் கூடாது. ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று அரசியல்வாதிகளிட ம் கொள்ளையடிக்கும் போது, அதே மக்கள் பெயரைச் செல்ல்லி அரசியல்வாதி கொள்ளைடிக்கிறான ். எப்போது, கொடுக்கும் துட்டை தூக்கி, கொடுப்பவன் முகத்தில் தூக்கி அடிக்கிறானோ... அன்று தான் மக்கள் உண்மையான மக்கள்... ஓட்டுக்கு துட்டு வாங்கினால், அவன் மக்களில் ஒருவன் கிடையாது. மாக்கள், ஜந்துக்கள் என்றே கூற வேண்டும்.
Quote
 
 
0 #26 Anony 2010-09-24 14:52
great
Quote
 
 
0 #25 Srini 2010-09-24 14:49
http://www.dinaithal.com/component/content/article/136-like-in-read/16194--qq--
Quote
 
 
0 #24 Velan 2010-09-24 14:06
Quoting Lakshmidharan:
we want another gotse to shoot all corrupt judges, politicians and govt officials in this country.... when....
it is burning in every true citizen...

Do you mean Gandhi a corrupt, as he was killed by Godse. While Gandhi was a respectable leader, father of nation for many, despite criticisms of many his credibility and introspection was reputed world over. Whereas the killer was a Sanathani, religious dog. How come a Godse would kill corrupt ones. your observation was deceitful. We may say that we need another Bagath Singh to do that.
Quote
 
 
0 #23 புலி 2010-09-24 13:58
(கருணாநிதி குடும்பத்தினர் எப்படி இதை விட்டு வைத்தனர் என்பது ஆச்சர்யம்)... தவிர்க்கலாம் நண்பரே. ஏன் என்றால் நமக்கு யார் மீதும் விருப்புவெறுப்ப ு இல்லை... தவறு செயுமிடத்தில் நாம் விரோதிகள் ..மற்றபடி எல்லோரும் நல்லவர்கள் ..
Quote
 
 
+1 #22 M.S.Vasan 2010-09-24 13:32
இந்த‌ கறுப்பு ஆடுக‌ளில் மத்திய‌ ம‌ந்திரிக‌ளும் அட‌க்க‌ம். ப.சி, வேதாந்தாவின் டைர‌க்ட‌ராய் இருந்தார், 2003ல் ஸ்டெர்லைட்டுக்க ாக மும்பை உய‌ர்நீதி ம‌ன்ற‌த்தில் வாதாடினார் என‌ச் செய்திக‌ள் உண்டு. ஜ‌ன‌நாய‌க‌த்தின ் நான்கு தூண்க‌ளும், பேராசையெனும் ல‌ஞ்ச‌க் க‌ரையான்க‌ளின் புற்றுக்க‌ளால் அறிக்க‌ப்ப‌ட்டு , ஆட்ட‌ம் க‌ண்டுள்ள‌து.
Quote
 
 
0 #21 paramu 2010-09-24 13:28
வணக்கம் சவுக்கு, இடையில் இந்த கம்பெனிக்கும் நம்ம """ப சி """ இக்கும் எதோ ஒரு நெருக்கம் இருக்கும்போல் ஆங்கில பத்திரிக்கையில வந்த தாமே ,, உண்மையா???
Quote
 
 
0 #20 kannan 2010-09-24 13:20
tholilathibarka l matrum arasiyalvaathik alin kaikkoolikalaga ethuvarai arasu athikarikal mattum erundhathu erkanave therindhathu eppothu neethibathikalu ma ?

entha polapirku than veettu female kali koottikoduppath e male

india 3000 aandukalanalum munnerathu
pattalum keel makkal keel makkale.....

gandhi desam
currency(currup tion) desame......
Quote
 
 
0 #19 P.Maheswaran 2010-09-24 13:03
very shame......
Quote
 
 
0 #18 kamal 2010-09-24 12:42
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் , தவறான கறை படிந்த நீதி பதிகளின்
திர்புகளினால் கேவலபடுகிறது, திருடனிடம் லஞ்சம் வாங்கி தீர்ப்பு எழுதும் நீதிபதிகள் சட்டத்தினை விபச்சாரம் செய்யும் மாமாக்கள் .
Quote
 
 
-5 #17 அழகி 2010-09-24 12:22
(கருணாநிதி குடும்பத்தினர் எப்படி இதை விட்டு வைத்தனர் என்பது ஆச்சர்யம்).
கட்டுரை சிறப்புதான்.
ஆனாலும் கட்டுரைக்கு சற்றும் தேவையற்ற மேற்கண்ட வரி சவுக்கின் திமிரையும், கொழுப்பையும் காட்டுகிறது.
Quote
 
 
0 #16 Lakshmidharan 2010-09-24 12:10
we want another gotse to shoot all corrupt judges, politicians and govt officials in this country.... when....
it is burning in every true citizen...
Quote
 
 
0 #15 Lakshmidharan 2010-09-24 12:06
where india going........
Quote
 
 
+3 #14 naakamukka 2010-09-24 11:25
இந்த sterlite தூத்துகுடியில் ஒரு பெரிய ஃப்ராட் பண்ணி அதாவது கோப்பெர் எடுக்கிறேன் என்று license வாங்கி bauxite plattinum மற்றும் white iron எல்லாம் தோண்டி அரசுக்கு தெரிவிக்காமல் கடத்தி மாட்டி கொண்டான் மேலு வரி ஏய்ப்பிலும் சிக்கி ஒரு நிர்வாகி கைதும் செய்யப்பட்டான் .இது போன்ற குற்றங்கள் அமெரிக்காவில் செய்திருந்தால் 240 வருஷம் உள்ளே இருக்கணும் போலீஸ் மற்றும் நீதி துறை ஊழல்கள் மிக மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
Quote
 
 
0 #13 srirangamsekar 2010-09-24 11:14
Arasan andru kolvan THEIVAM NINTRU KOLLUM
Quote
 
 
0 #12 rukku 2010-09-24 10:48
ஏற்கெனவே நான் குறிப்பிட்டது போல கனகவேல் நான்கு ஐந்து நீதிபத்திரிகளுக ்கு பேனா நிப்பை முறித்து காப்புக்கட்டிவி ட்டால் எல்லாம் சரியாகிப்போகும் , தாமதிக்கக்கூடாத ு, சங்கு ஊதுவதுதான் சிறப்பான வழி,
Quote
 
 
+3 #11 அனானி 2010-09-24 08:19
சவுக்கு, நீதிபதிகள் தங்களை கடவுளின் மறு அவதாரம் என்று கருதிக் கொள்வதால் வரும் பிரச்சினை இது.

நீதிபதிகள் குற்றவாளிகளானால ் அவர்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்படல் வேண்டும்.
அதற்குரிய ஏற்பாடுகளை சமூக பிரக்ஞை உள்ளவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதற்கு ஒரு வரையறை வைத்தல் வேண்டும்.

நீதிபதிகள் சட்டத்திற்குட்ப ட்டு நடக்க வேண்டுமே தவிர, தர்மம், நியாயம் பற்றியெல்லாம் பேசுவது, ஆலமரத்து பஞ்சாயத்து போன்றதாகும். இந்திய நீதித்துறையில் நடக்கும் பல கூத்துகள் இனி வெளியில் வரக்கூடும்.
Quote
 
 
0 #10 Ramadurai 2010-09-24 07:55
Leaving aside the corruption angle, the premises that adivasi's own all the hills is a non sense. Adi vasi's own only their home not the hills.

Just a foolish dramatization of an issue.
Quote
 
 
+2 #9 Prakash 2010-09-24 07:13
அன்பு ஐயா நல்ல விவாதம், இப்பொழுதுதெல்லா ம் காலை எழுந்தால் தினசரி படிப்பதை சவுக்கில் ஏதாவது புதிய விவாதம் இருக்கிறதா என்று பார்க்கும் அளவிற்கு உங்கள் எழுது எங்களை கட்டி போட்டுவிட்டது.
தொடரட்டும் உங்கள் பணி.
Quote
 
 
0 #8 Robin 2010-09-24 06:39
First time you have commented on an issue of National importance and moved your canvas to a national level.
No other national magazine has dared to write at this level.

Savukku- It is just a matter of time before you are known nationally
Quote
 
 
+5 #7 அண்ணன் 2010-09-24 06:27
மக்களாட்சி என்ற மாபெரும் தத்துவத்தை இலவசங்கள் என்ற மாயையை கொண்டு கட்டிவைத்துவிட் டு மக்களை தனது சர்வாதிகார ஆட்சியில் கொடுமை படுத்தும் திருக்குவளை தீயசக்தியை எதிர்ப்பவர்கள் இன்று வெகு சிலரே. அந்தவகையில் தோழர் சவுக்கு அவர்களை பாராட்டாவிட்டால ும் "தேவர் மகன்" என்கிற பெயரில் இங்கு இகழ்ந்து எழுதியவரை "தேவர் பேரவை" கண்டிக்கிறது. தயவுசெய்து யாரையும் புண்படுத்தும் செயலுக்கு "தேவர்" என்கிற பெயரைப் பயன்படுத்தாதீர் கள். தோழர் சவுக்கு ஜாதி, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரை தயவுசெய்து யாரும் ஒரு குறிப்பிட்ட "ஜாதி அடைமொழி" க்குள் அடைத்து விடாதீர்கள். தோழர் சவுக்கு அவர்களின் பனி சிறக்க வாழ்த்துகள். இப்படிக்கு "தேவர் பேரவை" www .thevar.info
Quote
 
 
0 #6 மானஸ்தன் 2010-09-24 03:54
சவுக்கு அவர்களே. சில மதங்களுக்கு முன்பு ஒரு காணொளி கண்டேன். அதில் நெல் குறிபிட்டுள்ள மலை வாழ் மக்களை பற்றியும், அந்த வெளிநாட்டு நிறுவனம் பற்றியும் அருமையாக படம் பிடித்து கட்டியுள்ளனர். தமிழனாக இருப்பதனாலோ என்னவோ நமக்கு அவர்களது சுயஉரிமை நன்றாகவே விளங்குகிறது.
http://www.youtube.com/watch?v=R4tuTFZ3wXQ
Quote
 
 
-17 #5 thevarmagan 2010-09-24 02:19
Dei dubukku, savukku. You are a media run by parpan, for parpan ...and to all parpan.

your only idea is just to abuse karunanidhi. all these readers of savukku are real fools. they do not know the real face of savukku.
Quote
 
 
+1 #4 தமிழன்பன் 2010-09-24 00:39
முதலில் ஒரு வழக்கறிஞர், நீதிபதியாவதற்கு உள்ள நடைமுறை வழிமுறைகள் என்ன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவு ம்.

பின்னர் அவர்கள் புரிந்து கொள்வர். இதில் உள்ள ஊழல்களை.
Quote
 
 
+2 #3 கடலூர் எழில் 2010-09-23 23:59
அடப்பாவி நீதிபதிகளா உங்கள இன்னுமா இந்த நாடு நம்பிக்கிட்டிரு க்கு !!!!!!! ஒருத்தன் கூட நல்லவனே இல்லையா . மக்கள் தான் பாவம். சட்டம் தன் கடமைய செய்யும்னு தான இந்த பாழாப்போன பொது மக்கள் நம்பிக்கிட்டிரு க்காங்க!!! ஊழல் இல்லாத துறையே இந்தியாவில் கிடையாது என்பதை வெட்கத்தோடு ஒத்துக்கொண்டுதா ன் ஆகவேண்டும்.....
Quote
 
 
0 #2 DIRAVIDAN 2010-09-23 23:56
ஒரு தரப்பு தனக்கு நல்ல நியாயத்தை 'வான்கி' உள்ளது.. இந்தியால இதெல்லாம் சாதாரனமப்பா.
(sorry for the spelling mistake, tried to write in Tamil but getting typing probs :sad: ).
Quote
 
 
+3 #1 பத்திரிக்கையாளன் 2010-09-23 23:33
சவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளை பற்றி விலாசி தள்ளிட்டீங்க. அதேபோல் தமிழக நீதிபதிகள் ஊழல் பேர் வழிகளை கண்டறிந்து
வழக்கு தொடர்ந்தால் நன்றாக இருக்கும். செய்யுமா மனித உரிமை கழகம்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 102 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4267
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57004
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month175812
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391540